என் மலர்
நீங்கள் தேடியது "heavy rainfall"
- புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழைக்கு வாய்ப்பு.
- மாணவர்கள் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், நேற்று முதலே கனமழை பெய்து வருவதை அடுத்து மாணவர்கள் பாதுகாப்பு கருதி தூத்துக்குடி, விழுப்புரம், புதுச்சேரி, தஞ்சாவூர், திருநெல்வேலி, தென்காசி, திருச்சி மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல் திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், கரூர், தேனி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சேலம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- காற்றழுத்த தாழ்வு பகுதியால் நாளை மறுநாள் மழை தீவிரமாகும்.
- தமிழக கடலோரத்தை நோக்கி வேகமாக நகர்வதாக வானிலை ஆய்வாளர்கள் தகவல்.
தென்கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. இதன் தாக்கத்தால் அங்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
இது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய உள்ளது.
நாளை அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வடமேற்கில் நகரும். எதிர்பார்த்ததை போல் அது தமிழக கடலோரத்தை நோக்கி வேகமாக நகர்வதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
11-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் மழை தீவிரமாகும்.
10-ந்தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், வருகிற 11-ந்தேதி மேற்கண்ட மாவட்டங்கள் (ராமநாதபுரம் நீங்கலாக) மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வருகிற 12-ந்தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
வருகிற 13-ந்தேதி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழக மீனவர்கள் வருகிற 11-ந்தேதி வரை ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
- இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மயிலாடுதுறை, நாகை, கடலூர் மற்றும் காரைக்காலிலும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, நாகை, கடலூர் மற்றும் காரைக்காலிலும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
- இன்று கன முதல் மிக கனமழை பெய்யும்.
- தமிழக அரசு முன்எச்சரிக்கை பணிகளை மேற்கொண்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும்.
இதன் காரணமாக அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறும் போது, "விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யலாம்."
"சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (செவ்வாய்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்."
"வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்."
"நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், சில நேரங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது," என்று தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்து இருப்பதை தொடர்ந்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கிவிடுட்டுள்ளது.
- தென் ஆப்பிரிக்காவை 7 ரன்களில் வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
- கனமழை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பார்படோஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா அணி தென் ஆப்பிரிக்காவை 7 ரன்களில் வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
உலகக் கோப்பை முடிந்து பார்படோஸில் இருந்து இன்றிரவு இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், பார்படோஸில் கடும் சூறாவளி மற்றும் கனமழை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பார்படோஸ் விமான நிலையம் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
விமான நிலையம் மூடப்பட்டதால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக இந்தியா திரும்ப ஆயத்தமான இந்திய அணி வீரர்கள், ஊடகவியாலாளர்கள் குழு பார்படோஸில் சிக்கியுள்ளது.
- நேற்று காலை முதல் அதிக வெப்பம் காணப்பட்ட நிலையில் மாலை மழை பெய்தது.
- குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவாரூர்:
தமிழகத்தில் திருவாரூர் கோயமுத்தூர் நீலகிரி தஞ்சாவூர் மயிலாடுதுறை புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக திருவாரூரில் கடுமையான வெப்பம் நிலவி வந்து நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.
மேலும் திருவாரூரில் நேற்று காலை முதல் அதிக வெப்பம் காணப்பட்ட நிலையில் மாலை நேரத்தில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து குளிர் காற்று வீசத் தொடங்கியது அதனைத் தொடர்ந்து திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான வண்டாம்பாளை கொடிக்கால்பாளையம் காட்டூர் பவித்ரமாணிக்கம், சேந்தமங்கலம் விளமல், நன்னிலம் கங்களாஞ்சேரி ஆண்டிப்பந்தல் ஸ்ரீவாஞ்சியம், மாப்பி ள்ளைக்குப்பம் போன்ற பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்தி ற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.
குறிப்பாக குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகி வருவதாக வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் தற்போது பெய்து வரும் இந்த கனமழை நெற்பயிர்களுக்கு ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மேலும் குளிச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துளள்ளனர்.
- கனமழை கடந்த சில நாட்களாக நின்று விட்டதால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
- கடலுக்கு செல்லாததால் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
விழுப்புரம்:
மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்து வந்தது. இந்த கனமழையால் ஒரு வாரத்திற்கு மேலாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். இதுபோல் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவில் பாதிக்க ப்பட்டது. இப்பகுதியில் பெய்த கனமழை கடந்த சில நாட்களாக நின்று விட்டதால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று காலை முதல் பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் அலைகளில் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இப்பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதனால் சிறிய வகை மீன்களின் விலையும் அதிகரித்து உள்ளது என்று பொதுமக்கள் கூறுகி ன்றனர்.
- ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து.
- நள்ளிரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.
ஈரோடு:
ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து. நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு நகரில் பகுதியில் சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நகரின் முக்கியப் பகுதிகளான பிரப் ரோடு, ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, காளைமாடு சிலை, முனிசிபல் காலனி, வீரப்பன் சத்திரம், குமலன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மாநகரில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த குழிகளில் மழை நீர் தேங்கி நின்றது.இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஈரோடு வீரப்பன் சத்திரம், ராஜாஜி வீதியில் பெய்த மழை காரணமாக மழை நீர், கழிவு நீருடன் சேர்ந்து தெருக்களில் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்த பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர் வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல, ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளான திண்டல், நசியனூர், வாய்க்கால்மேடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, பவானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.
தொடர்ந்து இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு –-17, பெருந்துறை – 29, மொடக்குறிச்சி –-20, பவானி –-6, கவுந்தப்பாடி – 3.4, மாவட்டத்தின் மொத்த மழையளவு 75.4 மி.மீ.
- அடுத்த 24 மணி நேரத்தில் அஜ்மீர், பரத்பூர், ஜெய்ப்பூர், கோட்டா மற்றும் உதய்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.
- அஜ்மீரில் உள்ள தொலைதூர பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிப்பு.
ஜெய்ப்பூர்:
கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானின் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த நிலையதில், கடந்த 24 மணி நேரத்தில் நாகௌர் மாவட்டத்தில் உள்ள மக்ரானா பகுதியில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து ரத்தன்கர் (சுரு) 8 செ.மீ மழையும், ஹனுமன்கரில் சங்கரியா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.
பனேரா (பில்வாரா), கெர்வாடா (உதைபூர்), பதம்பூர், சதுல்ஷாஹர் (இரண்டும் கங்காநகரில்), மற்றும் நவா (நாகூர்) தலா 6 செ.மீ., நரைனா (ஜெய்ப்பூர்), பசேரி (தோல்பூர்), சஜ்ஜன்கர் (பன்ஸ்வாரா), தோல்பூரில் 5 செ.மீ., சோட்டிசாத்ரி (பிரதாப்கர்), அக்லேரா, அஸ்னாவர் (இரண்டும் ஜாலவாரில்), கர்ஹி (பன்ஸ்வாரா), துங்லா (சித்தோர்கர்), மற்றும் பாரி (தோல்பூர்) ஆகியவை பதிவாகியுள்ளன. 4 செ.மீ மற்றும் பல இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் 4 செ.மீட்டருக்கும் குறைவான மழை பெய்துள்ளது.
மறுபுறம், ஸ்ரீகங்காநகரில் ஒரு நாள் முன்பு பெய்த கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இராணுவம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தேங்கிய பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு குழாய்கள் மற்றும் பிற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதியா மார்க், அசோக் நகர், மீரா சௌக், சுகாடியா சர்க்கிள், பூரணி அபாடி போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அடுத்த 24 மணி நேரத்தில் அஜ்மீர், பரத்பூர், ஜெய்ப்பூர், கோட்டா மற்றும் உதய்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், அஜ்மீரில் உள்ள தொலைத்தூர பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
- தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தெலுங்கானாவில் உள்ள 14 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் பெண்ணும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, கொமரம் பீம் ஆசிபாபாத், மஞ்சேரியல், நிர்மல், நிஜாமாபாத், முழுகு, பத்ராத்ரி கொத்தகுடெம், மஹர்பூபாபாத், வாரங்கள் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இந்நிலையில் மழை காரணமாக ஐதராபாத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஒடிசா- வட ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அப்பால் வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள சூறாவளி சுழற்சியின் காரணமாக சராசரி கடல் மட்டத்தில் இருந்து 7.6 கி.மீ வரை நீண்டு தென்மேற்கு நோக்கி நகர்கிறது.
மேலும், அண்டை மாநிலமான கர்நாடகாவின் 13 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டு இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்த பகுதி மேலும் வலுவடையாமல் அதே நிலையில் நீடித்து வருகிறது.
இது மேலும் நிலப்பகுதியில் நிலவி வருவதால் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய கன மழை பெய்தது.
வட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில் உருவான வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை மற்றும் புதுச்சேரிக்கு அருகில் நிலவி வருகிறது.
இது நிலப்பகுதியில் நிலவுவதால் தொடர்ந்து மழை பெய்யக்கூடும். காற்று அதிகம் இல்லாமல் மழை நின்று பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வட கடலோர பகுதிகளில் அநேக இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மழை விட்டு விட்டு பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதியிலும் மழை பெய்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.
இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த மழை இன்றும் நீடித்து வருகிறது. சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெளியேற முடியாமல் வெள்ளம் போல் காட்சியளிக்கின்றன. காற்று இல்லாமல் மழை நின்று பெய்து வருவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
ஒரே நேரத்தில் கன மழை பெய்து அந்த தண்ணீர் கடலுக்குள் வீணாக சேருவதை காட்டிலும் தற்போது பெய்து வரும் மழை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம் 10 செ.மீ., சென்னை, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் 9 செ.மீ., தாம்பரம், திருத்தணி தலா 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. #Rain #IMD