search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "standing water"

    • ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து.
    • நள்ளிரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து. நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு நகரில் பகுதியில் சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நகரின் முக்கியப் பகுதிகளான பிரப் ரோடு, ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, காளைமாடு சிலை, முனிசிபல் காலனி, வீரப்பன் சத்திரம், குமலன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மாநகரில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த குழிகளில் மழை நீர் தேங்கி நின்றது.இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஈரோடு வீரப்பன் சத்திரம், ராஜாஜி வீதியில் பெய்த மழை காரணமாக மழை நீர், கழிவு நீருடன் சேர்ந்து தெருக்களில் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்த பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர் வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதேபோல, ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளான திண்டல், நசியனூர், வாய்க்கால்மேடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, பவானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    தொடர்ந்து இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு –-17, பெருந்துறை – 29, மொடக்குறிச்சி –-20, பவானி –-6, கவுந்தப்பாடி – 3.4, மாவட்டத்தின் மொத்த மழையளவு 75.4 மி.மீ.

    • மதுரையில் நேற்று கனமழை பெய்தது.
    • சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

    மதுரை

    தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையாக வெயில் தாக்கம் இருந்து வந்தது. இதனால் பகல் நேர வெப்பமும் அதிகமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மதுரையில் கரு மேகங்கள் திரண்டு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மதுரை நகர் பகுதியில் அனைத்து சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அழகர் கோவில், கடச்சநேந்தல், திருப்பரங்குன்றம், விளாங்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    திருப்பரங்குன்றத்தில் உள்ள ெரயில்வே சுரங்க பாதையில் மழை வெள்ளம் குளம் போல தேங்கியது.இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக வெயில் காரணமாக அதிக வெப்பம் இருந்த நிலையில் நேற்று திடீரென பெய்த கன மழை காரணமாக மதுரையில் குளிர்ந்த காற்று வீசி இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ×