search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weapons"

    • மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டது அம்பலமானது.

    மதுரை

    மதுரை மாநகரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் நேற்று மாலை கிருதுமால் நதி அருகே ரோந்து சென்றனர். அப்போது சில்வர் பட்டறை எதிரே தண்டவாளம் அருகே 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த கும்பல் தப்பி ஓடியது. இதில் 5 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் 5 பேர் தப்பிச்சென்று விட்டனர்.

    பிடிபட்ட 5 பேரிடம் இருந்து கத்தி, அரிவாள், உருட்டுகட்டை, மிளகாய் பொடி பாக்கெட், கயிறு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில், அவர்கள் பண்ணியான் கீழத்தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் அஜய் (வயது 21), திருநகர் நாகராஜ் மகன் ஆகாஷ் (21), சமயநல்லூர் சுந்தரமூர்த்தி மகன் ராம்கிஷோர் (20), விக்ரமங்கலம், பெரியார் நகர் முத்தையா மகன் விஜய் (20) வில்லாபுரம், மணிகண்டன் நகர் முத்துவேல் மகன் சோலார் சரவணன் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் சரியாக வேலைக்கு செல்லாமல் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க முடிவு செய்து பதுங்கி இருந்ததாக தெரிவித்தனர்.

    • மதுரையில் ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்கள் வேலைக்கு செல்லமால் கொள்ளை அடித்து பணம் திருடுவது என்று முடிவு செய்தனர்.

    மதுரை

    மதுரையில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் ஈடுபடு பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நேற்று கூடல் நகர் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 10 பேர் கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களில் 6 பேரை விரட்டி சென்று பிடித்தனர்.

    அவர்களை சோதனை யிட்டபோது வாள், பெரிய கத்தி, உருட்டுகட்டை, கயிறு மற்றும் மிளகாய் பொடி ஆகியவை இருந்தது தெரியவந்தது. ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் பெத்தா னியாபுரம், மேட்டு தெரு முருகன் மகன் சூர்யா (வயது 24), மேலவாசல் சிவகுமார் மகன் பிரகாஷ் (23), பெத்தானியாபுரம், திலீபன் தெரு கருப்பசாமி மகன் அசோக்குமார் (22), கரிசல்குளம், நேரு காலனி பாலகிருஷ்ணன் (25), கள்ளிக்குடி சுந்தர்ராஜன் மகன் அருண்குமார் (19), ஆரப்பாளையம், மஞ்சள் மேட்டு காலனி, அன்னை இந்திரா நகர், மெய்யப்பன் தெரு ஜெயக்குமார் மகன் மனோஜ்குமார் (22) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் வேலைக்கு செல்லமால் கொள்ளை அடித்து பணம் திருடுவது என்று முடிவு செய்தனர். இதற்காக ஆயுதங்கள் பாலத்தில் கீழ் பதுங்கி இருந்து உள்ளனர். இைதயடுத்து 6 பேரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர். தப்பிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    • பாளை கக்கன் நகரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக மூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • நம்பி நாராயணன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    பாளை கக்கன் நகர் மேம்பாலம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக மூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த பாளை திம்மராஜபுரத்தை சேர்ந்த மாணிக்கராஜ் (வயது 26), நம்பி நாராயணன்(21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜன்(22) ஆகியோரை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து அரிவாள், வாள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார்

    3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • தூத்துக்குடி புதுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மாடியில் வாலிபர்கள் சிலர் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ஒருவர் தப்பி ஓட, மீதி 3 பேர் தப்பிச் செல்ல முடியாததால் கையில் அரிவாளுடன் போலீசாரை தாக்குவதற்காக பாய்ந்து வந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மாடியில் வாலிபர்கள் சிலர் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து தென்பாகம் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். திடீரென போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் தப்பி ஓட முயற்சித்தனர்.

    இதில் ஒருவர் தப்பி ஓட, மீதி 3 பேர் தப்பிச் செல்ல முடியாததால் கையில் அரிவாளுடன் போலீசாரை தாக்குவதற்காக பாய்ந்து வந்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார் லாவகமாக அவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது 28), முத்தையாபுரத்தை சேர்ந்த ரத்தினகுமார் ஹரீஷ் (29), மற்றும் லோகேஸ்வரன் என்பது தெரிய வந்தது. அவர்கள் எதற்காக ஆயுதங்களுடன் வீட்டு மாடியில் பதுங்கி இருந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அவரது நண்பர்கள் 4 பேருடன் இருசக்கர வாகனத்தில் 3 அரிவாளுடன் வந்தபோது போலீசார் பிடித்தனர்.
    • பைக் மற்றும் 3 அரிவாள்களை போட்டு விட்டு 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகன் கிருட்டி என்கிற சாந்தகுமார் (வயது19) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேருடன் இருசக்கர வாகனத்தில் 3 அரிவாளுடன் வந்தபோது போலீசார் பிடித்து விசாரிக்க முற்பட்டனர்.

    அப்போது பைக் மற்றும் 3 அரிவாள்களை போட்டு விட்டு 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    பிடிபட்ட கிருட்டி என்கிற சாந்தகுமாரை விசாரித்ததில் வாகன திருட்டு, ஆயுதங்களை வைத்து மிரட்டுதல் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    பட்டுக்கோட்டை கிரைம் போலீசார் பிடித்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • கொள்ளை அடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 ரவுடிகள் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார், தப்பி ஓடிய முகமது ரியாஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், கே.புதூர் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் நேற்று மதுரை சம்பக்குளம் மெயின் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பொது கழிவறை அருகே 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். உடனே போலீசார் விரட்டி சென்று அதில் 4 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்த2 அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனை தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் பாலகுமாரன் என்ற தவளை பாலா, லாரன்ஸ், சந்துரு என்ற கபாலி, தங்கபாண்டி என்பது தெரிய வந்தது.

    இவர்கள் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கொள்ளை அடிக்க பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததாக தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்த கே.புதூர் போலீசார், தப்பி ஓடிய முகமது ரியாஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

    • தகாத வார்த்தைகள் பேசி பெண்கள் நடக்க முடியாத நிலை நிலவுகிறது என பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் மனு.
    • கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி செந்தில் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த மனுவில், எங்களது பகுதியில் சமூக விரோதிகள் சிலர் கையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிகின்றனர்.அவர்கள் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. மேலும் தகாத வார்த்தைகள் பேசி பெண்கள் நடக்க முடியாத நிலை நிலவுகிறது .எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறோம் .

    இதன்படி போலீசார் விசாரணையில் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்த அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த்(வயது 35) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நன்றி இல்லாத மனிதன் காற்று, தண்ணீர் இரண்டையும் தான் முதலில் மாசு படுத்துகிறான்.
    • அமேசான் காட்டின் 22 சதவீதத்தை அழித்தவன் மனிதன்.

    பல்லடம் :

    பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளையின் 53 -வதுவான்மழை மாதாந்திர கருத்தரங்கம் வனம் அறக்கட்டளை அலுவலகமான வனாலயத்தில் நடைபெற்றது. சக்தி மசாலா உரிமையாளர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வனம் அறக்கட்டளை தலைவர் சின்னச்சாமி, செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், சிறு துளி அமைப்பு வனிதா மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனம் அறக்கட்டளை செயலாளர் சுந்தரராஜன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் வைரமுத்து பங்கேற்று பேசியதாவது:- இந்த பூமியில் மனிதன் உயிர் வாழத் தேவையான முக்கியமான இரண்டு காற்று, தண்ணீர். நன்றி இல்லாத மனிதன் அந்த இரண்டையும் தான் முதலில் மாசு படுத்துகிறான். அவர்களை காப்பது மரங்கள். இதை அறியாமல் உலகில் மனிதன் ஆயுதங்களை அதிகம் பிரயோகித்தது மரங்களிடம்தான். ஆம் இதுவரை அவன் அளித்தது எண்ணிலடங்கா மரங்கள். ஏன் அமேசான் காட்டின் 22 சதவீதத்தை அழித்தவன் மனிதன். வனம், சிறுதுளி போன்ற ஆர்வலர்களால் அவன் செய்த தவறுகள் சிறிதேனும் சரி செய்யப்படுகிறது.

    நமது முப்பாட்டன் வள்ளுவன் முதல் குறளில் சொல்வது கடவுள் நம்பிக்கை. அதற்கு அடுத்ததாக தண்ணீரைப் பற்றிச் சொல்லி உள்ளார். ஏன்? தண்ணீர் என்பது அவ்வளவு முக்கியம். அந்தத் தண்ணீரின் தேவை இல்லை என்றால் நீ கடவுளைக் கூட வழிபட முடியாது .இந்த உலகம் 70 விழுக்காடு தண்ணீரால் சூழப்பட்டது. மீதி உள்ள பகுதியில்தான் மனிதன் குடித்தனம் நடத்தி வருகிறான். அவனுடன் புழு, பூச்சி, விலங்குகள், போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன. இனியாவது மாற்றத்தைப் பற்றி யோசி, மரத்தை நேசி.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு மாலை அணிவித்து கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நாகராஜ்,சூழல் செயற்பாட்டாளர் சந்திரசேகர் வெள்ளிங்கிரி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, கள் இயக்கத் தலைவர் நல்லசாமி மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள்,உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில் வழிப்பறி கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்த தனிப்படை போலீசாருக்கு மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டினார்.
    மதுரை:

    மதுரை மாநகரில் ரவுடிகள் அட்டகாசம் தொடர்கதையாகி வருகிறது. எனவே இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமி‌ஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், அண்ணா நகர் உதவி கமி‌ஷனர் சிவக்குமார் அறிவுரையின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அம்மா திடல் பகுதியில் பதுங்கி இருந்த வாலிபர் ஒருவர், போலீசாரை கண்ட தும் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது அவரிடம் இருந்து நீண்ட அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து அண்ணா நகர் போலீசார் அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர் யாகப்பா நகர், அப் பாஸ் தெருவை சேர்ந்த சபரி என்கிற சபரிராஜ் (வயது 31) என்பது தெரிய வந்தது. இவர் மீது அண்ணா நகர் மட்டுமின்றி மாட்டுத்தாவணி, கருப்பா யூரணி ஆகிய போலீஸ் நிலையங்களிலும் வழிப்பறி, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சாலையில் வருவோரை அரிவாள் முனையில் மிரட்டி பணம் பறிப்பதற்காக சபரிராஜ், பாண்டி கோவில் ரிங் ரோடு அம்மா திடல் பகுதியில் பதுங்கி இருந்து உள்ளார்.

    பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில் வழிப்பறி கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்த தனிப்படை போலீசாருக்கு மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டினார்.

    வேல்ராம்பட்டு ஏரிக்கரையில் பதுங்கி இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, மிளகாய் பொடி பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் குற்றச்சம்பவங்களை தடுக்க ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் மேற்பார்வையில் இரவு ரோந்துப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த போலீஸ் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வேல்ராம்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த சிலர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அவர்களை சோதனை செய்தபோது, 2 கத்தி, மிளகாய் பொடி இருந்தது. இதையடுத்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் துலுக்கானத்தமன் நகரை சேர்ந்த வீரப்பன் என்கிற சந்துரு (25), பரூக் என்கிற முகமது பரூக் (28), புகழேந்தி (21), நைனார் மண்டபத்தை சேர்ந்த சத்யராஜ் (21), செபஸ்டின் (19) என்பதும், ஏரிக்கரை வழியாக வருபவர்களிடம் வழிப்பறி செய்யும் நோக்கத்துடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. இதில் வீரப்பன், பரூக், புகழேந்தி ஆகிய 3 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    பிடிபட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கொரோனா பரிசோதனைக்குப் பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள், மிளகாய்பொடி பறிமுதல் செய்யப்பட்டன.
    ஒடிசா மாநிலம், பூரி நகரில் உள்ள ஜகநாதர் ஆலயத்துக்குள் துப்பாக்கி மற்றும் காலணிகளுடன் போலீசார் நுழைய சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. #PuriJagannathtemple #SC #PolicemanShoes
    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலம், பூரி நகரில் 12-ம் நூற்றாண்டு காலத்தில் அமைக்கப்பட்ட பூரி ஜகநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு புதிய வரிசை முறையை உருவாக்க நிர்வாகம் தீர்மானித்தது.

    இந்த வரிசை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3-ம் தேதி 12 மணிநேர கடையடைப்புக்கு சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. ஆரம்பத்தில் அமைதியாக நடைபெற்ற கடையடைப்பு போராட்டம், பின்னர் வன்முறையாக மாறியது.

    பூரி ஜகநாதர் ஆலயத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியை தகர்த்தபடி பலர் ஆலயத்தின் நிர்வாக அலுவலகத்தின் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 போலீசார் காயமடைந்தனர்.

    வன்முறைய கட்டுப்படுத்த கூடுதலாக போலீசார் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி 47 பேரை கைது செய்தனர்.



    இந்த சம்பவத்தின்போது போலீசார் துப்பாக்கிகளுடனும், ஷூ காலுடனும் உள்ளே நுழைந்ததால் பூரி ஜகநாதர் ஆலயத்தின் புனிதம் மாசுபட்டதாக ஒரு அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் மதன் பி லோகுர்ம் தீபக் குப்தா ஆகியோர் பூரி ஜகநாதர் ஆலயத்துக்குள்  துப்பாக்கிகளுடனும், ஷூ காலுடனும் போலீசார் நுழைய கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டனர். #PuriJagannathtemple #SC #PolicemanShoes

    டிரைவரை ஆயுதங்களால் தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    மதுரை பழங்கானத்தம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். பொதுப்பணித்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். இவரது மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தனது மகளை பார்க்க கணேசன் முடிவு செய்தார். இதற்காக அவர் சென்னைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட ஏற்பாடு செய்திருந்தார்.

    இதையொட்டி நேற்று மாலை கணேசன் தனது காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை மதுரை பாலரங்காபுரத்தை சேர்ந்த டிரைவர் கிறிஸ்டோபர் டேனியல்(40) ஓட்டி சென்றார். இரவு 12 மணியளவில் அவர்கள் சென்னை சென்றடைந்தனர்.

    பின்னர் கணேசனை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு கிறிஸ்டோபர் டேனியல் மட்டும் காரில் மீண்டும் மதுரைக்கு புறப்பட்டார்.

    தாம்பரம் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கார் டிரைவர் கிறிஸ்டோபர் டேனியலிடம் நாங்கள் விழுப்புரம் செல்ல வேண்டும். எங்களை அங்கு இறக்கி விடுங்கள் என்றனர். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.

    பின்பு அந்த 4 வாலிபர்களும் காரில் ஏறினர். அவர்கள் தலா 150 ரூபாய் கிறிஸ்டோபர் டேனியலிடம் கொடுத்தனர். அதன்பிறகு அவர் காரை விழுப்புரம் நோக்கி ஓட்டிவந்தார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த கார் விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள விராட்டிக்குப்பம் என்ற இடத்தில் வந்தது. அப்போது காரில் இருந்த ஒருவர் காரை நிறுத்தம்படி கூறினார்.

    உடனே கிறிஸ்டோபர் டேனியல் காரை நிறுத்தினார். அப்போது காரில் இருந்தவர்கள் திடீரென்று மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் கிறிஸ்டோபர் டேனியல் தலையில் தாக்கினர்.

    இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பின்பு அவர்கள் கார் டிரைவர் கிறிஸ்டோபர் டேனியலை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து காரை கடத்தி சென்று விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த கிறிஸ்டோபர் டேனியலுக்கு சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தது. அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்களிடம் நடந்த விபரங்களை கூறினார். அவர்கள் 108 ஆம்புலன் சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கிறிஸ்டோபர் டேனியலை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே டிரைவரை தாக்கி கார் கடத்தப்பட்டது குறித்து விழுப்புரம் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    கார் கடத்தல் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தனிப்படை ஒன்று அமைத்தார். தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காரை கடத்தி சென்றவர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு சென்றதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார் கடத்திய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    டிரைவரை ஆயுதங்களால் தாக்கி கார் கடத்தப்பட்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×