search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water level"

    • கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. மேலும் குடிநீர் தேவைக்காக முதலில் வினாடிக்கு 500 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது வினாடிக்கு 250 கனஅடியாக குறைக்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனாலும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.03 அடியை தொட்டது. அணைக்கு வினாடிக்கு 1978 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • இரவில் பெய்த கனமழையால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
    • அணைகளை பொறுத்தவரை அதிகபட்சமாக குண்டாறில் 48 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 28 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை முதல் இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது.

    நெல்லை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான களக்காடு, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக கன்னடியன் கால்வாய் பகுதிகளில் கனமழை கொட்டியது. அந்த பகுதியில் அதிகபட்சமாக 8.4 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. அம்பை, வி.கே.புரம், ஊர்காடு, கல்லிடைக்குறிச்சி, சிவந்திபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

    அம்பையில் அதிகபட்சமாக 52 மில்லிமீட்டர் மழை கொட்டியது. ராதாபுரம், சேரன்மகாதேவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிரவில் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 49.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சேர்வலாறில் 27 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 991 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்றிரவு பெய்த மழையால் நீர்வரத்து 1433 கனஅடியாக அதிகரித்தது.

    இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி அதிகரித்து 110.80 அடியாக உயர்ந்துள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 121 அடியாக இருந்த நிலையில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்து இன்று ஒரே நாளில் 3 அடி அதிகரித்து 124.87 அடியானது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 3/4 அடி உயர்ந்து 77.80 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 593 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணை பகுதிகளில் மழை இல்லை.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. அதேபோல் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி ஆகிய இடங்களிலும் இரவில் பலத்த மழை பதிவாகியது. இரவில் பெய்த கனமழையால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இன்று அதிகாலை வரையிலும் லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. சங்கரன்கோவில், சிவகிரி ஆகிய இடங்களில் தலா 1 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    அணைகளை பொறுத்தவரை அதிகபட்சமாக குண்டாறில் 48 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 28 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. அடவிநயினார் அணை பகுதியில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடனா மற்றும் ராமநதியில் தலா 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடனா நதி நீர்மட்டம் 77.30 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 78 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 79 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணை நிரம்ப இன்னும் 5 அடி நீரே தேவை.

    • டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது.
    • அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.

    இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடிக்கும் கீழ் குறைந்தது. இதனால் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 431 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 72 கனஅடியாக குறைந்துள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    நேற்று 64.64 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 65.04 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 28.58 டி.எம்.சி.யாக உள்ளது.

    • காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.86 அடியாக உயர்ந்துள்ளது.
    • கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 700 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.86 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,756 கனஅடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 700 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதேப்போல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 4.92 அடியாகவும், வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 29.69 அடியாகவும் உள்ளது.

    • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • இதனால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    சேலம்:

    தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60.74 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வினாடிக்கு 3239 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 16.60 மில்லி மீட்டர் மழை பதிவானது.
    • இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் நீர்மட்டம் 86.35 அடியாக உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவ லாக மழை பெய்தது. மாநகர பகுதிகளான பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதி களிலும், புறநகர் பகுதி களில் அம்பை, நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

    மேலும் கன்னடியன் அணைக்கட்டு, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, மணிமுத்தாறு பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 16.60 மில்லி மீட்டர் மழை பதிவானது. அம்பையில் 11, கொடுமுடியாறு அணை பகுதியில் 9, நாங்குநேரி, மாஞ்சோலையில் தலா 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    ராதாபுரத்தில் 6, மணிமுத்தாறில் 5.60, நெல்லையில் 2, களக்காடு பகுதியில் 3.20, காக்காச்சியில் 5, நாலுமுக்கு பகுதியில் 4 மில்லி மீட்டர் என நேற்று மாவட்டம் முழுவதும் 80.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    அணைகளின் நீர்மட்டம்

    இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் நீர்மட்டம் 86.35 அடி, சேர்வலாறு அணை 91.33 அடி, மணிமுத்தாறு 55.30 அடி, கொடுமுடியாறு 46.25 அடி, நம்பியாறு 12.49 அடியாக உள்ளது.

    • மேட்டூர் அணையில் நீர்மட்டம் கடந்த 6 நாட்களில் 12 அடி உயர்ந்தது.
    • கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    பூதலூர்:

    காவிரி பாசன பகுதி விவசாயத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜீன் 12ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 120 நாட்களுக்கு பிறகு அக்டோபர் 10ஆம் தேதி முதல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    பாசனப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள குறுவைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வந்தது இதனால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் கடந்த ஆறு நாட்களில் 12 அடி உயர்ந்தது. அதே சமயத்தில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வந்து இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8893 கன அடியாக இருந்தது.

    அணையின் நீர்மட்டம் 42.44 அடியாக உள்ளது.கடந்த ஆண்டு இந்த நாளில் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத் தக்கது. கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விட ப்படவில்லை

    • குடிநீர் தேவை ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் மில்லியன் கனஅடி தேவையாக உள்ளது.
    • சென்னைக்கு குடிநீர் வழங்க புதிய ஏரிகள், கல்குவாரி குட்டைகளை அதிகாரிகள் மேம்படுத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் சோழவரம் ஏரியின் உயரம் 18.86 அடி. ஏரியில் 1081 மில்லியன் கனஅடி (1.08 டி.எம்.சி.) மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.

    இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் வரும் ஆண்டுகளில் குடிநீர் தேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னையில் குடிநீர் தேவை ஒரு ஆண்டுக்கு 20 ஆயிரம் மில்லியன் கனஅடி தேவையாக உள்ளது.

    வரும் ஆண்டுகளில் குடிநீர் தேவை 25 ஆயிரம் மில்லியன் கனஅடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வழங்க புதிய ஏரிகள், கல்குவாரி குட்டைகளை அதிகாரிகள் மேம்படுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சோழவரம் ஏரியின் நீர்மட்டத்தை 18.86 அடியில் இருந்து 22 அடியாக உயர்த்த அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    ஏரியை ஆழப்படுத்தி தற்போதைய கொள்ளளவை விட 3 மடங்கு அதிகரிக்கப் பட உள்ளது. தற்போது சோழவரம் ஏரியில் 1 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே (1081 மி.கனஅடி) தேக்கி வைக்க முடியும். இது 3 டி.எம்.சி. ஆக உயர்த்தப்பட இருக்கிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சோழவரம் ஏரியில் நீர் இருப்பை 3 டி.எம்.சி. ஆக அதிகரிக்க திட்டம் உள்ளது. இது தொடர்பாக திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் இந்த பணிக்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும் என்றனர்.

    • சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையில் நேற்று நீர்மட்டம் 36. 74 அடியாக இருந்தது.

    உடுமலை: 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் நீர் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இவற்றிற்கு 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

    காண்டூர் கால்வாயில் நடைபெற்ற புனரமைப்புபணி நிறைவடைந்ததை அடுத்து பரம்பிக்குளம் அணையிலிருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 72 கோடி மதிப்பில் காண்டூர் கால்வாயில் ஏற்பட்ட பழுதுகள் சமீபத்தில் நீக்கப்பட்டதோடு நீர்க்கசிவுகள் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு பக்கவாட்டு சுவர்கள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் பரம்பிக்குளம் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் உடைப்பு, நீர் கசிவு இன்றி திருமூர்த்தி அணையை வந்து அடைந்தது .இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மொத்தம் 60 அடி கொள்ளளவு கொண்ட அணையில் நேற்று நீர்மட்டம் 36. 74 அடியாக இருந்தது. அணைக்கு 821 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 23 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்நிலையில் 4 மண்டல பாசனத்திற்கு ஒரு சுற்று தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை விரைந்து செல்வது குறித்தும் தண்ணீர் திருட்டை தடுப்பது குறித்தும் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அணையில் இருந்து அனேகமாக வருகிற 15-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படலாம் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 47.11 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக உள்ளது. அணைக்கு 520 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2520 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 47.11 அடியாக உள்ளது. அணைக்கு 100 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி திறக்கப்படுகிறது.

    இருப்பு 1634 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.11அடியாக உள்ளது. வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 340.60 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 78.78 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 37.88 மி.கன அடியாக உள்ள.

    பெரியாறு 7, தேக்கடி 3.2, கூடலூர் 1, சோத்துப்பாறை 1.2, உத்தமபாளையம் 1.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • ஒரு வாரத்தில் 32 அடியாக உயர்ந்துள்ளது.
    • குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெப்பம் சலனம் காரணமாக பரவ லாக மழை பெய்து வருகிறது. அதேபோல் கடந்த 2,3 நாட்களாக கல்வராயன் மலையில் மாலை நேரங்க ளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கல்வராயன் மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரண மாக கல்படை ஆற்றின் வழியாக நேற்று முன்தினம் நிலவரப்படி 200 கன அடி நீரும் பிறகு படிப்படியாக குறைந்து தற்போது 150கன அடி வரை தண்ணீர் கல்படையாற்றின் வழியாக கோமுகி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர் மட்டும் ஏற்கனவே 25 அடியாக இருந்த நிலையில் தற்போது ஒரு வாரத்தில் 32 அடியாக உயர்ந்துள்ளது. கோமுகி அணை நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கோமுகி அணை நீர்மட்டம் உயர்ந்து வரு வதால் கச்சிராயப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 79.53 அடியாக சரிந்துள்ளது.
    • அணையில் இருந்து 3,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக கடந்த 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஆனால் கீழ்பவானி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் முடிவடையாத தால் சிறிது நேரத்தில் தண்ணீர் மீண்டும் நிறுத்தப்பட்டது.

    பின்னர் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து கடந்த 19-ந் தேதி முதல் மீண்டும் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 200 கனஅடி திறக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக நீர்திறப்பு அதிகரித்தது.

    இந்த நிலையில் இன்று காலை பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள து. 105 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 79.53 அடியாக சரிந்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 622 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு ள்ளது. தடப்பள்ளி-அரக்க ன் கோட்டை பாசனத்திற்கு 400 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி,

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 3,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இதேபோல் மாவட்டத்தின் மற்ற அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது.

    குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.98 அடியாக உள்ளது. பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 16.07 அடியாக உள்ளது.

    வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 21.49 அடியாக உள்ளது.

    ×