search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்வரத்து குறைந்ததால் வெறிச்சோடி காணப்படும் கல்லணை
    X

    வெறிச்சோடி காணப்படும் கல்லணை.

    நீர்வரத்து குறைந்ததால் வெறிச்சோடி காணப்படும் கல்லணை

    • மேட்டூர் அணையில் நீர்மட்டம் கடந்த 6 நாட்களில் 12 அடி உயர்ந்தது.
    • கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    பூதலூர்:

    காவிரி பாசன பகுதி விவசாயத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜீன் 12ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 120 நாட்களுக்கு பிறகு அக்டோபர் 10ஆம் தேதி முதல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    பாசனப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள குறுவைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சம்பா சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வந்தது இதனால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் கடந்த ஆறு நாட்களில் 12 அடி உயர்ந்தது. அதே சமயத்தில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வந்து இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8893 கன அடியாக இருந்தது.

    அணையின் நீர்மட்டம் 42.44 அடியாக உள்ளது.கடந்த ஆண்டு இந்த நாளில் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத் தக்கது. கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விட ப்படவில்லை

    Next Story
    ×