search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "volunteers"

    • கிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
    • பொதுமக்கள் வார்டு உறுப்பினர் முத்துகுமாரசாமியிடம் புகார் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சுகாதார நிலையம் முன்பு பந்தல் எதுவும் அமைக்கப்படாததால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் இங்கு தடுப்பூசி செலுத்த வரும் கர்ப்பிணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இது குறித்து பொதுமக்கள் வார்டு உறுப்பினர் முத்துகுமாரசாமியிடம் புகார் தெரிவித்தனர். அவர் அந்தப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களிடம் இரும்பு பந்தல் அமைக்க உதவி கேட்டுள்ளார். அவர்களும் இரும்பு பந்தல் அமைக்க ஆர்வமுடன் முன் வந்தனர்.இதையடுத்து நேற்று அரசு துணை சுகாதார நிலையம் முன்பு இரும்பு பந்தல் அமைக்கப்பட்டது.

    • எழுதிக் கொடுப்பதற்காக இரண்டு பெண் தன்னார்வ லர்களை நியமித்துள்ளார்.
    • அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுக்கின்றனர்.

    ஈரோடு, 

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரு கிறது. கலெக்டர் தலைமை யில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனுவாக எழுதி அதை கலெக்டரிடம் வழங்குவார்கள்.

    கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த மனுவை கொடுத்து நட வடிக்கை எடுக்க உத்தர விடுவார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனு எழுத கலெக்டர் அலுவலக வெளி நுழைவுவாயில் 7-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள் அவர்களிடம் சென்று எழுதிக் கொடுக்க சொல்வார்கள்.

    அவர்களும் சம்பந்த ப்பட்ட பொது மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் கூறி யவாறு மனுக்களை எழுதி கொடுப்பார்கள். இதில் பல்வேறு பிரச்சனை கள் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    இதனை அடுத்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதன்படி இன்று முதல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொது மக்கள் தங்களது பிரச்சி னைகள் குறித்து மனுவாக எழுதிக் கொடுப்பதற்காக இரண்டு பெண் தன்னார்வ லர்களை நியமித்துள்ளார். அவர்கள் பொதுமக்கள் சொல்லும் கோரிக்கைகளை மனுவாக அவர்களுக்கு ஏற்றவாறு எழுதி கொடுக்கின்றனர். இதற்காக தன்னார்வலர்கள் பேப்பர் பேனா வைத்து ள்ளனர். அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுக்கின்றனர். கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    தன்னார்வலர்கள் தங்களிடம் வரும் பொது மக்களிடம் நிறுத்தி நிதான மாக என்ன பிரச்சனை என்று கேட்டு அவர்களுக்கு ஏற்றவாறு தெளிவாக மனுவில் எழுதிக் கொடுக்கின்றனர்.

    • வானவில் மன்றம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது.
    • அரசுபள்ளி மாணவர்களின் ஈடுபாடு அதிகம் இருந்தது.

    தாராபுரம் :

    அரசு பள்ளிகளில் மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்க வானவில் மன்றம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. இந்த மன்றத்தின் முக்கிய செயல்பாடாக அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், கணித கருத்துகளை செயல்வழியில் விளக்க ஸ்டெம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த திட்டத்தின் செயல்பாடுகளை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விளக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர்.வானவில் மன்றத்தின் நோக்கம் மாணவர்களை சென்றடைந்ததை உறுதி செய்ய, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் அரசுபள்ளி மாணவர்களின் ஈடுபாடு அதிகம் இருந்ததால் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து ஸ்டெம் திட்ட தன்னார்வலர்கள் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை இந்தத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தினால் அனைத்து தரப்பு மாணவர்களும் பலனடைவர் என்றனர். 

    • தி.மு.க.வுக்கு துணை போகிறவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் ஏற்று கொள்ளமாட்டார்கள்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் பதவி விலக வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் இறப்பு உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தஞ்சை ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திருஞானசம்பந்தம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சி.வி.சேகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் வரவேற்றார்.

    யாராலும் வீழ்த்த முடியாது

    ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை அழிக்க பலர் நினைத்தனர். அ.தி.மு.க.வை வழிநடத்தக்கூடிய தகுதியோடு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக ஆகி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியையும், அ.தி.மு.க.வையும் வீழ்த்த முடியாது.

    தி.மு.க.வுக்கு துணை போகிறவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் ஏற்று கொள்ளமாட்டார்கள். அதனால் தான் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

    தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 25 பேர் பலியாகி இருக்கிறார்கள். சாராய சாவுக்கு பொறுப்பு ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் செந்தில்பாலாஜியும் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர், மாவட்ட இணைச் செயலாளர் சாவித்திரி கோபால், மாவட்ட துணைச் செயலாளர் பொன்.முத்துவேல், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், துரை.செந்தில், துரைமாணிக்கம், தண்டாயுதபாணி, கல்யாணசுந்தரம், கோவி.இளங்கோ, மலை.முருகேசன், முருகானந்தம், அருணாச்சலம், சாமிவேல், கலியமூர்த்தி, முன்னாள் கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத் தலைவர் பாலைரவி, 51-வது வட்ட செயலாளர் மனோகர், முன்னாள் விளார்ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தின சுந்தரம், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, கேசவன், கலைவாணி, காந்திமதி, எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட ஒன்றிய பொருளாளர் தம்பிதுரை, அண்ணா தொழிற்சங்க கும்பகோணம்அரசு போக்குவரத்து கழக மண்டல செயலாளர் திரு நீலகண்டன் , அதிமுக பிரதிநிதிகள் ஏடி சண்முகசுந்தரம், நடராஜன்,மோகன் ,தங்க கண்ணன், முன்னாள் கவுன்சிலர் ஹேமா பூபதி, மாணவரணி முருகேசன், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் துறை கோ. கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் கோவிதனபால், ஆசைத்தம்பி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவ.ராஜேஷ் கண்ணன், விவசாய அணி துணை செயலாளர் சிவராமன், தொண்டராம்பட்டு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஆசைத்தம்பி, பேரூராட்சி துணை தலைவர் மகேந்திரன் , தெலுங்கன் குடிக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சு, ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் மனோகரன், முன்னாள் நகரச் செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

    • தமிழகம் முழுக்க 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது.
    • மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள், பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் நிலையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களிடம் ஏற்பட்ட கல்வி இடைவெளியை குறைக்க 2021 நவம்பரில் இல்லம் தேடி கல்வி மையங்கள் துவங்கப்பட்டன.தமிழகம் முழுக்க 1.80 லட்சம் மையங்களில் 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது.

    இவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. மாலை நேர வகுப்பு மட்டுமல்லாமல், அரசுப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுவிலும், தன்னார்வலர்கள் உறுப்பினராக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

    இல்லம் தேடி கல்வி மைய ஆலோசகர் லெனின் பாரதி கூறுகையில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அறிவியல் கண்காட்சி, கற்பித்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றல், தனித்திறன் போட்டிகள் நடத்துதல், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு கல்விசார் பணிகள், தன்னார்வலர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே ஊதியத்தை 2 ஆயிரமாக உயர்த்தி தர ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    • பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    • அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    காங்கயம் :

     காங்கயம் பழையகோட்டை சாலை ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). இவருடைய தங்கை மகள் மனநலம் பாதிக்கப்பட்ட கலாமணி (33). வாடகை வீட்டில் வசித்து வந்த இருவரும் ஆதரவற்ற நிலையில் வறுமையின் கொடுமையால் பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்களை காங்கயம் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர் காங்கயம் போலீசார் அனுமதியுடன் 2 பெண்களின் உடல்களை காங்கயத்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் காங்கயம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

    • சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி 4 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
    • தன்னார்வலர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம், ரெயின்போ ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து வலியுறுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் ஏப்ரல் 3 ம் தேதி பிளாஸ்டிக் விழிப்புணர்வை வலியுறுத்தி சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி சுமார் 350 கி.மீ., தூரம் ராமஜெயம்(வயது 70), ரங்கசாமி,(63), மகேஷ்(30), தரணி(19) ஆகிய 4 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.இவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் . தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், தங்கலட்சுமி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி சங்க செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார்.சைக்கிள் பயணம் மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துக்குமார், ஆறுமுகம், கதிர், திருமூர்த்தி மற்றும் தன்னார்வலர்கள், சித்தம்பலம் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்துவோம் என்று மாவட்ட தலைவர் தரணி முருகேசன் பேட்டியளித்துள்ளார்.
    • பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளால் இந்தியா வல்லரசு நாடாக திகழ்ந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா புதிய தலைவராக தரணி முருகேசன் பொறுப் பேற்றுக் கொண்டார்.

    ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி இயற்கை வேளாண் விவசாயியும், தரணி வேளாண் ஆராய்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரும், மாவட்ட பா.ஜனதா பொருளாளருமான தரணி முருகேசனை ராமநாதபுரம் புதிய மாவட்ட தலைவராக மாநில தலைவர் அண்ணா மலை நியமித்தார். இதனை தொடர்ந்து நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தரணி முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளால் இந்தியா வல்லரசு நாடாக திகழ்ந்து வருகிறது. மத்தியில் மட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகி றது. அகில இந்திய அளவி லும் அசைக்க முடியாத சக்தியாக பா.ஜனதா விளங்கி வருகிறது.

    அதேபோல தமிழகத்தில் மாநில தலைவர் அண்ணா மலையின் செயலாற்றல் காரணமாக பா.ஜனதா எழுச்சியுடன் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது.மாநிலத்தின் கடைக்கோடி கிராமத்திலும் தாமரை சின்னமும், பா.ஜனதா கொடியும் சென்றடைந்து உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத் தில் பா.ஜனதா சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளையும் கைப்பற்ற கூடிய அள விற்கு எங்களின் கட்சிப் பணியும், செயல்பாடும் அமையும்.

    அனைத்து சமுதாய மக்களின் ஆதரவைவும் பெறுவதற்கு தீவிரமாக பணியாற்றுவோம். மூத்த நிர்வாகிகள், முன்னோடி களின் ஆலோசனையும் பெற்று அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வளர்ச்சி பாதை நோக்கி கொண்டு செல்வோம்.

    எந்த தேர்தல் நடை பெற்றாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் அளவிற்கு கட்சியை வலுப்படுத்து வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தன்னார்வலர்களுக்கான 6-வது மாவட்ட மாநாட்டை நேற்று வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்லம் இணைந்து நாமக்கல்லில் நடத்தின.
    • புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 150 கிராமங்களில் வோர்ட் தொண்டு நிறுவனம், டான்போஸ்கோ அன்பு இல்லத்தினர் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்கள் மேம்பாடு-பாதுகாப்பு பணிகள், நூற்பாலைகளில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கான 6-வது மாவட்ட மாநாட்டை நேற்று வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்லம் இணைந்து நாமக்கல்லில் நடத்தின.

    நாமக்கல் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, வோர்ட் மற்றும் தொன்போஸ்கோ நிறுவன செயல்பாட்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து, சிறந்த தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கி பேசினார். இதில் நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கீதா, குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் அந்தோணி ஜெனிட், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், சி.எஸ்.சி. மேலாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் பேசினர். மாநாட்டில் தமிழ்நாடு அல்லியன்ஸ் நிறுவனர் பாலமுருகன், புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    இதில் திட்ட ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அல்லியன்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிபிஜா, வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்ல பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வோர்ட் நிறுவன இயக்குனர் ரெனிடா சரளா வரவேற்றார். தொன்போஸ்கோ நிறுவன இயக்குனர் காஸ்மீர் ராஜ் நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க.வை பாதுகாக்க தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என்று மதுரை ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பேசினர்.
    • அ.தி.மு.க. தொண்டர்கள் விஸ்வரூபம் எடுப்போம் என்பதை ஆளும் தி.மு.க.வுக்கு சவாலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் இன்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மறு வடிவமாக திகழ்ந்து வருகிறார்.

    அவரது தலைமையில் இன்று அ.தி.மு.க. இயக்கம் ஒன்று பட்டுவிட்டது. இனி யாரைப் பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. அவர் தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக விரைவில் வருவார். அந்த நம்பிக்கை மக்கள் மன்றத்தில் பரவலாக ஏற்பட்டுள்ளது.

    எடப்பாடியார் மதுரைக்கு வரும் போதெல்லாம் மக்கள் எழுச்சி அதிகரித்து வருகிறது. இதை பொறுக்க முடியாத தி.மு.க. பொய் வழக்கை பதிவு செய்துள்ளது.

    உடனடியாக எடப்பாடி மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் இல்லாவிட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து வீதிக்கு வந்து இந்த அரசை தூக்கி எறியும் வரை போராடுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    கடந்த 11-ந் தேதி மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மக்கள் எழுச்சி பயணத்தை இடைக்கால பொது செயலாளர் எடப்பாடியார் தொடங்கினார். இந்த எழுச்சி பயணத்தின் வெற்றியை தடுக்க தி.மு.க. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது. தொடக்கம் முதலே போலீசார் நிகழ்ச்சி களுக்கு அனுமதி தராமல் மறுத்துவிட்டனர்.

    நீதிமன்றத்தில் முறையிட்டு பட்டா நிலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற்றோம். அதே நேரத்தில் தி.மு.க.வின் பி. டீம் என்று அழைக்கப்படும் சில துரோகிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அங்கு போலீசார் அனுமதி அளித்தனர். இது எந்த வகையில் நியாயம்?.

    அ.தி.மு.க. இயக்கத்தை எப்படியாவது அழித்து விடலாம். ஒழித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

    எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க. வலுவோடும் பொலி வோடும் செயல்பட்டு வருகிறது. மக்கள் தமிழகத்தின் அடுத்த முதல்வராக எடப்பாடி யாரை கொண்டு வர வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    ஆனால் ஒரு பொய்யான வழக்கை மனசாட்சியின்றி தி.மு.க. அரசு இன்றைக்கு அவர் மீது போட்டுள்ளது.யாரோ பெயர் தெரியாத, விலாசம் தெரியாத ஒருவர் கொடுத்த புகாரை ஏற்று எடப்பாடியார் மீது பொய் வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். யார் சொல்லி இவர்கள் வழக்கு போட்டார்கள்? என்றெல்லாம் எங்களுக்கு தெரியும்.

    இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் அ.தி.மு.க.வை பாதுகாக்க ஒவ்வொரு தொண்டனும் மனித வெடிகுண்டாக மாறுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த அரசு அ.தி.மு.க.வை சீண்டிப்பார்க்க வேண்டாம்.பழிவாங்க நினைப்பதை விட்டு விட்டு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கி எறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ததன் காரணமாக மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க. இன்றைக்கு ஒரு பொய்யான வழக்கை பதிவு செய்திருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இதை நாம் மதுரை மண்ணில் இருந்து கண்டிக்க கடமைப்பட்டுள்ளோம். இதற்காகத்தான் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது இங்கே திரண்டிருக்கிறோம். அ.தி.மு.க. இயக்கம் சாதாரண இயக்கமல்ல. இந்த இயக்கம் தொண்டர்களால் கட்டுக்கோப்பாக கட்டமைக்கப்பட்டதாகும்.

    இந்த இயக்கத்தை அழித்து விடலாம். ஒழித்து விடலாம் என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். இதுவரை யாரும் செய்யாத ஒரு செயலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய்யான புகாரை கொண்டு வழக்குப்பதிவு செய்கிறார். எடப்பாடி பழனிசாமியும் கடந்த 4 ஆண்டுகளில் முதல்வராக இருந்து மு.க. ஸ்டாலின் மீது எந்த பொய் வழக்கையாவது போட்டாரா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    ஆளுகின்ற மமதையில் ஸ்டாலின் இதுபோன்று பொய் வழக்குகளை போட்டு வருகிறார். தி.மு.க.வுக்கு தமிழ்நாடு பட்டா போட்டு கொடுக்கப் பட்டுள்ளதா? என்பதை சிந்திக்க வேண்டும் விரைவில் மக்கள் உங்களை மாற்றுவார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் நீங்கள் செய்தது போல இனி செய்ய முடியாது. அப்போது உங்கள் நிலைமை எப்படி ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள். அ.தி.மு.க. இயக்கம் ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கும் இயக்கமாகும். இது தேன்கூடு. இந்த தேன்கூட்டில் கம்பை வைத்தால் என்னவாகும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

    அ.தி.மு.க.வை சீண்டி பார்ப்பதை விட்டுவிட்டு மக்களுக்கு கொடுத்த வாக்கு றுதிகளை நிறைவேற்றுங்கள். மக்கள் நலத்திட்டங்களில் கவனம் செலுத்துங்கள் என்று எச்சரிக்கை கடமைப்பட்டுள்ளோம். இனிமேலும் அ.தி.மு.க. தலைவர்கள் மீதும், அ.தி.மு.க. மீதும் காவல்துறையை கொண்டு பொய் வழக்கை போட நினைத்தால் அ.தி.மு.க. தொண்டர்கள் விஸ்வரூபம் எடுப்போம் என்பதை ஆளும் தி.மு.க.வுக்கு சவாலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஓ.பி.எஸ். அணி அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள் தான் அவர்களுக்கு வாரிசு என்றார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாநகர் மாவட்டம் பரவை பேரூர், மேற்குதொகுதி ஊராட்சி அ.தி.மு.க. ஓ.பன்னீர் செல்வம் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் எம்.பி.கோபால கிருஷ்ணன் கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், தற்போது அ.தி.மு.க.வில் ஓ பன்னீர் செல்வம் கரத்தை வலுப்படுத்த இருப்பவர்கள் உண்மையான அ.தி.மு.க. தொண்டர் அணியினர். எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பவர்கள் டெண்டர் பெற்ற அணியினர். தனக்கு கிடைக்காதது யாருக்கு கிடைக்கக் கூடாது என்ற எண்ணம் படைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த இயக்கம் மனிதரால் ஆரம்பிக்கப்பட்டது அல்ல. மனித புனிதர் எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும் பிள்ளைகள் கிடையாது வாரிசுகள். கிடையாது. அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள் தான் அவர்களுக்கு வாரிசு என்றார். 

    • அ.தி.மு.க. போஸ்டர்களால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • அன்வர்ராஜா அ.தி.மு.க.-வில் இருந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அன்வர்ராஜா அ.தி.மு.க.-வில் இருந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார். அவர் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் போஸ்டர் ஒட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    இன்று (24-ந்தேதி) எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அன்வர்ராஜா ஒட்டி யுள்ள போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ''தலைவா ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி, சிதறி கிடக்கிறது-நாங்கள் பதறி துடிக்கிறோம் காப்பாற்றுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

    மாவட்ட அ.தி.மு.க, செயலாளர் எம்.ஏ. முனிய சாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சரவணகுமார் ஆகியோர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ''தலைவா நீங்கள் துவக்கிய கட்சியை அழிக்க நினைத்த களைகளை காணாமல் போகச் செய்தாய். உங்கள் வழியில் ஒட்டுமொத்த தொண்டர்களால் ஒற்றைத் தலைமையை உருவாக்கி கழகத்தை தலைநிமிரச் செய்து எங்களை காப்பாற்றிய தங்க தலைவா'' என குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த 2 போஸ்டர்களும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    ×