search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு சுகாதார நிலையம்"

    • கிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
    • பொதுமக்கள் வார்டு உறுப்பினர் முத்துகுமாரசாமியிடம் புகார் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சுகாதார நிலையம் முன்பு பந்தல் எதுவும் அமைக்கப்படாததால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் இங்கு தடுப்பூசி செலுத்த வரும் கர்ப்பிணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இது குறித்து பொதுமக்கள் வார்டு உறுப்பினர் முத்துகுமாரசாமியிடம் புகார் தெரிவித்தனர். அவர் அந்தப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களிடம் இரும்பு பந்தல் அமைக்க உதவி கேட்டுள்ளார். அவர்களும் இரும்பு பந்தல் அமைக்க ஆர்வமுடன் முன் வந்தனர்.இதையடுத்து நேற்று அரசு துணை சுகாதார நிலையம் முன்பு இரும்பு பந்தல் அமைக்கப்பட்டது.

    ×