search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Illam Thaedi Kalvi"

    • மே மாதம் 2ந் தேதி துவங்கி 22ந் தேதி வரை நடக்கிறது.
    • மாணவர்களின் திறமைகள் மற்றும் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு தளத்தை உருவாக்குகிறது.

    உடுமலை :

    தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழா , ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்போடு வானவில் மன்ற கருத்தாளர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது.அனைத்து தரப்பு மாணவர்களும் அறிவியலை அணுகக் கூடியதாகவும், அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகவும் இத்திருவிழா கொண்டுள்ளது.மே மாதம் 2ந் தேதி துவங்கி 22ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான பயிற்சி முகாம் நடக்கிறது.

    இது குறித்து இல்லம் தேடி கல்வி திட்ட நிர்வாகிகள் கூறியதாவது:- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்களின் திறமைகள் மற்றும் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு தளத்தை உருவாக்குகிறது. இந்த ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழாவில் எளிய அறிவியல் பரிசோதனைகள், கணிதத்தை எளிமையாக கற்றல், அறிவியல் அற்புதங்களை ஆராய்தல், உள்ளூர் வளங்களை பாதுகாப்பதற்கான வழிவகைகளை கண்டறிதலை உள்ளடக்கியுள்ளது. விளையாட்டுகள் மற்றும் பாடல்கள், ஒரிகாமி எனும் காகிதக்கலை பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கி இந்த திருவிழா நடக்கிறது.மொத்தம் 13 ஆயிரம் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், வானவில் மன்ற கருத்தாளர்களுடன் இணைந்து கோடை விடுமுறை காலத்தில் கிராம அளவில் குழந்தைகளை சந்தித்து அறிவியல் திருவிழாவை நடத்த உள்ளனர்.ஒவ்வொரு குழந்தையும், அவர்களது இல்லங்களுக்கு சென்று கற்றலை தொடர உள்ளதால், இந்த முன்னெடுப்பு, ஆயிரமாயிரமாக பல்கிபெருகி நோக்கத்தை நிறைவு செய்யும்.இது குழந்தைகளிடையே, அறிவியல் பாடப்பிரிவுகளின் மீதான ஆர்வத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தும். அறிவியல் சிந்தனைகளை வளர்க்க உதவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழகம் முழுக்க 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது.
    • மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள், பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் நிலையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களிடம் ஏற்பட்ட கல்வி இடைவெளியை குறைக்க 2021 நவம்பரில் இல்லம் தேடி கல்வி மையங்கள் துவங்கப்பட்டன.தமிழகம் முழுக்க 1.80 லட்சம் மையங்களில் 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது.

    இவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. மாலை நேர வகுப்பு மட்டுமல்லாமல், அரசுப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுவிலும், தன்னார்வலர்கள் உறுப்பினராக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

    இல்லம் தேடி கல்வி மைய ஆலோசகர் லெனின் பாரதி கூறுகையில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அறிவியல் கண்காட்சி, கற்பித்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றல், தனித்திறன் போட்டிகள் நடத்துதல், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு கல்விசார் பணிகள், தன்னார்வலர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே ஊதியத்தை 2 ஆயிரமாக உயர்த்தி தர ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    • மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பினை ஈடுசெய்ய இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது.
    • பள்ளி முடிந்ததும் 2 மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது.

    குடிமங்கலம் :

    கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 8-ம்வகுப்புகள் வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பினை ஈடுசெய்ய இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. தன்னார்வலர்கள் மூலம், தினமும் பள்ளி முடிந்ததும் மாலை நேரத்தில், 2 மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 255 மையங்கள் செயல்படுகின்றன.

    ஒவ்வொரு மையத்துக்கு ஒரு தன்னார்வலர் கற்பித்தல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் குடியிருப்பு பகுதிக்கே நேரில் சென்று வகுப்பு எடுக்கப்படுவதால் மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு அடைகின்றனர்.தன்னார்வலர்களுக்கு அந்தந்த குறுவள மையங்களில் பயிற்சி துவங்கியுள்ளது. வருகிற 26-ந்தேதி வரை நடக்கும் பயிற்சியில் 1 முதல் 5 வகுப்புகளை கையாள்பவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 6 முதல் 8 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் பயிற்சி வழங்கப்படுவதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் கரோலின் தெரிவித்தார்.

    ×