search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சி
    X

    கோப்புபடம்.

    இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கு பயிற்சி

    • மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பினை ஈடுசெய்ய இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது.
    • பள்ளி முடிந்ததும் 2 மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது.

    குடிமங்கலம் :

    கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 8-ம்வகுப்புகள் வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பினை ஈடுசெய்ய இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. தன்னார்வலர்கள் மூலம், தினமும் பள்ளி முடிந்ததும் மாலை நேரத்தில், 2 மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 255 மையங்கள் செயல்படுகின்றன.

    ஒவ்வொரு மையத்துக்கு ஒரு தன்னார்வலர் கற்பித்தல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் குடியிருப்பு பகுதிக்கே நேரில் சென்று வகுப்பு எடுக்கப்படுவதால் மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு அடைகின்றனர்.தன்னார்வலர்களுக்கு அந்தந்த குறுவள மையங்களில் பயிற்சி துவங்கியுள்ளது. வருகிற 26-ந்தேதி வரை நடக்கும் பயிற்சியில் 1 முதல் 5 வகுப்புகளை கையாள்பவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 6 முதல் 8 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் பயிற்சி வழங்கப்படுவதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் கரோலின் தெரிவித்தார்.

    Next Story
    ×