search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்களுக்கு"

    • நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது
    • கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டத்தை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்

    நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மேரி பிரின்சி லதா, ஆணையாளர் ஆனந்த மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் முத்துராமன், ஜவகர், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர்கள் மீனாதேவ், நவீன்குமார், ரமேஷ், வீரசூரபெருமாள், சேகர், உதயகுமார், கோபால் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டத்தை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இதன் மூலமாக ஒரு கோடி 6 லட்சம் பெண்கள் பயனடைகிறார்கள். எனவே நாகர்கோவில் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் சார்பாக முதல்-அமைச்சருக்கு நன்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். இதையடுத்து கூட்டத்தில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகர பகுதியில் சாலைகள் போடப்பட்ட பிறகு பைப்லைd; mமைப்பதற்காக தோண்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநகர பகுதியில் வீடுகளில் உறிஞ்சி குழாய் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு சில வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு கழிவு நீர் ஓடைகள் அடைக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் இடமில்லாதவர்கள் இல்லாதவர்களுக்கு மாற்று வழி வகை செய்ய வேண்டும். சாக்கடை தண்ணீரை கால்வாயில் விடுவதால் குடிநீர் மற்றும் விவசாயமும் பாதிக்கப்படும்.அதை தடுக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நாகர்கோவில் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் இ-சேவை மையம் திறக்க வேண்டும். நாகர்கோவில் ஆம்னி பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கட்டினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் இதில் அக்கறை காட்டாதது ஏன் என்று கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலத்திற்கு முன்னதாக என்னென்ன சாலைகள் சீரமைக்கப்பட உள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படும். அதற்கு முன்னதாக அந்த சாலைகளில் பைப் லைன்கள் போட வேண்டியது இருந்தால் அதை போடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன்பிறகு தான் சாலை அமைக்க வேண்டும். சாலை அமைத்த பிறகு பைப்லைன் போடுவதற்கு தோண்டக்கூடாது. உறிஞ்சி குழாய் அமைப்பதன் மூலமாக சுகாதாரத்தை பேணி பாதுகாக்க முடியும்.

    எனவே தான் உறிஞ்சு குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியை முன்மாதிரியான மாநகராட்சியாக மாற்ற இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் இடம் இருப்பவர்கள் கண்டிப்பாக உறிஞ்சிக்குழாய் அமைக்க வேண்டும். இடமில்லாதவர்களுக்கு பொது இடங்களில் உறிஞ்சிக்குழாய் அமைத்து கழிவுநீர் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். ஆம்னி பஸ் நிலையத்தில் அரசின் விதிமுறைக்குட்பட்டு தான் பணி நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் அடியில் இருந்து வருகிறது. இருப்பினும் பொதுமக்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புத்தன்அணையிலிருந்து நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்படும் தண்ணீரை பொதுமக்களுக்கு தற்பொழுது சப்ளை செய்து வருகிறோம். நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் இ-சேவை மையம் திறப்பு தொடர்பாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    தி.மு.க. பெண் கவுன்சிலர் போராட்டம்

    நாகர்கோவில் மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் மோனிகா பேசினார். அப்போது தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள போர்வேலில் இருந்து வேறு வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் எனது வார்டில் தண்ணீர் சரிவர சப்ளை செய்யப்படவில்லை. இது தொடர்பாக அதிகாரியிடம் பலமுறை கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினார். உடனடியாக தான் இருக்க இருந்து அமர்ந்து தரையில்அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். திமுக கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • எழுதிக் கொடுப்பதற்காக இரண்டு பெண் தன்னார்வ லர்களை நியமித்துள்ளார்.
    • அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுக்கின்றனர்.

    ஈரோடு, 

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரு கிறது. கலெக்டர் தலைமை யில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனுவாக எழுதி அதை கலெக்டரிடம் வழங்குவார்கள்.

    கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த மனுவை கொடுத்து நட வடிக்கை எடுக்க உத்தர விடுவார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனு எழுத கலெக்டர் அலுவலக வெளி நுழைவுவாயில் 7-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள் அவர்களிடம் சென்று எழுதிக் கொடுக்க சொல்வார்கள்.

    அவர்களும் சம்பந்த ப்பட்ட பொது மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் கூறி யவாறு மனுக்களை எழுதி கொடுப்பார்கள். இதில் பல்வேறு பிரச்சனை கள் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    இதனை அடுத்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதன்படி இன்று முதல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொது மக்கள் தங்களது பிரச்சி னைகள் குறித்து மனுவாக எழுதிக் கொடுப்பதற்காக இரண்டு பெண் தன்னார்வ லர்களை நியமித்துள்ளார். அவர்கள் பொதுமக்கள் சொல்லும் கோரிக்கைகளை மனுவாக அவர்களுக்கு ஏற்றவாறு எழுதி கொடுக்கின்றனர். இதற்காக தன்னார்வலர்கள் பேப்பர் பேனா வைத்து ள்ளனர். அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுக்கின்றனர். கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    தன்னார்வலர்கள் தங்களிடம் வரும் பொது மக்களிடம் நிறுத்தி நிதான மாக என்ன பிரச்சனை என்று கேட்டு அவர்களுக்கு ஏற்றவாறு தெளிவாக மனுவில் எழுதிக் கொடுக்கின்றனர்.

    கருங்கல்பாளையம் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காவிரி ரோட்டில் உள்ள எடை நிலையம் ஒன்றின் அருகில் இளைஞர் ஒருவர் மது போதையில் சுற்றித் திரிந்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்துள்ளார்.

    போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர், கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23) என்பது தெரியவந்தது.

    இதேபோல, வண்டியூரான் கோவில் பகுதியிலும் போலீசார் ரோந்து சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த மோகன் ராஜ் (22) என்பவரும் மதுபோதையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, கருங்கல்பாளையம் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    • நம்பியூர் அடுத்த சின்னகோசணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பூதநாச்சியம்மன் மற்றும் நாட்ராயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
    • ருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக 1200க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு 60 கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு விருந்து அளிக்கப்படுவது விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த சின்னகோசணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பூதநாச்சியம்மன் மற்றும் நாட்ராயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த கோவிலின் திருவிழா ஓராண்டுக்கு ஒரு முறை சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக 1200க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு 60 கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு விருந்து அளிக்கப்படுவது விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொள்வார்கள்.

    இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த கோவிலின் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக கோவில் திருவிழா நடைபெறவில்லை. அதனைத் தொடர்ந்து மூன்று வருடத்துக்கு பிறகு இந்த வருடத்திற்கான திருவிழா ஆனி மாதம் 28-ந் தேதி மஞ்சள் முடிப்புடன் தொடங்கியது. கடந்த செவ்வாய் இரவு அணி வைத்து நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று இரவு காட்டு கோவிலுக்கு படைக்களம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. அதனைத் தொடர்ந்து 1200 க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் வாங்கப்பட்டு அதனை வெட்டி பொதுமக்களுக்கு கிடாய் விருது நடந்தது. இதற்காக 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சமையல் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்காக கோவில் அருகே பெரிய சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு கிடாய் விருந்து பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.

    இதில் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மேலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று திருவிழாவை முன்னிட்டு பூத நாச்சி அம்மன் மற்றும் நாட்ராய சாமி சிறப்பு அலங்காரத்தில் பொதுமக்களுக்கு அருள் பாலித்தனர். அதைத்தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமை மறுபூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.

    • காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஆற்றோரம் வசிக்கும் பொதுமக்கள பாதிக்கப்படுகின்றனர்.
    • பஞ்சமி நிலம், மற்றும் புறம்போக்கு நிலத்தை மீட்டு, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பள்ளிப்பாளையம்:

    ஜனநாயக மக்கள் கழகத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், நிறுவன தலைவர் ஆத்துார் கண்ணன் கலந்து கொண்டு சிறப்புறையற்றினர். இதனை தொடர்ந்து, உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின் கட்டணத்தை உடனடியாக மாநில அரசு திரும்ப பெற வேண்டும்.காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஆற்றோரம் வசிக்கும் பொதுமக்கள பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் பஞ்சமி நிலம், மற்றும் புறம்போக்கு நிலத்தை மீட்டு, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குழந்தைவேல், பள்ளிப்பாளையம் நகர தலைவர் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    • மூர்த்திகளுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை பாரம்பரியமாய் கொண்டாடும் கும்பிடுதல் விழா நடைபெற்றது.
    • சுமார் 5 ஆயரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பள்ளிப்பாளையம்:

    பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை அடுத்த ஆனங்கூர் அண்ணாநகர் பகுதியில் ஸ்ரீ விச்வசேனர், ஸ்ரீ தேவி -பூ தேவி சமேதாய ஆதிகேசவ பெருமாள் சக்கரயோக நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ பக்த ஆஞ்சநேய சாமி , நவக் கிரஹ மூர்த்திகளுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை பாரம்பரியமாய் கொண்டாடும் கும்பிடுதல் விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

    தொடக்க விழாவில் அனங்கூர் பஞ்சாயத்து தலைவர் சிங்காரவேலு தலைமையில் அன்னதானம் நடந்தது. இதனை முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன் தொடங்கி வைத்தார். சுமார் 5 ஆயரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×