search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "to the public"

    • எழுதிக் கொடுப்பதற்காக இரண்டு பெண் தன்னார்வ லர்களை நியமித்துள்ளார்.
    • அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுக்கின்றனர்.

    ஈரோடு, 

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரு கிறது. கலெக்டர் தலைமை யில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனுவாக எழுதி அதை கலெக்டரிடம் வழங்குவார்கள்.

    கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த மனுவை கொடுத்து நட வடிக்கை எடுக்க உத்தர விடுவார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனு எழுத கலெக்டர் அலுவலக வெளி நுழைவுவாயில் 7-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள் அவர்களிடம் சென்று எழுதிக் கொடுக்க சொல்வார்கள்.

    அவர்களும் சம்பந்த ப்பட்ட பொது மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் கூறி யவாறு மனுக்களை எழுதி கொடுப்பார்கள். இதில் பல்வேறு பிரச்சனை கள் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    இதனை அடுத்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதன்படி இன்று முதல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொது மக்கள் தங்களது பிரச்சி னைகள் குறித்து மனுவாக எழுதிக் கொடுப்பதற்காக இரண்டு பெண் தன்னார்வ லர்களை நியமித்துள்ளார். அவர்கள் பொதுமக்கள் சொல்லும் கோரிக்கைகளை மனுவாக அவர்களுக்கு ஏற்றவாறு எழுதி கொடுக்கின்றனர். இதற்காக தன்னார்வலர்கள் பேப்பர் பேனா வைத்து ள்ளனர். அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுக்கின்றனர். கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    தன்னார்வலர்கள் தங்களிடம் வரும் பொது மக்களிடம் நிறுத்தி நிதான மாக என்ன பிரச்சனை என்று கேட்டு அவர்களுக்கு ஏற்றவாறு தெளிவாக மனுவில் எழுதிக் கொடுக்கின்றனர்.

    • நம்பியூர் அடுத்த சின்னகோசணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பூதநாச்சியம்மன் மற்றும் நாட்ராயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
    • ருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக 1200க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு 60 கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு விருந்து அளிக்கப்படுவது விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த சின்னகோசணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பூதநாச்சியம்மன் மற்றும் நாட்ராயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த கோவிலின் திருவிழா ஓராண்டுக்கு ஒரு முறை சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக 1200க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு 60 கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு விருந்து அளிக்கப்படுவது விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொள்வார்கள்.

    இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த கோவிலின் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக கோவில் திருவிழா நடைபெறவில்லை. அதனைத் தொடர்ந்து மூன்று வருடத்துக்கு பிறகு இந்த வருடத்திற்கான திருவிழா ஆனி மாதம் 28-ந் தேதி மஞ்சள் முடிப்புடன் தொடங்கியது. கடந்த செவ்வாய் இரவு அணி வைத்து நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று இரவு காட்டு கோவிலுக்கு படைக்களம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. அதனைத் தொடர்ந்து 1200 க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் வாங்கப்பட்டு அதனை வெட்டி பொதுமக்களுக்கு கிடாய் விருது நடந்தது. இதற்காக 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சமையல் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்காக கோவில் அருகே பெரிய சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு கிடாய் விருந்து பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.

    இதில் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மேலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று திருவிழாவை முன்னிட்டு பூத நாச்சி அம்மன் மற்றும் நாட்ராய சாமி சிறப்பு அலங்காரத்தில் பொதுமக்களுக்கு அருள் பாலித்தனர். அதைத்தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமை மறுபூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.

    ×