search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wandered around under"

    கருங்கல்பாளையம் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காவிரி ரோட்டில் உள்ள எடை நிலையம் ஒன்றின் அருகில் இளைஞர் ஒருவர் மது போதையில் சுற்றித் திரிந்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்துள்ளார்.

    போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர், கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23) என்பது தெரியவந்தது.

    இதேபோல, வண்டியூரான் கோவில் பகுதியிலும் போலீசார் ரோந்து சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த மோகன் ராஜ் (22) என்பவரும் மதுபோதையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, கருங்கல்பாளையம் போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    ×