search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. போஸ்டர்களால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு
    X

    ராமநாதபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. போஸ்டர்கள்.

    அ.தி.மு.க. போஸ்டர்களால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு

    • அ.தி.மு.க. போஸ்டர்களால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • அன்வர்ராஜா அ.தி.மு.க.-வில் இருந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அன்வர்ராஜா அ.தி.மு.க.-வில் இருந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார். அவர் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் போஸ்டர் ஒட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    இன்று (24-ந்தேதி) எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அன்வர்ராஜா ஒட்டி யுள்ள போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ''தலைவா ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி, சிதறி கிடக்கிறது-நாங்கள் பதறி துடிக்கிறோம் காப்பாற்றுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

    மாவட்ட அ.தி.மு.க, செயலாளர் எம்.ஏ. முனிய சாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சரவணகுமார் ஆகியோர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ''தலைவா நீங்கள் துவக்கிய கட்சியை அழிக்க நினைத்த களைகளை காணாமல் போகச் செய்தாய். உங்கள் வழியில் ஒட்டுமொத்த தொண்டர்களால் ஒற்றைத் தலைமையை உருவாக்கி கழகத்தை தலைநிமிரச் செய்து எங்களை காப்பாற்றிய தங்க தலைவா'' என குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த 2 போஸ்டர்களும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    Next Story
    ×