search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்வர்ராஜா"

    • அ.தி.மு.க. போஸ்டர்களால் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • அன்வர்ராஜா அ.தி.மு.க.-வில் இருந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அன்வர்ராஜா அ.தி.மு.க.-வில் இருந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார். அவர் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் போஸ்டர் ஒட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    இன்று (24-ந்தேதி) எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அன்வர்ராஜா ஒட்டி யுள்ள போஸ்டரில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ''தலைவா ஏழை மக்களுக்காக நீங்கள் துவங்கிய கட்சி, சிதறி கிடக்கிறது-நாங்கள் பதறி துடிக்கிறோம் காப்பாற்றுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

    மாவட்ட அ.தி.மு.க, செயலாளர் எம்.ஏ. முனிய சாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சரவணகுமார் ஆகியோர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ''தலைவா நீங்கள் துவக்கிய கட்சியை அழிக்க நினைத்த களைகளை காணாமல் போகச் செய்தாய். உங்கள் வழியில் ஒட்டுமொத்த தொண்டர்களால் ஒற்றைத் தலைமையை உருவாக்கி கழகத்தை தலைநிமிரச் செய்து எங்களை காப்பாற்றிய தங்க தலைவா'' என குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த 2 போஸ்டர்களும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, வரத்துக் கால்வாய் புனரமைப்பு பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்று அன்வர்ராஜா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 2015-2016-ம் நிதியாண்டு முதல் 2018- 2019 நிதியாண்டு வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த மாவட்ட ஆளுமை மற்றும் செயற்குழு கூட்டம், குழுவின் தலைவர், அன்வர்ராஜா எம்.பி. தலைமையில் நடந்தது.

    குழுவின் செயலாளரும், கலெக்டருமான நடராஜன் முன்னிலை வகித்தார். 2015-2016-ம் நிதியாண்டு முதல் 2018-2019 (தற்போதைய நிதியாண்டில் இது நாள் வரை) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், முதலமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், தாய் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம், தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டும் திட்டம், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பல்வேறு திட்டப் பணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள செலவினங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள திட்டப் பணிகள், நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் ஆகியவை குறித்து குழுவின் தலைவர் அன்வர்ராஜா எம்.பி. ஆய்வு செய்தார்.

    இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, மாவட்டத்தில் முன்னேற்றத்தில் உள்ள தடுப்பணை கட்டும் பணிகள், நீர்நிலை சீரமைப்பு பணிகள், வரத்துக் கால்வாய் புனரமைப்பு பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் மற்றும் ஊரக பகுதிகளுக்கான மின்சார விநியோகம் ஆகியவற்றில் பொதுமக்கள் சிரமப்படாதவாறு கூடுதல் கவனம் செலுத்தி அதிகாரிகள் சிரத்தையோடு பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹென்சி லீமா அமாலினி, ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சிவராணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்லத்துரை, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வேளாண்மை) ராஜா, (நிலம்) அமிர்தலிங்கம், (வளர்ச்சி பிரிவு) உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×