search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic eradication"

    • சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி 4 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
    • தன்னார்வலர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம், ரெயின்போ ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து வலியுறுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் ஏப்ரல் 3 ம் தேதி பிளாஸ்டிக் விழிப்புணர்வை வலியுறுத்தி சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி சுமார் 350 கி.மீ., தூரம் ராமஜெயம்(வயது 70), ரங்கசாமி,(63), மகேஷ்(30), தரணி(19) ஆகிய 4 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.இவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் . தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், தங்கலட்சுமி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி சங்க செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார்.சைக்கிள் பயணம் மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துக்குமார், ஆறுமுகம், கதிர், திருமூர்த்தி மற்றும் தன்னார்வலர்கள், சித்தம்பலம் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிா்க்க வேண்டும்.
    • நெகிழி மண்ணுக்கும், உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 சாா்பில் மங்கலம் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் சுற்றுச்சூழல் அலுவலா் சாந்தி வரவேற்றாா். பள்ளி முதல்வா் பில்ஸி தலைமை வகித்தாா்.இந்த நிகழ்ச்சியில் நாட்டுநலப் பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் பேசியதாவது:-

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிா்க்க வேண்டும். எங்கு சென்றாலும் துணிப் பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். நெகிழி மண்ணுக்கும், உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். இவை மண்ணில் மக்காத தன்மை கொண்டதாகும். ஆகவே நாம் குப்பைகளைப் போடும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து போட வேண்டும். ஆகவே சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என்றாா்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடா்பான உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    • விக்கிரவாண்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர் .

    விழுப்புரம்.

    விக்கிரவாண்டி பேரூராட்சியில் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பஸ் நிலையத்தில் நடந்த பேரணியை பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் , துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி மீண்டும் மஞ்சள்பை கோஷத்தை எழுப்பியபடி,பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி சென்றனர் .

    முன்னதாக பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர் . பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை ,துணை சேர்மன் பாலாஜி, சப்–இன்ஸ்பெக்டர் ஆம்ஸ்டிராங், சுகாதார ஆய்வாளர் பிருத்திவிராஜ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனந்தி, சுதா, வீரவேல், சுரேஷ், வர்த்தகர் சங்க செயலாளர் ஜியாவுதீன் , பொருளாளர் சாதிக் பாட்ஷா. துணை தலைவர் சர்புதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    பிளாஸ்டிக் ஒழிப்பு விவகாரத்தில் அதிகாரிகளை கண்டித்து 3 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். அதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம் என்று விக்கிமராஜா பேசியுள்ளார். #vikramaraja #plasticeradication

    வள்ளியூர்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து அரசு முறையாக தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக வணிகர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும்.

    கடைகளுக்கு வரும் பொதுமக்கள் இன்று வரை யாருமே துணிப்பையுடன் வருவதில்லை. ஆனால் வியாபாரிகள் பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து முன் முயற்சி எடுத்து கொண்டிருக்கிறோம். இதனை விட்டுவிட்டு அரசு துறை அதிகாரிகள் வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து கடைகளுக்கு சீல் வைத்தாலோ அல்லது அபராதம் விதித்தாலோ தமிழகம் தழுவிய அளவில் 3 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். அதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம்.

    ஆன்லைன் வர்த்தகத்தில் சட்ட விதிகளை ஒழுங்கு படுத்த இடைக்கால தடை விதித்துள்ளனர். இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அது கண்துடைப்பாக இல்லாமல் வர்த்தக துறையில் இருந்து ஆன் லைன் வர்த்தகத்தை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை. குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் ஆதரவு யாருக்கு என்பதை எங்களது ஆட்சிகுழு உறுப்பினர்கள் கூடி முடிவு செய்வோம். அதே நேரத்தில், வியாபாரிகளை பழித்து கொண்டவர்கள் ஆட்சியில் இருக்க முடியாது என்பதை மட்டும் தெளிவாக தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #vikramaraja #plasticeradication

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கருத்தரங்கம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடை பெறுகிறது.
    கிருஷ்ணகிரி:

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்து, பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய மறு சுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் உற்பத்தி, இருப்பு, பயன்பாடு மற்றும் ஒருமுறை பயன்படுத்தி வீசும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை தடை செய்து, பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி அரசு துறைகள், அரசு சாரா துறைகள், அனைத்து தொழிற்சாலைகளின் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஓட்டல் உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், ஓசூர் மக்கள் சங்கம், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் மற்றும் வணிக சங்கங்களின் பங்கேற்புடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கருத்தரங்கம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலை ஓசூர் நகராட்சி அலுவலகத்திலும், மாலை 3 மணிக்கு தேன்கனிக்கோட்டையிலும் நடைபெறுகிறது. இதேபோல் வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஓட்டலிலும், மாலை 3 மணிக்கு ஊத்தங்கரை ஸ்ரீவாரி திருமண மண்டபத்திலும் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது.

    இந்த கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடலில் அனைத்து அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரியை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், தாளாளர்கள் கலந்துகொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பிளாஸ்டிக் ஒழிப்பு காரணமாக மூடப்படும் தொழிற்சாலைகளுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்கும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். #TNMinister #MCSampath
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா மாவட்டமாக மாற்றிட மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணி தொடக்க விழா கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கலெக்டர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை மாற்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதனால் பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது.

    பிளாஸ்டிக் பொருட்கள் பூமியில் இருந்தால் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும். மேலும் கால்நடைகள் இந்த பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டால் பல்வேறு நோய்கள் வரக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்படும். ஆகையால் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அவ்வாறு மூடப்படும் தொழிற்சாலைகளுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்கும். மேலும் அவர்களுக்கு பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்கள் தயாரிப்பதற்கான வழிவகைகள் வழங்கப்படும்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகள் பேரூராட்சி நகராட்சி ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை ஒருங்கிணைத்து இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிளாஸ்டிக்கிலான பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தாமல் முழுமையாக தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #MCSampath
    சிவகாசியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.
    சிவகாசி:

    ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட விரிப்புகள், தட்டுகள், கோப்பை, உறிஞ்சு குழல்கள், தூக்குபைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், டம்ளர், கொடிகள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று காலை சிவகாசியில் விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது. கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

    பேரணி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் தொடங்கி ரதவீதி வழியாக பஸ் நிலையத்தை அடைந்தது. இதில் மகளிர் சுயஉதவிக்குழுவினர், பள்ளி மாணவர்கள், சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்கள், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷமிட்டபடி சென்றனர். அண்ணா காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துணிப் பைகளை வழங்கினார்.

    முன்னதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். அமைச்சர், உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் அதை திருப்பிக் கூறினர். பின்னர் பஸ் நிலையத்துக்கு வந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை அரசு மற்றும் தனியார் பஸ்களின் முன்பக்க கண்ணாடிகளில் ஒட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் சந்திர பிரபா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அதிகாரி உதய குமார், திட்ட அதிகாரி சுரேஷ் மற்றும் சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி அதிகாரிகள், சிவகாசி ஒன்றிய அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி, ஈஞ்சம்பள்ளி பி.கே.பி. சாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் விவேகானந்தா ரத்த தான இயக்கம் ஆகியவற்றின் சார்பில் மொடக்குறிச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    மொடக்குறிச்சி:

    ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி, ஈஞ்சம்பள்ளி பி.கே.பி. சாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் விவேகானந்தா ரத்த தான இயக்கம் ஆகியவற்றின் சார்பில் மொடக்குறிச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கொடி அசைத்து மொடக்குறிச்சி பேரூராட்சி செயல் அதிகாரி டார்த்தி தொடங்கி வைத்தார்.

    பி.கே.பி.சாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அதிகாரி லட்சுமணன், முதல்வர் வைஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொடக்குறிச்சி நால்ரோட்டில் தொடங்கிய இந்த ஊர்வலம் ஒன்றிய அலுவலகம், ஈஸ்வரன் கோவில் வீதி, மாரியம்மன் கோவில் வீதி, போலீஸ் நிலையம் உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நால்ரோட்டில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகளை மாணவ- மாணவிகள் கையில் ஏந்தியபடி சென்றனர்.

    இதில் வேளாளர் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் லலிதா, செல்வி, கவிதா, சுகன்யா, விவேகானந்தா ரத்த தான இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா மற்றும் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர் ஆகியோரின் அறிவுரையின்படி தென்காசி பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    தென்காசி:

    குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் பராசக்தி வித்யாலயா பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பராசக்தி வித்யாலயா பள்ளியில் இருந்து தொடங்கி பூங்கா சாலை, பேருந்து நிலையம், குற்றாலநாதர் சாலை வழியாக கூட்டரங்கம் வந்தடைந்தது. பேரணியை செயல் அலுவலர் கனகராஜ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மேலும் குற்றாலத்தில் உள்ள பண்பொழி திருமலைக்குமாரசுவாமி தேவஸ்தானம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி பள்ளியில் தொடங்கி ராமலயம் பகுதி முழுவதும் நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    பேரணியில் பேரூராட்சி சுகாதாரஆய்வாளர் ராஜகணபதி, பராசக்தி வித்யாலயா பள்ளியின் முதல்வர் வேலுச்சாமி, திருமலைக்குமாரசுவாமி தேவஸ்தானம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமுதகலா, சுகாதார ஆய்வாளர் சுடலைமணி, பேரூராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தென்காசி, மேலகரம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் லிங்கராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சரவணன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியர் துரை மற்றும் ஆசிரியைகள், சுகாதார ஆய்வாளர் சுடலைமணி, பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் தங்கராஜ் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பண்பொழி பேரூராட்சி யில் நடைபெற்ற பேரணியில் பண்பொழி ஜாய் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் இ.மசூது ராவுத்தர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல்அலுவலர் முரளி, பள்ளி தாளாளர் ,தலைமை ஆசிரியர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இலஞ்சி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை செயல் அலுவலர் லோபாமுத்திரை தலைமையில் இலஞ்சி ராமசாமிப்பிள்ளை மேல்நிலைப்பள்ளி மற்றும் வள்ளிநாயகா துவக்கப்பள்ளி மாணவ- மாணவிகள் மூலம் நடத்தப்பட்டது.

    சாம்பவர்வடகரை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் நடத்தப்பட்டது. பேரணியில் செயல் அலுவலர் அபுல்கலாம் ஆசாத், அரசு மருத்துவர் கார்த்தி, சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மணிமுத்தாறு பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ரிஹானா நர்சரி பள்ளி மாணவ -மாணவிகள் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியில் பேரூராட்சி தலைமை எழுத்தர் மாணிக்கராஜ், மணிமுத்தாறு இன்ஸ்பெக்டர், அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ரிஹானா பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் பேரூராட்சி அனைத்து பணியாளர்கள், சமுதாய பரப்புரையாளர்கள் மற்றும் சுயஉதவிகுழுக்கள் கலந்து கொண்டார்கள்.

    பெருங்குளம் பேரூராட்சியில் செயல் அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி தக்கர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆனி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டெய்சி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெருங்குளம் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சாயர்புரம் பேரூராட்சி பகுதியில் செயல் அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி தூயமேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் சவுந்தரா முன்னிலையில் நடந்தது. தொடர்ந்து மாலையில் நடுவைக்குறிச்சி ஆர்.சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சகாயமேரி முன்னிலையிலும் நடைபெற்றது. பேரணியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், சுகாதார ஆய்வாளர் வேல்மயில் மற்றும் சாயர்புரம் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஜெயங்கொண்டம் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் சார்பில் மனிதசங்கிலி விழிப்புணர்வு நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உலக சுற்று சூழல் தினத்தை ஒட்டி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி மற்றும் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

    பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்  வகையில் கழுத்தில் மஞ்சள் நிற துணிப்பையை அணிந்து கோஷங்கள் எழுப்பியவாறு மனித சங்கிலியில் நின்றனர், 
    மேலும் பிளாஸ்டிக் பைகளை உடையாக அணிந்த ஒருவரை பாரத மாதா சூலம் கொண்டு விரட்டும் வகையில் இரண்டு மாணவர்கள் நடித்து காண்பித்தனர்.

    இதனை அடுத்து மரங்கள் நட வேண்டும், மரத்தால் கிடைக்கும் நன்மைகள், இருக்கும் மரங்களை பாதுகாப்பது போன்ற சிறிய நாடகத்தை மாணவர்கள் பள்ளியின் அருகே சாலை யோரத்தில் பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் நடித்து காட்டினர். இந்நிகழ்ச்சியை உடையார்பாளையம் கல்வி மாவட்ட அதிகாரி விஜய லட்சுமி  தொடங்கி  வைத்தார், நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அதிகாரி இளங்கோவன், தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சியப்பன், தலைமை ஆசிரியை வெற்றிச்செல்வி மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர். 

    நிகழ்ச்சி ஏற்பாட்டை பள்ளியின் அறிவியல் ஆசிரியரும், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான செங்குட்டுவன் செய்திருந்தார்.
    ×