search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "factories closed"

    பிளாஸ்டிக் ஒழிப்பு காரணமாக மூடப்படும் தொழிற்சாலைகளுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்கும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். #TNMinister #MCSampath
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லா மாவட்டமாக மாற்றிட மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணி தொடக்க விழா கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கலெக்டர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை மாற்ற தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதனால் பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது.

    பிளாஸ்டிக் பொருட்கள் பூமியில் இருந்தால் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும். மேலும் கால்நடைகள் இந்த பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டால் பல்வேறு நோய்கள் வரக்கூடிய அவல நிலைக்கு தள்ளப்படும். ஆகையால் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அவ்வாறு மூடப்படும் தொழிற்சாலைகளுக்கு அரசு ஊக்கத் தொகை வழங்கும். மேலும் அவர்களுக்கு பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்கள் தயாரிப்பதற்கான வழிவகைகள் வழங்கப்படும்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகள் பேரூராட்சி நகராட்சி ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை ஒருங்கிணைத்து இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிளாஸ்டிக்கிலான பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தாமல் முழுமையாக தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #MCSampath
    பொருளாதாரம் மோசமானதால் தமிழ்நாட்டில் மட்டும் 57 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 5 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். #PChidambaram
    நாசிக்:

    மராட்டிய மாநில காங்கிரஸ் சார்பில் நாசிக்கில் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய சூழல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பேசியதாவது:-

    பா.ஜனதா மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்து விட்டது. முதலீட்டு நடவடிக்கைகள் முடங்கி போய்விட்டன.


    கடந்த 4 ஆண்டுகளில் 70 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதாக பா.ஜனதா அரசு கூறுவது சுத்த பொய். லட்சக்கணக்கானோர் தங்களது வேலைகளை இழந்து உள்ளனர் என்பதே உண்மை.

    பொருளாதார நெருக்கடி நிலையால் தமிழ்நாட்டில் மட்டும் 57 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, 5 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளனர்.

    இதற்கு தீர்வு காண வேண்டிய பிரதமரும், மத்திய மந்திரிகளும் அதுபற்றி பேசாமல் மவுனம் காத்து வருகிறார்கள்.

    பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் மக்களை அடித்து கொல்லும் கும்பலில் உள்ளவர்கள் கூட வேலை இல்லாதவர்கள்தான்.

    பிரணாப் முகர்ஜி மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது ஜி.எஸ்டி.யை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ஜனதாவினர் தற்போது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்து பெருமைப்பட பேசி வருகின்றனர்.

    இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார். #Congress #PChidambaram
    ×