search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore jail"

    வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நள்னியை சந்திக்க தாய் பத்மாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.
    வேலூர்:

    சிறை விதிகளை மீறி முருகன்-நளினியும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அவர்கள் பார்வையாளர்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் வசித்து வரும் நளினியின் தாய் பத்மா (80). இன்று நளினியை சந்திக்க வேலூர் பெண்கள் ஜெயிலுக்கு வந்தார். அப்போது ஜெயில் அதிகாரிகள் நளினியை சந்திக்க தடை இருப்பதால் அவரை பார்க்க முடியாது என்று கூறினர்.

    ஜெயில் அதிகாரிகள் நளினியை பார்க்க அனுமதிக்காததால் பத்மா ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இதேபோல் முருகனை பார்க்கவும் ஜெயிலுக்கு சென்ற அவர் அங்கும் அனுமதியில்லாததால் திரும்பி சென்றார்.

    வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகனை காப்பாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி தாயார் பத்மாவதி மனு தாக்கல் செய்துள்ளார். #nalinimurugan #rajivgandhi #vellorejail
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர்.

    7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 8-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9-ந்தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து 6-வது நாளாக அவர் உண்ணாவிரம் இருந்து வருகிறார்.

    சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் காரணமாக 2 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகன் ஆகியோரை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று நளினியின் தாயார் பத்மாவதி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    நளினி தாயார் பத்மாவதி தாக்கல் செய்த மனு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகன் ஆகியோரை காப்பாற்ற கோரி தமிழக அரசு, டிஜிபி, சிறைத்துறையிடம் நளினி தயார் பத்மா ஏற்கனவே மனு அளித்துள்ளார்.  #nalinimurugan #rajivgandhi #vellorejail 
    தங்களை விடுதலை செய்ய கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த முருகன்-நளினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #nalinimurugan #rajivgandhi #vellorejail

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் உள்ளனர்.

    7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் பல மாதங்களாகியும் அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலை உணவை தவிர்த்து 8-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9-ந் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் இன்று காலை உணவையும் சாப்பிட மறுத்துவிட்டார். தொடர்ந்து 6-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்கள். தொடர் உண்ணாவிரதம் காரணமாக 2 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து அவர்கள் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு முருகனுக்கு 2 பாட்டில் குளுகோஸ், நளினிக்கு 2 பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முருகன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறைகண்காணிப்பாளர் மூலம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் சிறையிலேயே தான் இறந்துவிட்டால், தனது உடலை அரசு மருத்துவமனைக்கு தானம் செய்ய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், தன்னை விடுதலை செய்ய கோரி வேலூர் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். #nalinimurugan #rajivgandhi

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசின் சிபாரிசின் மீது நடவடிக்கை எடுக்காமல் கவர்னர் காலம் கடத்தி வருகிறார். இதுகுறித்து முருகன் கடந்த 31-ந் தேதி வேலூர் மத்தியசிறை அதிகாரிகள் மூலம் கவர்னருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    அதில் ராஜீவ்காந்தி கொலைக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை, வேண்டுமென்றால் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள். அல்லது கருணை கொலை செய்யுங்கள், இல்லையென்றால் உண்ணாவிரதம் இருந்து சாகவிடுங்கள் என்று கூறி உள்ளார்.

    இதனால் அவர் கடந்த 2-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலை உணவையும் சாப்பிட மறுத்து விட்டார். தொடர்ந்து 7-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருக்கிறார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #nalinimurugan #rajivgandhi

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் இன்று 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். #Murugan #Hungerstrike
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசின் சிபாரிசின் மீது நடவடிக்கை எடுக்காமல் கவர்னர் காலம் கடத்தி வருகிறார். இதுகுறித்து முருகன் கடந்த 31-ந் தேதி வேலூர் மத்திய சிறை அதிகாரிகள் மூலம் கவர்னருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    அதில் ராஜீவ்காந்தி கொலைக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை, வேண்டுமென்றால் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள். அல்லது கருணை கொலை செய்யுங்கள், இல்லையென்றால் உண்ணாவிரதம் இருந்து சாகவிடுங்கள் என்று கூறி உள்ளார்.

    இதனால் அவர் கடந்த 2-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலை உணவையும் சாப்பிட மறுத்து விட்டார். தொடர்ந்து 5-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருக்கிறார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இவருடைய வக்கீல் புகழேந்தி நேற்று வேலூர் ஜெயிலில் உள்ள முருகன் மற்றும் நளினியை சந்தித்து பேசினார்.

    கடந்த 2-ந்தேதி முதல் முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மேலும் முருகன் தனது அறையில் சாமிபடங்களை வைத்துள்ளார். அந்த அறையில் சிறை அதிகாரிகள் ஷூ கால்களுடன் சென்று அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் கோரிக்கை மனு கொடுத்துள்ளதால் அவரை அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Murugan #Hungerstrike

    முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், விடுதலை செய்யக்கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். #rajivgandhi #nalinimurugan #vellorejail

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், வேலூர் பெண்கள் சிறையில் நளினி முருகன் சந்திப்பு நேற்று காலை நடந்தது. இதற்காக பலத்த பாதுகாப்புடன் பெண்கள் சிறைக்கு முருகன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு நளினி முருகன் சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர், வேலூர் சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் முதல் தனது உண்ணாவிரதத்தை முருகன் தொடங்கினார். இரவு உணவும் அவர் சாப்பிடவில்லை.

    2-வது நாளாக இன்று காலையிலும் அவர் உணவு சாப்பிடவில்லை. தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது தொடர்பாக சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, தங்களது விடுதலையை முன் வைத்து முருகன் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

    தங்களது மனுவின் மீது கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். உண்ணாவிரதம் இருப்பது தொடர்பான மனுவையும் அவர் சிறை நிர்வாகத்திடம் அளித்துள்ளார் என்றனர். #rajivgandhi #nalinimurugan #vellorejail

    வேலூர் ஜெயிலில் குடியாத்தம் கைதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    குடியாத்தம் அருகே உள்ள தட்டப்பாறை சின்னாலிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 30), கடந்த ஆண்டு இவரது மனைவி வள்ளியை அடித்து கொலை செய்தார்.

    இந்த வழக்கில் குடியாத்தம் தாலுகா போலீசார் பிரபுவை கைது செய்ததனர்.பின்னர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் அவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கபட்டது.

    இதற்காக ஜெயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்தார். நேற்று பிரபுவுக்கு வலிப்பு ஏற்பட்டது. அவரை சிறைதுறையினர் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக இறந்தார்.

    வேலூர் ஜெயிலில் கைதிகள் பலர் உடல் நலம் பாதிக்கபட்டு வருவது தொடர்ச்சியாக நடக்கிறது. இன்று கைதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர் ஜெயிலில் கைதிக்கு செல்போன் சப்ளை செய்த சிறைக்காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் கைதிகளிடம் செல்போன், கஞ்சா, புகையிலை என சகல உல்லாச வசதிகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக உயரதிகாரிகள் அடிக்கடி சிறைக்குள் ஆய்வு நடத்தி செல்போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

    கடந்த மாதம் செய்யப்பட்ட ஆய்வில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், சிறையில் உள்ள காவலர்கள் உதவியுடன் தான் கைதிகள் இதுபோன்று உல்லாசம் அனுபவிப்பதாக உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலர்களை கையும் களவுமாக பிடிக்க ரகசியமாக குழு அமைத்து சிசிடிவி கேமராக்கள் மூலமாக ஆய்வு செய்தனர்.

    கடந்த மாதம் 17-ந் தேதி தலைமை காவலர் தேவதாஸ் என்பவர் சிறை கைதிகளுடன் மிக நெருக்கமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது நடமாட்டத்தை கண்காணித்த போது கைதிகளுக்கு வெளியில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் சப்ளை செய்ததார். அவரை கையும் களவுமாக அதிகாரிகள் பிடித்தனர். இதையடுத்து தேவதாஸ் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் மேலும் ஒரு சிறைக்காவலர் கைதிக்கு செல்போன், பணம் சப்ளை செய்ததாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    வாணியம்பாடி சேர்ந்த கார்வின் மோசஸ் (45) சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கும் சிறைகாவலர் கணபதிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    கணபதியிடம் செல்போன், பணம் ஆகியவற்றை வீட்டில் வாங்கி தருமாறு மோசஸ் கூறியுள்ளார். அதன்படி சிறைகாவலர் கணபதி வாணியம்பாடியில் உள்ள மோசஸ் குடும்பத்தினரிடம் புதிய செல்போன், பணம் ஆகியவற்றை வாங்கி ஜெயிலில் மோசசிடம் கொடுத்தார்.

    ஜெயிலில் காவலர்கள் நடத்திய சோதனையில் மோசஸ் அறையில் இருந்து செல்போன், பணம் பறிமுதல் செய்தனர். விசாரணையில் சிறைகாவலர் கணபதி அதனை வாங்கி கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி சிறைக்காவலர் கணபதியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    வேலூர் பெண்கள் தனிச்சிறையில் பணியாற்றும் 2ம் நிலை காவலர் திலகவதி (54) கடந்த செம்படம்பர் மாதம் பணிக்கு வந்தபோது நுழைவாயிலில் அவரை போலீசார் சோதனையிட்டனர்.

    அப்போது அவர் செல்போனை மறைத்து எடுத்து சென்றது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் பெண் போலீஸ் திலகவதியிடம் செல்போன் பறிமுதல் செய்த சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.1000 வழங்கியுள்ளார். #Nalini #Gajastorm

    வேலூர்:

    கஜா புயல் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை இழந்தும், மின்சாரம், குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர்.

    பல ஆயிரம் ஏக்கர் வாழை, தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல்வேறு தரப்பில் இருந்து புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பொருட்கள், உணவு ஆகியவற்றை நிவாரணமாக வழங்கி வருகின்றனர். மேலும் நிவாரண நிதியும் வழங்கி வருகின்றனர்.

    வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.1000 வழங்கியுள்ளார். நளினி ஜெயிலில் டெய்லரிங் வேலை செய்து வருகிறார். கைதிகளுக்கான துணிகளை தினமும் தைத்து கொடுக்கிறார்.

    இதன் மூலம் கடந்த மாதம் ரூ.1000 கூலி வாங்கினார். அந்த பணத்தை ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாளிடம் நிவாரணத்துக்கு அளிக்கும்படி வழங்கினார். அதனை சிறைத்துறை மூலம் அனுப்பி வைத்தனர்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென பல்வேறு தப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    சட்டரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நளினியின் வக்கீல் புகழேந்தி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நளினி கஜா புயல் நிவாரண பணிக்கு உதவி செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Nalini #Gajastorm

    வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்த தலைமை சிறைக்காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் கைதிகள் செல்போன், கஞ்சா பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த கைதி மண்ணில் புதைத்து வைத்திருந்த 3 செல்போன், ஒரு சிம்கார்டு சிக்கியது.

    கடந்த 2 மாதங்களில் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக பாகாயம் போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதில் ஜெயிலில் பணியாற்றும் முதன்மை தலைமை சிறைக்காவலர் செல்வின் தேவதாஸ் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாள், ஏட்டு செல்வின் தேவதாசை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    வேலூர் ஜெயிலில் சென்னை கைதி மண்ணில் புதைத்து வைத்திருந்த 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #VelloreJail
    வேலூர்:

    சென்னை எண்ணூரை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 40). கொலை வழக்கில் தண்டனை பெற்ற இவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக தகவல் வந்தது.

    இதனையடுத்து ஜெயில் காவலர்கள் ஜெயில் வளாகத்தில் சோதனையிட்டனர். அப்போது கார்மேகம் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு பின்னால் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 செல்போன், ஒரு சிம்கார்டு சிக்கியது.

    இது குறித்து ஜெயில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கார்மேகம் 3 செல்போன்களை மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இது பற்றி பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் செல்போனில் இருந்து யாருடன் பேசி உள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #VelloreJail
    வேலூர் ஜெயிலில் இருந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    வேலூர் ஜெயிலில் உள்ள 15 பெண் கைதிகள்- 185 ஆண் கைதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு சிறை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுவரை 100க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று ஆண்கள் ஜெயிலில் இருந்து 12 பேர், பெண்கள் ஜெயிலில் இருந்து 2 பேர் என மொத்தம் 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    ஜெயிலில் அவர்களுக்கு வேலை பார்த்ததற்கான பணம், உடமைகளை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

    ஜெயில் வாசலில் அவர்களது உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் ததும்ப அழைத்து சென்றனர்.
    ×