search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "van accident"

    உத்தமபாளையம் அருகே பைக் மீது மினி வேன் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 25). இப்பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக சூர்யா தனது நண்பர்கள் காதர் மைதீன் (வயது 29). சுருளி மஸ்தான் (39) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் உத்தமபாளையம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிரே வந்த மினி வேன் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது இதில் காதர் மைதீன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இவருக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்து 3 மாத கைக்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. சுருளி மஸ்தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார்.

    சூர்யா படுகாயங்களுடன் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் மினி வேன் டிரைவர் தங்கமாயன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். #tamilnews
    வேடசந்தூரில் மோட்டார்சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தங்கை கண்முன்னே பள்ளி மாணவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சமத்துவப்புரத்தை சேர்ந்தவர் காஜாமைதீன். பூ வியாபாரம் செய்து வருகிறார். அவரது மகன் முகமது ரபீக் (வயது15). வேடசந்தூரில் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். அவரது மகள் மும்தா பேகம் (14). அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    இன்று காலை முகமது ரபீக் தனது தங்கையுடன் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தான். ஒட்டன்சத்திரம்- வேடசந்தூர் சாலையில் சென்ற போது அந்த வழியாக பால் வேன் வந்தது. கண்ணி மைக்கும் நேரத்தில் வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டதில் முகமது ரபீக் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்ததும் தங்கை மும்தா பேகம் கதறி துடித்தார்.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாணவன் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தினை ஏற்படுத்திய வேன் டிரைவர் பிரின்ஸ் பிரபாகரனை கைது செய்தனர். #tamilnews
    குடவாசல் அருகே வேன் மோதிய விபத்தில் பட்டுக்கோட்டை பேராசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். வேன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குடவாசல்:

    குடவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் நாடிமுத்து (30). இவரது மனைவி கனிமொழி (வயது 23).  இவர்கள் இருவரும் குடவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்தனர். 

    இந்த நிலையில் நாடிமுத்தும், கனிமொழியும் மஞ்சக்குடி அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு நடந்து வந்துள்ளனர். அப்போது அரசவனங்காடு மேலத்தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் பிரகாஷ் (30) ஓட்டி வந்த வேன் நடந்து வந்த நாடிமுத்து, கனிமொழி ஆகியோர் மீது மோதியதில் இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே கனிமொழி பரிதாபமாக இறந்து விட்டார். நாடிமுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து குடவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து டிரைவர் பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வந்தவாசி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வேன் விபத்துகுள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த நம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருள் (40) சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார்.

    இந்த வேனில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் வந்தவாசியில் உறவினர் ஒருவர் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரவி இவரது மனைவி பூங்கொடி (40) அம்மு (40) செல்லம்மாள் (50) முனியம்மாள் (45) சக்கரபாணி ( 29) பாண்டியன் (45) முருகம்மாள் (45) செல்வி (50) பாக்கியம் (45) உள்ளிட்ட 15 பேர் பயணம் செய்தனர்.

    வந்தவாசி ஆரணி நெடுஞ்சாலை ஆயிலவாடி கூட்டுச் சாலை அருகே வோன் வந்த போது எதிர்பாராத விதமாக பின் சக்கரம் டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறி அருகில் உள்ள சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில் வேனில் பயணம் செய்த பூங்கொடி உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர். வேனை ஓட்டி வந்த அருள் காயமடைந்தார். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பூங்கொடி, முருகம்மாள், இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக வடவணக்கம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை புளியமரத்தில் வேன் மோதிய விபத்தில் பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    பெரம்பலூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் சாத்தனார் தெருவை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 62). இவர் சமீபத்தில் புதிய ஆம்னி வேன் ஒன்றை வாங்கினார். அந்த வாகனத்திற்கு பூஜை போடுவதற்காக கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தார்.

    இதையடுத்து நடராஜன் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட மொத்தம் 8 பேர் கடந்த 22-ந்தேதி காலை ஆத்தூரில் இருந்து புதிய வேனில் புறப்பட்டனர். வேனை உறவினரான மனோஜ்குமார் (20) ஓட்டினார்.

    முதலில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கோவிலுக்கு சென்றனர். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்தனர். நேற்று பகல் முழுவதும் மதுரையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் அவர்கள் திருச்சி வழியாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

    தொடர் பயணத்தால் ஏற்பட்ட களைப்பை போக்க திருச்சியை அடுத்த டோல்கேட் அருகே வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுத்தனர். பின்னர் இன்று அதிகாலை எழுந்த அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

    காலை 4 மணியளவில் அவர்களது வேன் பெரம்பலூர் மாவட்டம் எசனை மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீசியது. இதில் அந்த வேன் சாலையில் சற்று அலைக்கழிக்கப்பட்டது.

    இதையடுத்து வேனை நிறுத்த டிரைவர் மனோஜ்குமார் முயற்சி செய்தார். ஆனால் பலனளிக்காமல் வேமாக சென்ற வேன் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.

    இதில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஜெயரெத்தினம் (73), அவரது மகன் ராஜா (53), முருகன் (48), அவரது சகோதரர் நடராஜன் (68) ஆகிய 4 பேரும் பலியானார்கள்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெரம்பலூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய காயத்ரி, சுகுணா, யோகதர்ஷினி, டிரைவர் மனோஜ்குமார் ஆகியோரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்சு மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புதிய வாகனத்திற்கு பூஜை போட சென்றவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    மதுரை அருகே இன்று அதிகாலை நடந்த விபத்தில் தடுப்புச்சுவரில் வேன் மோதியது. இதில் டிரைவர்- கிளீனர் பலியானார்கள்.

    மதுரை:

    மதுரை சிந்தாமணி பர்மா காலனியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 23). சொந்தமாக சரக்கு வாகனம் வைத்திருந்த இவர் அதன் ஓட்டுநராகவும் பணியாற்றினார்.

    இந்த வாகனத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (23) கிளீனராக இருந்தார். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை சரக்கு வாகனத்தில் திருவாதவூரில் கோழிப்பண்ணையில் இருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு திருப்புவனம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    ரிங் ரோட்டை தாண்டி புளியங்குளம் அருகே வந்தபோது திடீரென்று மினிவேன் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய வாகனம் அங்குள்ள தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இதில் டிரைவர் சரவணன், கிளீனர் ஜெயராஜ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    தகவல் அறிந்த போலீசார் இருவரது உடல் களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவும் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கங்கைகொண்டான் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் மற்றும் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கயத்தாறு:

    நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் வேளார்குளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 52 ). இவரது மனைவி பார்வதி (50). இவர்களது உறவினர் திருமணம் சமீபத்தில் நடந்தது. இதையடுத்து திருமண தம்பதிகளை மறுவீடு அனுப்ப கோயம்புத்தூருக்கு நேற்று ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர்.

    வேனில் முருகன், பார்வதி மற்றும் 2 சிறுமிகள் உள்பட 10 பேர் சென்றனர். அவர்கள் கோவையில் புதுமண தம்பதியை விட்டு விட்டு மீண்டும் நெல்லையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    வேனை மானூர் அருகே உள்ள தெற்குபட்டியைச் சேர்ந்த ஜெயபால் (42) என்பவர் ஓட்டிவந்தார். அவர்களது வேன் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள புலவர்த்தான்குளத்தில் இன்று காலை வந்தது. அப்போது அந்த பகுதியில் லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

    சாலை வழுவழுப்பாக இருந்ததால் வேகத்தை குறைக்க வேன் டிரைவர் பிரேக் பிடிக்க முயன்றார். ஆனால் சாலையில் மழைநீர் நின்றதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே வேனின் டிரைவர் ஜெயபால், பயணம் செய்து வந்த பார்வதி ஆகிய இருவரும் பலியானார்கள்.

    வேனில் இருந்த இசக்கிமுத்து(37), அவரது மனைவி மணிமாலா(32), முருகன்(34), அவரது மனைவி பரமேஷ்வரி(33), லட்சுமி(62), சுதர்சன்(22) உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். இதில் அதிர்ஷ்டவசமாக வேனில் பயணம் செய்த 2 சிறுமிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கங்கை கொண்டான் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், படுகாயமடைந்த 7 பேரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் பலியான பார்வதி, ஜெயபால் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கங்கை கொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வாடிப்பட்டியில் இன்று காலை லாரி மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

    வாடிப்பட்டி:

    மதுரை செல்லூர் மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் விருமாண்டி (வயது 33). இவர் சிம்மக்கல்லில் உள்ள பழக்கமி‌ஷன் மண்டியில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று விருமாண்டி செல்லூர் அகிம் சாபுரத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் செல்வத்துடன் ஆந்திர மாநிலத்திற்கு மாம்பழங்கள் வாங்கச் சென்றார். அங்கு மாம்பழங்கள் வாங்கி விட்டு அவர்கள் நேற்று இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    இன்று காலை 6.30 மணி அளவில் வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி மேம்பாலத்தில் வேன் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவர் செல்வம், முன்னால் சென்ற லாரியை சரியாக கவனிக்க வில்லை. இதனால் வேக மாகச் சென்ற வேன் எதிர் பாராத விதமாக லாரியின் மீது மோதியது.

    இதில் வேனின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. விருமாண்டி இருக்கையிலேயே பிணமானார்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் வாடிப்பட்டி போலீசார் விரைந்துச் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த டிரைவர் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    மணப்பாறை அருகே இன்று காலை வேன் மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை தலை நசுங்கி பலியானது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து துவரங்குறிச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ளது காரைப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சண்முகம். துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ரெடிமேட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது 1½ வயது மகன் சித்தார்த். இன்று காலை தூங்கி எழுந்த குழந்தை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர் வீட்டினுள் வேலையில் இருந்தனர்.

    அப்போது சண்முகத்தின் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த வேனை கிளப்புவதற்காக அதே ஊரைச் சேர்ந்த டிரைவர் திருப்பதி (30), பின்னோக்கி நகர்த்தினார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை டிரைவர் கவனிக்கவில்லை.

    இதில் பின் சக்கரத்தில் குழந்தை சிக்கிக்கொண்டது. தலை நசுங்கிய நிலையில் கதறித்துடித்த குழந்தையின் அழுகுரல் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய குழந்தையை மீட்டு துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.

    ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. இதைப்பார்த்து குழந்தையின் பெற்றோர் வாயிலும், வயிற்றிலும் அடித்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது.

    பின்னர் பலியான குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் வேன் டிரைவர் திருப்பதியை கைது செய்தனர்.

    டிரைவரின் அஜாக்கிரதையால் நடந்த இந்த விபத்தில் ஏதுமறியாத குழந்தை பலியானது அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #Tamilnews
    அன்னூர் அருகே புளியமரத்தில் வேன் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.

    அன்னூர்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த 12 பேர் ஊட்டிக்கு ஒரு வேனில் சுற்றுலா புறப்பட்டனர். வேனை டிரைவர் ராமதாஸ் ஓட்டி வந்தார்.இந்த வேன் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோவை மாவட்டம் அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஜெ.ஜெ.நகரில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த சீனு என்கிற சீனிவாசன் (24), ரிஷி (11) ஆகியோர் சம்பவ இடத்திலே பலியானார்கள். 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு-

    ராமதாஸ் (டிரைவர்)சாந்தி (60), பாஸ்கரன் (45), அவரது மனைவி நித்யா (33), லயா என்கிற தேவி (13), வினோத் குமார் (30), காவியா (12), கமல் (8), பிரவின் (29), மகாலட்சுமி (26), பெரியசாமி (31).

    விபத்தில் பலியான ரிஷி காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள பாஸ்கரன்- நித்யாவின் மகன் ஆவார்.

    டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×