என் மலர்

    செய்திகள்

    உத்தமபாளையம் அருகே விபத்து- புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி
    X

    உத்தமபாளையம் அருகே விபத்து- புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உத்தமபாளையம் அருகே பைக் மீது மினி வேன் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 25). இப்பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக சூர்யா தனது நண்பர்கள் காதர் மைதீன் (வயது 29). சுருளி மஸ்தான் (39) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் உத்தமபாளையம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிரே வந்த மினி வேன் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது இதில் காதர் மைதீன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இவருக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்து 3 மாத கைக்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. சுருளி மஸ்தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார்.

    சூர்யா படுகாயங்களுடன் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் மினி வேன் டிரைவர் தங்கமாயன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×