என் மலர்

    நீங்கள் தேடியது "professor killed"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெப்போலியன் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
    • மணிவண்ணன் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது வேகமாக மோதியது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி பாத்திமா பகுதியை சேர்ந்தவர் நெப்போலியன் (வயது 35). இவர் நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராஷிணி (33) காரைக்கால் ஒ.என்.சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

    இவர்களது சொந்த ஊர் மன்னார்குடி வேலை காரணமாக காரைக்காலில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் நெப்போலியன் தனது காரில் நாகை மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரிக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் இரவு வீடு திரும்பினார். இதனையடுத்து காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்திற்கு லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை மயிலாடுதுறை மாவட்டவத்தை சேர்ந்த மணிவண்ணன் (36) ஓட்டிச் சென்றார்.

    அப்போது காரைக்கால் நிரவி அருகே நெடுஞ்சாலையில் நெப்போலியன் காரில் வந்தபோது எதிரே மணிவண்ணன் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொருங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்கள் காருக்குள் சிக்கிகொண்ட நெப்போலியனை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு நெப்போலியனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து ேபாலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குடவாசல் அருகே வேன் மோதிய விபத்தில் பட்டுக்கோட்டை பேராசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். வேன் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குடவாசல்:

    குடவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் நாடிமுத்து (30). இவரது மனைவி கனிமொழி (வயது 23).  இவர்கள் இருவரும் குடவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்தனர். 

    இந்த நிலையில் நாடிமுத்தும், கனிமொழியும் மஞ்சக்குடி அருகே உள்ள நரசிங்கம்பேட்டை பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு நடந்து வந்துள்ளனர். அப்போது அரசவனங்காடு மேலத்தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் பிரகாஷ் (30) ஓட்டி வந்த வேன் நடந்து வந்த நாடிமுத்து, கனிமொழி ஆகியோர் மீது மோதியதில் இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே கனிமொழி பரிதாபமாக இறந்து விட்டார். நாடிமுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து குடவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து டிரைவர் பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×