என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "vaithilingam mp"
- புதுவை உருளையன் பேட்டை தொகுதிக்குட்பட்ட கந்தப்ப முதலியார் வீதியில் நகராட்சி மூலம் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, இருபுற வாய்க்கால் அமைக்கும் பணி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் நடந்து வருகிறது.
- ஆய்வின் போது புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் இடங்களில் மழைநீர் தேங்காத வாய்க்கால் அமைத்து கொடுக்கும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை உருளையன் பேட்டை தொகுதிக்குட்பட்ட கந்தப்ப முதலியார் வீதியில் நகராட்சி மூலம் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, இருபுற வாய்க்கால் அமைக்கும் பணி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் நடந்து வருகிறது.
இப்பணிகளை வைத்திலிங்கம் எம்.பி., தொகுதி எம்.எல்.ஏ. நேரு ஆகியோர் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் இடங்களில் மழைநீர் தேங்காத வாய்க்கால் அமைத்து கொடுக்கும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.
பணிகளை விரை வாகவும் தரமாகவும் செய்து கொடுக்கும்படி அதிகாரி களை வலியுறுத்தினர்.
ஆய்வின்போது நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், பொதுப் பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு செயற்பொறியாளர் வல்லவன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், நகராட்சி இளநிலை பொறியாளர் குப்புசாமி மற்றும் பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள், மனித நேய மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்த கைலாஷ், சாமிநாதன், சீதாராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் தலைமை வகித்தார்.
- நான் அதை கொடுக்க வேண்டும், இதை கொடுக்க வேண்டும் என சொல்கிறேன். ஆனால் அவர்கள் தரவில்லை என அதிகாரிகள் மீது பழிபோடுகிறார். அதிகாரிகள் என்ன செய்வார்கள்?
புதுச்சேரி:
மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்தியலிங்கம் எம்.பி. , எம்.எல்.எ. வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி,ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-
முதல்-அமைச்சர் ஒன்றும் செய்ய முடியவில்லை. நீதிபதியிடம் கேட்கிறார். யாரிடம் கேட்க வேண்டுமோ? அவரிடம் கேட்கவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி கேட்கவேண்டிய இடத்தில் கேட்கவில்லை. தப்பான இடத்தில் கதவை தட்டுகிறார். அப்படியென்றால் முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்களை ஏமாற்றுகிறார் என அர்த்தம்.
நான் அதை கொடுக்க வேண்டும், இதை கொடுக்க வேண்டும் என சொல்கிறேன். ஆனால் அவர்கள் தரவில்லை என அதிகாரிகள் மீது பழிபோடுகிறார். அதிகாரிகள் என்ன செய்வார்கள்? கவர்னர், மத்திய அரசை காரணம் சொல்ல மறுக்கிறார். அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறுகிறார்.
அவர் முதல்-அமைச்சர் தானே? அவரின் அதிகாரம் எங்கே போனது? வாக்காளர்களாகிய மக்கள் ஏமாந்துவிட்டனர். மோடிக்கு புதுவையே தெரியாது. புதுவையில் பாஜக கிடையாது. அதை இறக்குமதி செய்தது ரங்கசாமி. ரங்கசாமி இல்லாவிட்டால் புதுவையில் பா.ஜனதா இல்லை.
ஆண்கள் மது குடித்து அழிந்துவிட்டனர், விதவைகளாக பெண்கள்தான் உள்ளனர். அவர்களையும் அழிக்க பிராந்தி கடையில் பெண்களுக்கு இலவச மது வழங்குகின்றனர். இப்படி கடைகளை திறப்பது நியாயமா? என முதல்-அமைச்சரிடம் கேட்டால், எனக்காக செய்யவில்லை, மக்களுக்காக செய்கிறேன் என்கிறார்.
ரூ.ஆயிரம் கொடுக்க என்னிடம் காசு இல்லை. மற்ற திட்டங்களுக்கு காசு இல்லை. இதிலிருந்துதான் பணம் தருகிறேன் என்கிறார். குடும்பத்தை அழித்துவிட்டு ரூ.ஆயிரம் வழங்குவதில் என்ன பயன் உள்ளது? ரங்கசாமி நிஜமான சாமியார்தானா? நிஜமான சாமியாராக இருந்தால் குடும்பத்தை பற்றி, சமுதாயத்தை பற்றி ஆய்வு செய்து நன்மையானவற்றை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
- ஆண்களை குறிவைத்து நடந்த மது வியாபாரம் தற்போது பெண்களுக்கு குறிவைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டுமா? வேண்டாமா? என முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரசும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாநில அந்தஸ்து பெற அரசு ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்? எனவும் தெரிவிக்க வேண்டும்.
மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே கருத்து வேறுபாடு உள்ளது. புதுவையின் நிர்வாக தலைமையாக இருக்கும் கவர்னர் மாநில அந்தஸ்தில் கிடைப்பதெல்லம் இப்போதே கிடைக்கிறது என்கிறார். ஆனால் முதலமைச்சர் அதிகாரம் தேவை என கூறுகிறார்.
உண்மையிலேயே மாநில அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சியில்தான் ரங்கசாமி உள்ளாரா? இல்லை கவர்னரையும், மத்திய அரசையும் மிரட்டுவதற்காக மாநில அந்தஸ்தை ஆயுதமாக பயன்படுத்துகிறாரா? அண்ணன் தங்கையாக இருந்தாலே பாக பிரிவினை, பங்கு பிரிவினை இருக்கத்தான் செய்யும். வரும் ஆண்டிலாவது முதலமைச்சர் நிலையான முடிவை இவ்விவகாரத்தில் தெரிவிக்க வேண்டும்.
சுயேச்சை எம்.எல்.ஏ. வை தூண்டிவிடுவது, பிற கட்சியினரை தூண்டுவது போன்ற நிலைப்பாடை கைவிட வேண்டும். நேரடியாக முதலமைச்சரே களம் இறங்க வேண்டும். அப்படி முதலமைச்சர் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுத்தால் பாராளுமன்றத்திலும், வெளியிலும் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும்.
வீதிக்கு வீதி திறக்கப்படும் மதுக்கடைகளால் மக்கள் போராட்டம் ஏற்பட்டுள்ளது. ரேஷன்கடை இருந்த இடமெல்லாம் மதுக்கடைகள் திறந்து வருகின்றனர். இதில் சில மதுக்கடைகளில் பெண்களுக்கு தனி வசதி என விளம்பரப்படுத்துகின்றனர். இதுவரை ஆண்களை குறிவைத்து நடந்த மது வியாபாரம் தற்போது பெண்களுக்கு குறிவைத்துள்ளது. இது மிகப்பெரும் கலாச்சார சீரழிவு. குடும்பங்களை அழிக்கும் முயற்சி.
எனவே மதுக்கடைகளின் எண்ணிக்கை, நேரத்தை குறைக்க வேண்டும். மாநில அந்தஸ்து கேட்பவர்கள் மீதும், மதுக்கடை எதிர்ப்பு போராளிகள் மீதும் கடுமையான சட்டங்கள் பாய்கிறது. மதுக்கடை உரிமையாளர்களுக்கு அரசு துணை செல்கிறதா? இதுதான் பிரதமர் மோடி அறிவித்த பெஸ்ட் புதுவையா? அமித்ஷா அறிவித்த எக்சலண்ட் புதுவையா? இதற்காகத்தான் மாநில அந்தஸ்து கேட்கிறார்களா?
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவையில் மோசமான செல்போன் இணைப்பு இருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வேறு எந்த தனியார் நிறுவன த்திற்கும் செல்லாமல் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாகவே இருந்து வருகின்றனர்.
- எனவே தகவல் தொழில்நுட்ப அமைச்சர் புதுவை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி மற்றும் 5 ஜி வசதியை உடனடியாக வழங்கி தற்போதுள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பேசியதாவது:-
புதுவையில் மோசமான செல்போன் இணைப்பு இருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வேறு எந்த தனியார் நிறுவன த்திற்கும் செல்லாமல் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாகவே இருந்து வருகின்றனர். தேசிய நிறுவனத்தின் மீதான பக்தியால் அதன் சந்தாதாரர்களாகவே இருந்து வருகின்றனர். பி.எஸ்.என்.எல். நிறுவனம் 3 ஜி சேவையே வழங்கி வருவதால் தொலைபேசி இணைப்புகளில் தொந்தரவு மற்றும் இண்டர்நெட் இணைப்பு மிக மெதுவாக உள்ளது.
எனவே தகவல் தொழில்நுட்ப அமைச்சர் புதுவை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி மற்றும் 5 ஜி வசதியை உடனடியாக வழங்கி தற்போதுள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை யூனியன் பிரதேசத்தை ஒரு மாதிரி பகுதியாக கொண்டு இந்த இரண்டு சேவைகளையும் உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதுச்சேரி:
மாணவர் சிறப்பு பஸ் இயக்க கோரி வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் சார்பில் சாரம் அரசு தொடக்கப்பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கான இலவச ஒரு ரூபாய் பஸ்சை இயக்க வேண்டும். பள்ளி சீருடை, மதிய உணவில் முட்டை, இலவச நோட்டு, புத்தகம், சைக்கிள், லேப்டாப், கல்வி உதவித்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- புதிய சிமெண்டு சாலை மற்றும் இருபுற வாய்க்கால் கட்டைகள் மேம்படுத்தும் பணி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சத்து 27 ஆயிரம் செலவில் நகராட்சி மூலம் நடைபெற உள்ளது.
- இதற்கான பணியை கந்தப்பா முதலியார் வீதி காந்திவீதி சந்திப்பில் வைத்திலிங்கம் எம்.பி. நேரு எம்.எல்.ஏ. முன்னிலையில் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை சின்னக்கடை வார்டு கந்தப்பா முதலியார் வீதியில் மகாத்மா காந்தி வீதி முதல் பாரதி வீதி வரை பழுதடைந்த பழைய சிமெண்டு சாலையினை மாற்றி புதிய சிமெண்டு சாலை மற்றும் இருபுற வாய்க்கால் கட்டைகள் மேம்படுத்தும் பணி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சத்து 27 ஆயிரம் செலவில் நகராட்சி மூலம் நடைபெற உள்ளது.
இதற்கான பணியை கந்தப்பா முதலியார் வீதி காந்திவீதி சந்திப்பில் வைத்திலிங்கம் எம்.பி. நேரு எம்.எல்.ஏ. முன்னிலையில் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். விழாவில் புதுவை நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிராக மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
- புதுவை மின்துறையை 100 சதவிகிதம் தனியாருக்கு விற்பதாக கூறியுள்ளனர். இது வரை இந்தியாவில் எங்கும் இந்த திட்டம் அறிவிக்கப்படவில்லை.
புதுச்சேரி:
வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த வாரம் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிராக மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். மின்துறை ஊழியர்கள் தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை தள்ளி வைத்துள்ளனர். இதில் அரசின் நிலைப்பாடு என்ன? ஊழியர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள பிரச்சினை மட்டுமல்லாது, இது பொதுமக்களின் பிரச்சினையும் ஆகும்.
புதுவை மின்துறையை 100 சதவிகிதம் தனியாருக்கு விற்பதாக கூறியுள்ளனர். இது வரை இந்தியாவில் எங்கும் இந்த திட்டம் அறிவிக்கப்படவில்லை. இந்த திட்டத்தின் தெளிவான நிலையை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும்.
5 லட்சத்து 90 ஆயிரம் கட்டினால்தான் அதன் விளக்கத்தை பெற முடியும் என கூறுகிறார்கள். எனவே, எந்த நிபந்தனையோடு இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது என்பதனை மக்களுக்கு தெளிவாக கூற வேண்டும்.
டென்டரில் மின்துறை இடங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1 க்கு கொடுத்துள்ளனர். இதனை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் முழுமையாக எதிர்க்கிறோம். துறை அமைச்சர், முதல்- அமைச்சர், கவர்னர் ஆகியோரின் துணையுடன் தான் இது நடைபெறுகிறது. அவர்களின் நண்பர்களுக்கு ஏற்றார்போல விதிகளை மாற்றி அமைத்துள்ளனர்.
மதுபான தொழிற்சாலை, மின்துறை தனியார் மயமாக்கல் ஆகிய இரண்டிற்கும் அரசு மக்களுக்கு பதில் கூற வேண்டும். தனியார் மயத்தை உடனே நிறுத்த வேண்டும். இல்லையென்றால் கூட்டணி கட்சிகளோடு இணைந்து போராட்டம் நடத்த உள்ளோம்.
ரங்கசாமி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் அரசு துறைகளுக்கு மூடுவிழா நடத்தி வருகிறார். இப்போது மின்துறையை மூடிவிட்டு தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கொள்கை முடிவு எடுப்பது மட்டும் அரசின் கடமை அல்ல. அதற்கு மக்களிடம் விளக்கம் கொடுத்து, மக்களின் ஒத்துழைப்புடன் முடிவை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வைத்திலிங்கம் எம்.பி.பிறந்தநாளையொட்டி மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து காங்கிரசார் வழிபட்டனர்.
- வைத்திலிங்கம் எம்.பி. யின் தீவிர ஆதரவாளரும் காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளருமான வினோத் ஏற்பாட்டின் பேரில் ரெயின்போ நகரில் 500 ஏழைகளுக்கு அரிசி வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
வைத்திலிங்கம் எம்.பி.பிறந்தநாளையொட்டி மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து காங்கிரசார் வழிபட்டனர்.
பிறந்தநாள் வைத்திலிங்கம் எம்.பி.க்கு பிறந்த நாளாகும். இதையடுத்து வைத்திலிங்கம் எம்.பி. பிறந்த நாளையொட்டி காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணக்குள விநாயகர் கோவிலில் காங்கிரசார் தங்க தேர் இழுத்து வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி. யின் தீவிர ஆதரவாளரும் காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளருமான வினோத் ஏற்பாட்டின் பேரில் ரெயின்போ நகரில் 500 ஏழைகளுக்கு அரிசி வழங்கப்பட்டது. மேலும் கிருஷ்ணா நகரிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- புதுவை மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரை கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கை நடவடிக்கைகளை அரசு எடுக்காமல் உள்ளது.
- என்ஜினீயரிங், மருத்துவம், விவசாயம், கால்நடை போன்ற தொழில் சார்ந்த கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கைக்கு உண்டான கலந்தாய்வு இதுவரை நடத்தவில்லை.
புதுச்சேரி:
வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரை கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கை நடவடிக்கைகளை அரசு எடுக்காமல் உள்ளது. குறிப்பாக கலைக்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோல என்ஜினீயரிங், மருத்துவம், விவசாயம், கால்நடை போன்ற தொழில் சார்ந்த கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கைக்கு உண்டான கலந்தாய்வு இதுவரை நடத்தவில்லை. இதனால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
எனவே, அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து, மாணவர்கள் சேர்க்கையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் மாநில அரசின் இட ஒதுக்கீடாக 50 சதவீதத்தை மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மாநில அரசு கல்லூரிக்கு நிர்ண யித்துள்ள கட்டணத்தில் அரசு பெற்று தர வேண்டும். கலை கல்லுரிகளில் காலியாக உள்ள பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு கல்லூரி 2 ஷிப்டாக இயங்குவதால் மாலை நேரத்தில் படிக்கக்கூடிய மாணவர்கள் நேரத்தோடு வீட்டிற்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே மாணவர் பஸ்களை இயக்கி மாலை நேர கல்லூரி மாணவர்கள் கிராமப்புறத்திற்கு செல்ல பஸ் வசதியை செய்து தர வேண்டும்.
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. அறிக்கையில் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இன்று செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அ.தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டது.
இந்த கண்காட்சியை கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் அமைச்சர் துரைகண்ணு, வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் பட்டுகோட்டை எம்.எல்.ஏ. சி.வி.சேகர், மாவட்ட பால்வள தலைவர் காந்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு வைத்திலிங்கம் எம்.பி. பேட்டியளித்தார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கட்சியோடு கூட்டணி சேர மற்ற கட்சிகளோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஜெயலலிதாவின் ஆத்மா எங்களை வழி நடத்துகிறது. இதனால் தான் 2 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட சிலரால் முடியவில்லை. எந்த கட்சி தான் எந்த கட்சியை விமர்சனம் செய்யாமல் இருந்துள்ளது. எனவே கூட்டணி என்பது வேறு, விமர்சனம் என்பது வேறு.
தே.மு.தி.க. இடைதேர்தலில் எம்.எம்.ஏ. மற்றும் மாநிலங்களவையில் எம்.பி. சீட் கேட்பதால் தான் அவர்களுடன் கூட்டணியில் இழுபறி என கருத்து நிலவுகிறதே என நிருபர்கள் கேட்டதற்கு, இதையெல்லாம் நாங்கள் வெளியில் சொல்ல முடியாது. இது ரகசியமானது.
கூட்டணி பற்றி ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு கருத்துகளை கூறுகிறார்களே? என்ற கேள்விக்கு முதல்- அமைச்சர், துணை முதல்-அமைச்சர் என்ன சொல்கிறார்களோ அது தான் கட்சியின் இறுதியான கருத்து.
இவ்வாறு அவர் கூறினார். #admk #dmdk #parliamentelection
தஞ்சாவூர்:
தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பட்டிமன்றத்திற்கு அ.தி.மு.க. கொள்கைபரப்பு துணை செயலாளரும், தேர்தல் பிரசார குழு பொறுப்பாளருமான வைகைசெல்வன் நடுவராக பங்கேற்றார். அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான வைத்திலிங்கம் எம்.பி. பட்டிமன்றத்தை தொடங்கி வைத்தார். விழாவில் கு.பரசுராமன் எம்.பி மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1967-ம் ஆண்டு முரண்பட்ட கொள்கை படைத்த அண்ணாவும், ராஜாஜியும் கூட்டணி சேர்ந்தனர். அதற்கு முன்பு வரை கருத்து வேறுபாடுகளால் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். அவர்கள் கூட்டணி சேர்ந்ததால் அப்போது யாரும் கடுமையான வார்த்தைகளை உச்சரிக்கவில்லை. கடுமையாக விமர்சனம் செய்த இந்திராகாந்தியை 1980-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நேருவின் மகளே வா. நிலையான ஆட்சி தா? என அழைத்து கூட்டணி சேர்ந்தார் கருணாநிதி.
அப்போது கருணாநிதியை யாரும் விமர்சனம் செய்யவில்லை. ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த டாக்டர் ராமதாசுவை மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருப்பது அவரது அறியாமையை காட்டுகிறது. நிறைய மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. பேச்சுவார்த்தை முடிந்தவுடன் கூட்டணி குறித்து அறிவிப்போம். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரசாகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #parliamentelection #vaithilingammp #admk
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதில் அ.தி.மு.க. ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் ஒரு அணியும், தி.மு.க.-காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி வருகிறது.
இதேபோல் டி.டி.வி. தினகரன் தனி அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனியாக தேர்தலை சந்திக்க உள்ளார்.
ஆளும் கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளை சேர்க்க ரகசிய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கூட்டணி குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இதில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் இறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினருமான வைத்திலிங்கம் எம்.பி.யிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கே:- அ.தி.மு.க. கூட்டணி பேச்சு வார்த்தை எந்த அளவில் உள்ளது. பாரதீய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடக்கிறதா?
ப:- கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பேச்சு வார்த்தை முடிந்தவுடன் அறிவிப்பு வரும்.
கே:- அ.தி.மு.க. எந்தெந்த கட்சிகளுடன் பேசி வருகிறது?
ப:- நீங்கள் சொன்ன கட்சிகளுடன் (பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க.) பேசி வருகிறோம்.
கே:- குறிப்பாக பாரதீய ஜனதா, கூட்டணி பேச்சு வார்த்தையில் வலுவாக உள்ளதா? அ.தி.மு.க. இதில் மவுனமாக உள்ளதே? மவுனத்துக்கான காரணம் என்ன?
ப:- கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே இது குறித்து கூட்டணி பேச்சு வார்த்தை ரகசியமாக நடப்பதாக சொல்லி உள்ளார். பேச்சுவார்த்தை முடிந்தவுடன் வெளிப்படையாக சொல்லி விடுவார்கள்.
கே:- இதில் காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?
ப:-இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில் கால தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இப்போது இவ்வளவுதான் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு. தி.க. கட்சிகளுடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளும் இடம் பெறும் என தெரிகிறது. #vaithilingammp #admk #parliamentelection
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்