search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குடும்பங்களை அழித்துவிட்டு பெண்களுக்குரூ.1000 வழங்குவதில் என்ன பயன்?-வைத்திலிங்கம் எம்.பி. சரமாரி தாக்கு
    X

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.எ. அனந்தராமன் பேசிய போது எடுத்த படம்.

    குடும்பங்களை அழித்துவிட்டு பெண்களுக்குரூ.1000 வழங்குவதில் என்ன பயன்?-வைத்திலிங்கம் எம்.பி. சரமாரி தாக்கு

    • மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் தலைமை வகித்தார்.
    • நான் அதை கொடுக்க வேண்டும், இதை கொடுக்க வேண்டும் என சொல்கிறேன். ஆனால் அவர்கள் தரவில்லை என அதிகாரிகள் மீது பழிபோடுகிறார். அதிகாரிகள் என்ன செய்வார்கள்?

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

    முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்தியலிங்கம் எம்.பி. , எம்.எல்.எ. வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி,ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஒன்றும் செய்ய முடியவில்லை. நீதிபதியிடம் கேட்கிறார். யாரிடம் கேட்க வேண்டுமோ? அவரிடம் கேட்கவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி கேட்கவேண்டிய இடத்தில் கேட்கவில்லை. தப்பான இடத்தில் கதவை தட்டுகிறார். அப்படியென்றால் முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்களை ஏமாற்றுகிறார் என அர்த்தம்.

    நான் அதை கொடுக்க வேண்டும், இதை கொடுக்க வேண்டும் என சொல்கிறேன். ஆனால் அவர்கள் தரவில்லை என அதிகாரிகள் மீது பழிபோடுகிறார். அதிகாரிகள் என்ன செய்வார்கள்? கவர்னர், மத்திய அரசை காரணம் சொல்ல மறுக்கிறார். அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறுகிறார்.

    அவர் முதல்-அமைச்சர் தானே? அவரின் அதிகாரம் எங்கே போனது? வாக்காளர்களாகிய மக்கள் ஏமாந்துவிட்டனர். மோடிக்கு புதுவையே தெரியாது. புதுவையில் பாஜக கிடையாது. அதை இறக்குமதி செய்தது ரங்கசாமி. ரங்கசாமி இல்லாவிட்டால் புதுவையில் பா.ஜனதா இல்லை.

    ஆண்கள் மது குடித்து அழிந்துவிட்டனர், விதவைகளாக பெண்கள்தான் உள்ளனர். அவர்களையும் அழிக்க பிராந்தி கடையில் பெண்களுக்கு இலவச மது வழங்குகின்றனர். இப்படி கடைகளை திறப்பது நியாயமா? என முதல்-அமைச்சரிடம் கேட்டால், எனக்காக செய்யவில்லை, மக்களுக்காக செய்கிறேன் என்கிறார்.

    ரூ.ஆயிரம் கொடுக்க என்னிடம் காசு இல்லை. மற்ற திட்டங்களுக்கு காசு இல்லை. இதிலிருந்துதான் பணம் தருகிறேன் என்கிறார். குடும்பத்தை அழித்துவிட்டு ரூ.ஆயிரம் வழங்குவதில் என்ன பயன் உள்ளது? ரங்கசாமி நிஜமான சாமியார்தானா? நிஜமான சாமியாராக இருந்தால் குடும்பத்தை பற்றி, சமுதாயத்தை பற்றி ஆய்வு செய்து நன்மையானவற்றை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×