என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பா.ஜனதா-பாமக, தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை- வைத்திலிங்கம் எம்பி தகவல்
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதில் அ.தி.மு.க. ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் ஒரு அணியும், தி.மு.க.-காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி வருகிறது.
இதேபோல் டி.டி.வி. தினகரன் தனி அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனியாக தேர்தலை சந்திக்க உள்ளார்.
ஆளும் கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளை சேர்க்க ரகசிய பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கூட்டணி குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இதில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் இறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினருமான வைத்திலிங்கம் எம்.பி.யிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கே:- அ.தி.மு.க. கூட்டணி பேச்சு வார்த்தை எந்த அளவில் உள்ளது. பாரதீய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடக்கிறதா?
ப:- கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பேச்சு வார்த்தை முடிந்தவுடன் அறிவிப்பு வரும்.
கே:- அ.தி.மு.க. எந்தெந்த கட்சிகளுடன் பேசி வருகிறது?
ப:- நீங்கள் சொன்ன கட்சிகளுடன் (பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க.) பேசி வருகிறோம்.
கே:- குறிப்பாக பாரதீய ஜனதா, கூட்டணி பேச்சு வார்த்தையில் வலுவாக உள்ளதா? அ.தி.மு.க. இதில் மவுனமாக உள்ளதே? மவுனத்துக்கான காரணம் என்ன?
ப:- கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே இது குறித்து கூட்டணி பேச்சு வார்த்தை ரகசியமாக நடப்பதாக சொல்லி உள்ளார். பேச்சுவார்த்தை முடிந்தவுடன் வெளிப்படையாக சொல்லி விடுவார்கள்.
கே:- இதில் காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?
ப:-இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில் கால தாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இப்போது இவ்வளவுதான் சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., தே.மு. தி.க. கட்சிகளுடன் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளும் இடம் பெறும் என தெரிகிறது. #vaithilingammp #admk #parliamentelection
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்