search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவைக்கு 5-ஜி சேவை வசதி-வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    புதுவைக்கு 5-ஜி சேவை வசதி-வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

    • புதுவையில் மோசமான செல்போன் இணைப்பு இருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வேறு எந்த தனியார் நிறுவன த்திற்கும் செல்லாமல் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாகவே இருந்து வருகின்றனர்.
    • எனவே தகவல் தொழில்நுட்ப அமைச்சர் புதுவை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி மற்றும் 5 ஜி வசதியை உடனடியாக வழங்கி தற்போதுள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பேசியதாவது:-

    புதுவையில் மோசமான செல்போன் இணைப்பு இருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வேறு எந்த தனியார் நிறுவன த்திற்கும் செல்லாமல் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களாகவே இருந்து வருகின்றனர். தேசிய நிறுவனத்தின் மீதான பக்தியால் அதன் சந்தாதாரர்களாகவே இருந்து வருகின்றனர். பி.எஸ்.என்.எல். நிறுவனம் 3 ஜி சேவையே வழங்கி வருவதால் தொலைபேசி இணைப்புகளில் தொந்தரவு மற்றும் இண்டர்நெட் இணைப்பு மிக மெதுவாக உள்ளது.

    எனவே தகவல் தொழில்நுட்ப அமைச்சர் புதுவை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4 ஜி மற்றும் 5 ஜி வசதியை உடனடியாக வழங்கி தற்போதுள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை யூனியன் பிரதேசத்தை ஒரு மாதிரி பகுதியாக கொண்டு இந்த இரண்டு சேவைகளையும் உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×