search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trial"

    • பிணையில் செல்ல இயலாதவர்களுக்கு சட்ட உதவி மையத்தின் மூலமாக வழக்கறிஞர் நியமிக்கப்படும்.
    • குற்ற செயல்கள் மீண்டும் செய்யாமல் இருக்க அறிவுரை கூறினார்.

    பாபநாசம்:

    பாபநாசம் கிளை சிறையில் சிறைச்சாலை நீதிமன்றம் நடைபெற்றது பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல் கனி சிறைச்சாலை நீதிமன்றத்தை நடத்தினார்.

    முன்னதாக சிறைச்சாலை பற்றியும், சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் பற்றியும் விசாரணை கைதிகளுக்கு விளக்கமாக கூறினார். மேலும் விசாரணை கைதிகள் ஒவ்வொரு இடமும் குற்றத்தின் தன்மைகள் பற்றி கேட்டறிந்தார்.

    வழக்கறிஞர் வைத்து பிணையில் செல்ல இயலாதவர்களுக்கு சட்ட உதவி மையத்தின் மூலமாக வழக்கறிஞர் நியமிக்கப்படும் என்று கூறினார்.

    மேலும் இது போன்ற குற்ற செயல்கள் மீண்டும் செய்யாமல் இருக்கவும் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக வாழவும் அறிவுரை கூறினார் இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் தன்னார்வ சட்டப்பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.

    • காரில் இருந்த பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • சிலிண்டரை தவிர வேறு எதுவும் பொருட்கள் இருந்ததா? எனவும் விசாரணை நடக்கிறது.

    கோவையில் கோவில் அருகே கார் வெடித்து ஒருவர் பலியான இடத்தை போலீஸ் ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சாலையில் வந்த கார் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. காரில் வந்த நபர் பலியாகி உள்ளார். அவர் குறித்து அடையாளம் தெரியவில்லை. அவர் குறித்து விசாரித்து வருகிறோம்.

    கோவிலுக்கு அருகில் உள்ள சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவில் அருகே நடைபெற்றதால் அதிக கவனம் செலுத்துகிறோம். இது விபத்தா? அல்லது திட்டமிட்ட சதியா? என்பது விசாரணைக்கு பின்பு தான் தெரியவரும்.

    இந்த சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காரில் இருந்த பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தடவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். என்னென்ன பொருட்கள் காருக்குள் இருந்தது என ஆய்வு செய்து வருகின்றனர். சிலிண்டரை தவிர வேறு எதுவும் பொருட்கள் இருந்ததா? எனவும் விசாரணை நடக்கிறது.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்து வருகிறோம். இறந்தவர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான முழுமையான விவரம் மாலையில் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் 2,800 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன.
    • நிதி மோசடி, வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை நாடு முழுவதும் அதிரடி சோதனை

    மும்பை:

    தேர்தல் கமிஷனில் பதிவு செய்தபோதிலும் அங்கீகரிக்கப்படாமல் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி இந்தியாவில் 2,800 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன.

    இந்த கட்சிகள் நன்கொடை குறித்த விவரங்களை சமர்ப்பித்தல் முகவரி, நிர்வாகிகள் குறித்த விவரங்களை புதுப்பிக்க தவறியது உள்ளிட்ட விதிகளையும், தேர்தல் சட்டங்களையும் மீறியது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. இதில் சில கட்சிகள் தீவிர நிதி மோசடியிலும் ஈடுபட்டன.

    இதைத்தொடர்ந்து நிதி மோசடி, வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நேற்று அதிரடி சோதனை நடத்தியது. குஜராத், டெல்லி, மராட்டியம், மத்திய பிரதேசம், அரியானா, சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் 110 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மும்பையில் நடந்த சோதனையில் அங்குள்ள அங்கீகரிக்கப்படாத 2 கட்சிகள் ரூ.150 கோடி நன்கொடை பெற்றது தெரியவந்தது.

    சயான் கோலிவாடா குடிசை பகுதியில் உள்ள கட்சியும், போரிவிலியில் உள்ள கட்சி ஒன்றும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.150 கோடி நன்கொடை பெற்றுள்ளன. ஹவாலா மூலம் இந்த பண பரிமாற்றம் நடைபெற்றதும், இதனால் வரி ஏய்ப்பு செய்ததும் கண்டறியப்பட்டது.

    அபனா தேஷ் கட்சி 2017-18 மற்றும் 2019-20ல் மொத்தம் ரூ.232 கோடி நன்கொடை பெற்றது. அந்த கட்சியின் முகவரி உத்தர பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கட்சி தலைவரின் முகவரி குஜராத் மாநிலத்தில் பதிவு ஆகி இருந்தது.

    இப்படி பல கட்சிகள் நன்கொடை விவரம், முகவரியில் குழப்பம் இருப்பது இந்த சோதனையின் போது தெரியவந்தது.

    தேர்தல் கமிஷனில் அளித்த முகவரியில் செயல்படாத 87 அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் சமீபத்தில் ரத்து செய்து இருந்தது.

    • கனியாமூர் பள்ளி கலவரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 17- ந்தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி பள்ளியை இடித்து சேதப்படுத்தியதாக நாகலூர் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 20), சதீஷ் பாபு (20) மற்றும் போலீசார் மீது கல்வீசி தாக்கிய சின்னசேலம் அருகே கனியாமூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மாயழகு (வயது 42), கூலித்தொழிலாளி. இவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதில் விரக்தியடைந்த மாயழகு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீரைத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விளாச்சேரி மொட்டைமலை கலைஞர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (40). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துப்பாண்டி வீட்டருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கூடல்புதூர் ஆபீசர் டவுன் 9-வது தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (45). மன அழுத்தத்தில் இருந்த இவர் சம்பவத்தன்று ஆசிட் குடித்தார். அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட லட்சுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து நடத்திய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மல்லாங்கிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமி, சோனைமுத்து ஆகிய 2 பேரையும் மீண்டும் கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள வரலொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 35). இவரை அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, சோனை முத்து ஆகியோர் கேலி- கிண்டல் செய்து வந்தனர். இவர்களின் செயல்கள் எல்லை மீறிச் செல்லவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு கஸ்தூரி இது தொடர்பாக மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமி, சோனை முத்துவை கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஜாமீனில் வந்த 2 பேரும் சம்பவத்தன்று கஸ்தூரி வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது ஆத்திரம் அடைந்த 2 பேரும் கத்தி மற்றும் அரிவாளால் கஸ்தூரியை சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் கஸ்தூரியை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கஸ்தூரி கொடுத்த புகாரின்படி மல்லாங்கிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமி, சோனைமுத்து ஆகிய 2 பேரையும் மீண்டும் கைது செய்தனர்.

    • 2 செல்போன்களை அபேஸ் செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.
    • சம்பவத்தன்று மதியம் இவர் மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவாயிலுக்கு வந்தார்.

    மதுரை

    திருமங்கலத்தை அடுத்த புலியூர், கிழக்கு தெருவை சேர்ந்த பாண்டி மகன் ராகேஷ் (வயது 19). இவர் படித்து முடித்து விட்டு வேலை தேடி கொண்டிருந்தார்.

    சம்பவத்தன்று மதியம் இவர் மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவாயிலுக்கு வந்தார். அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம், ரெயில்வே ஆபீஸில் வேலை கிடைக்குமா?' என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், நான் அங்கு தான் வேலை பார்க்கிறேன். ரெயில்வே அலுவலகத்தில் வேலை வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும். உன்னிடம் பணம் உள்ளதா?' என்று கேட்டுள்ளார். அதற்கு ராகேஷ் என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    அந்த நபர் 'நீ வைத்திருக்கும் 2 செல்போன்களை கொடு. இதனை அதிகாரி பெற்றுக்கொண்டு உனக்கு வேலை கொடுப்பார். அதன்பிறகு பணத்தை கட்டிவிட்டு செல்போனை திருப்பிக் கொள்" என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ராகேஷ் தன்னிடம் இருந்த 2 செல்போன்களை கொடுத்துள்ளார்.

    இதனை பெற்று க்கொண்டு அந்த வாலிபர் தலைமறைவாகி விட்டார். செல்போனை வாங்கி சென்ற வாலிபர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த ராகேஷ், எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன்களுடன் தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளியை 2-வது திருமணம் செய்து 10 பவுன் நகை-ரூ.8 லட்சம் மோசடி செய்தனர்.
    • போலீசார் பாலசுப்பிரமணயின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையை சேர்ந்தவர் கவிதா (வயது 29). மாற்றுத்திறனாளியான இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் மேலமங்களத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (33) என்பவருக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது பாலசுப்பிரமணியன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும், திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாகவும் கவிதாவிடம் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கவிதா சூலக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். அதில் பாலசுப்பிரமணியன் ஏற்கனவே திருமணமானதை மறைத்து என்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டு 10 பவுன் நகை ரூ. 8 லட்சம் ரொக்கம் மோசடி செய்து விட்டதாகவும், மேலும் பணம் கேட்டு என்னையும், என் குடும்பத்தினரையும் பாலசுப்பிரமணியன் மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து 10 பவுன் நகை, ரூ.8 லட்சம் மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனடிப்படையில் போலீசார் பாலசுப்பிரமணயின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டிட வேலை பார்த்த பெண் தவறி விழுந்து பலியானார்.
    • ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பச்சமடம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்தவர் பரிமளா (வயது 65). இவர் தனியார் நிறுனத்தில் கட்டிட வேலை செய்யும் சித்தாளாக வேலை பார்த்து வந்தார். அவர் ராஜபாளையத்தில் டிராவல்ஸ் கட்டிட 2-வது மாடியில் பணி செய்த போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அப்ேபாது கீழே செயல்பட்ட புரோட்டா கடை மேற்கூரையில் விழுந்து படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    விருதுநகர்

    விருதுநகர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் செல்வக்கனி (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள வாகன விற்பனையகத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற செல்வக்கனி பின்னர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள சின்ன ரெட்டியபட்டி சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி வடிவு (45), கட்டிட வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் வடிவை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் 

    • திருமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராகுல்காந்தி மீதான மத்திய அமலாக்கத்துறை விசாரணை, மோடி அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருமங்கலம்

    ராகுல்காந்தி மீதான மத்திய அமலாக்கத்துறை விசாரணை மற்றும் மோடி அரசை கண்டித்து மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, திருமங்கலம் நகர மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது.

    விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் அறிவுறுத்தலின்படி நடந்த இந்த ஆர்ப்பாட்ட த்திற்கு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமை வகித்தார்.

    முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயராம், மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருமங்கலம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கரிசல்பட்டி சவுந்திரபாண்டி வரவேற்றார். ஆர்ப்பாட்ட த்தில் வட்டார தலைவர்கள் முருகேசன், சங்கன், தளபதி சேகர், பாண்டியன், வீரபுத்தி ரன், உசிலம்பட்டி நகர் தலைவர் மகேந்திரன், துணைத்த லைவர் சரவணன், நகர செயலாளர் ராஜா தேசிங், கவுன்சிலர் அமுதா சரவணன், முன்னாள் நகர் தலைவர் தாமோதரன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.
    • சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்கெட்டில் சுமார் 4ஆயிரம் கடைகளில் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகை பொருட்கள் மொத்தமாகவும், சில்லரையிலும் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் மினி வேன்கள் மூலம் காய்கறி, பழம், மளிகை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தினசரி ஒரு லட்சம் பேர் வரை வந்து செல்லும் கோயம்பேடு மார்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவலின் வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினர் அதேபோல் மார்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வந்த சில்லரை வியாபாரிகள், மளிகை மற்றும் காய்கறி கடைக்காரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டனர்.

    இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து வெவ்வேறு இடங்களில் தற்காலிகமாக இயங்கி வந்த சந்தை பின்னர் 5 மாத இடை வெளிக்குப் பிறகு படிப்படியாக திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கோயம்பேடு மார்கெட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை அங்காடி நிர்வாக குழு தீவிரப்படுத்தியுள்ளது.

    அதன்படி மார்கெட் வளாகத்தில் முககவசம் அணிவது, கடை முன்பு சாணிடைசர் வைப்பது, சமூக இடைவெளி கடை பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை வியாபாரிகள் கடை பிடிக்க வேண்டும் என்று ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.

    மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தேவையற்ற கூட்ட நெரிசல் ஏற்படுவதையும் தீவிரமாக கண்காணித்து சரி செய்து வருகின்றனர். விதிமுறைகளை மீறும் வியாபாரிகள், கடை ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்கெட்டுக்கு வரும் பொதுமக்களிடம் அபராதம் விதிக்கவும் அங்காடி நிர்வாக குழு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த வாரம் முதல் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கடை நடத்தும் வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள், மார்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7நாட்களில் இதுவரை 1000 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதில் 2 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களின் விபரங்களை சுகாதார துறையினர் சேகரித்து வருகின்றனர்.மேலும் மார்க்கெட்டில் உள்ள தொழிலாளர்களின் பட்டியலும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அதிகாரி சாந்தி கூறியதாவது:-

    மார்க்கெட்டில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏராளமான வியாபாரிகள் ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர் மேலும் வியாபாரிகள், கடை ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அவ்வாறு ஒத்துழைப்பு தராத, விதிமுறைகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மண்டல சுகாதார அதிகாரி கோபால கிருஷ்ணன் கூறும்போது:-

    கோயம்பேடு மார்கெட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா பரிசோதனையை தொடங்கியுள்ளோம் தினசரி 150 முதல் ௨௦௦ பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    பூ மார்க்கெட்டில் இருந்து தொடங்கியுள்ள பரிசோதனை வரும் நாட்களில் பழம், காய்கறி மற்றும் மளிகை மார்க்கெட் என விரிவு படுத்தப்படும் என்றார்.

    ×