என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளம்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து
- இளம்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து நடத்திய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- மல்லாங்கிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமி, சோனைமுத்து ஆகிய 2 பேரையும் மீண்டும் கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள வரலொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 35). இவரை அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, சோனை முத்து ஆகியோர் கேலி- கிண்டல் செய்து வந்தனர். இவர்களின் செயல்கள் எல்லை மீறிச் செல்லவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு கஸ்தூரி இது தொடர்பாக மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமி, சோனை முத்துவை கைது செய்தனர்.
இந்த நிலையில் ஜாமீனில் வந்த 2 பேரும் சம்பவத்தன்று கஸ்தூரி வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது ஆத்திரம் அடைந்த 2 பேரும் கத்தி மற்றும் அரிவாளால் கஸ்தூரியை சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.
உடனே அங்கிருந்தவர்கள் கஸ்தூரியை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கஸ்தூரி கொடுத்த புகாரின்படி மல்லாங்கிணறு போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமி, சோனைமுத்து ஆகிய 2 பேரையும் மீண்டும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்