என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
10 பவுன் நகை-ரூ.8 லட்சம் மோசடி
- மாற்றுத்திறனாளியை 2-வது திருமணம் செய்து 10 பவுன் நகை-ரூ.8 லட்சம் மோசடி செய்தனர்.
- போலீசார் பாலசுப்பிரமணயின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையை சேர்ந்தவர் கவிதா (வயது 29). மாற்றுத்திறனாளியான இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் மேலமங்களத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (33) என்பவருக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது பாலசுப்பிரமணியன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும், திருமணம் செய்ய விருப்பம் உள்ளதாகவும் கவிதாவிடம் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கவிதா சூலக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். அதில் பாலசுப்பிரமணியன் ஏற்கனவே திருமணமானதை மறைத்து என்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டு 10 பவுன் நகை ரூ. 8 லட்சம் ரொக்கம் மோசடி செய்து விட்டதாகவும், மேலும் பணம் கேட்டு என்னையும், என் குடும்பத்தினரையும் பாலசுப்பிரமணியன் மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து 10 பவுன் நகை, ரூ.8 லட்சம் மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் போலீசார் பாலசுப்பிரமணயின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்