search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trial"

    • தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்த குழந்தை இறந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசகாளன்பட்டியை சேர்ந்தவா் கண்ணன் (வயது24). இவருக்கு 1½ வயதில் ருத்ரபாண்டி என்ற ஆண் குழந்தை உள்ளது. ராயபாளையம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழா விற்காக கண்ணன் குடும்பத்துடன் உறவினர் லட்சுமி வீட்டிற்கு வந்தார்.

    அந்த வீட்டில் பெயிண்ட் பணிகள் நடந்து கொண்டி ருந்தன. இதற்காக தின்னர் மற்றும் ெபயிண்டுகளை வைத்திருந்தனர். விளையாடிக் கொண்டி ருந்த ருத்ரபாண்டிக்கு தாகம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த தின்னரை பார்த்து குடிநீர் பாட்டில் என குழந்தை நினைத்துள் ளான். பின்னர் அந்த பாட்டிலை எடுத்து தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து மயங்கினான்.

    இதை பார்த்து அதிர்ச்சிய டைந்த உறவினர்கள் உடனடியாக குழந்தையை மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனா லும் சிகிச்சை பலனின்றி ருத்ர பாண்டி பரிதாபமாக இறந்தான்.

    தின்னர் குடித்து குழந்தை பலியானது தொடர்பாக திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலமுறை காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் பேசவில்லை.
    • அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் பூலுவப்பட்டி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் பஷீர். இவரது மகன் ஷாஜகான் (வயது 26). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயதான இளம்பெண்ணுக்கும் ஷாஜகானுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்த பெண், ஷாஜகானுடன் பழகுவதை நிறுத்திக்கொண்டார். பலமுறை காதலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் பேசவில்லை.

    காதலை கைவிட்டதால் ஆத்திரமடைந்த ஷாஜகான், காதலியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது காதலை கைவிட்டால் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் இது குறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஷாஜகானை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • தகராறு ஏற்பட்டு அங்கு இருந்த மர சட்டத்தினால் பன்னீரை, குமார்கடுமையாக தாக்கி உள்ளார்.
    • பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கந்தன்பாளையத்தை சேர்ந்தவர் பன்னீர் (வயது 50).மீன் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற சிவகுமார்(38)ஆட்டோ டிரைவர். கடந்தாண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி குமார் மனைவி வீட்டு தோட்டத்தில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது யாரோ எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது.இதனால்தெருவில் நின்றுகொண்டுகு மார்திட்டிஉள்ளார் அப்போது அங்கு வந்த மீன் வியாரி பன்னீர் இதை தட்டி கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு அங்கு இருந்த மர சட்டத்தினால் பன்னீரை, குமார்கடுமையாக தாக்கி உள்ளார். படுகாயத்துடன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பன்னீர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் .இது குறித்து பண்ருட்டிபோலீசார் வழக்குப திவுசெய்துத லைம றைவான கொலையாளி குமாரை வலை வீசி தேடி வந்தனர்.

    இதற்கிடையில்நி லுவையில் உள்ள பழையவழக்குகளை துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பண்ருட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார் இதனை தொடர்ந்துபண்ருட்டி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர்தங்கேவல் போலீசார்ஆ னந்த்,ராஜி,கணேச மூர்த்திஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் இந்த வழக்கு விசாரணையை பல்வேறு கோணங்களில்நடத்தி தலைமறைவாக இருந்த கொலையாளி குமார் என்கின்ற சிவகுமாரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்

    • ரியல்எஸ்டேட் புரோக்கர் திடீரென இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்தர் பாலமுருகன்(45). இவருக்கு திருமணமாகவில்லை. வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி புரோக்கர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது அறையில் பேச்சு மூச்சில்லாமல் மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலமுருகனின் சகோதரர் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடின உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றிகரமான வக்கீல்களாக மாறலாம்.
    • ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.

    புதுச்சேரி:

    புதுவை-கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த கோர்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 14-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. போக்சோ குற்ற வழக்குகள் மீதான விசாரணை, புதுவை மாவட்ட முதன்மை அமர்வு நீ திமன்றத்தில் செயல்பட்டு வந்தது. போக்சோ வழக்கை தலைமை நீதிபதி விசாரித்து தீர்ப்பளித்து வந்தார்.

    இந்நிலையில் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்க விரைவு நீதி மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென தனி நீதிபதியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த போக்சோ நீதிமன்ற திறப்பு விழா இன்று நடந்தது. ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா போக்சோ விரைவு நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், நேரு எம்.எல்.ஏ , ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், இளந்திரையன், புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சட்டத்துறை செயலர் செந்தில்குமார், வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் மற்றும் புதுவை நீதிபதிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

    வக்கீல்கள் அமரும் இருக்கையில் நீதிபதி ராஜா, முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது போக்சோ நீதிமன்றத்தில் 5 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போக்சோ நீதிமன்ற நீதிபதி சோபனாதேவி தலைமையில் விசாரணை நடந்தது. முதல் குற்றவாளியை அழைத்த போது மின்சாரம் தடைபட்டது.

    இதனால் வந்திருந்தவர்கள் அதிருப்தியடைந்தனர். அப்போது நீதிபதி ராஜா, சற்று கோபத்துடன் மின்சாரத்தை சரி செய்பவர்கள் இங்கு வரமாட்டார்களா? என கேட்டார். தொடர்ந்து ஊழியர்கள் மின் தடையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10 நிமிடம் மின்சாரம் இல்லை. இருப்பினும் 5 குற்றவாளிகள் அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    இதன்பின் அனைவரும் விழா மேடைக்கு வந்தனர். அங்கு போக்சோ விரைவு நீதிமன்ற பெயர் பலகையை நீதிபதி ராஜா திறந்து வைத்தார்.

    விழாவில் ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசியதாவது:-

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் புதுவை மாநிலத்தில் 29 நீதிமன்றங்களாக செயல்பட உள்ளது. புதுவையில் மட்டும் போக்சோ நீதிமன்றத்தோடு 18 நீதிமன்றங்கள் செயல்பட உள்ளன. அதிசயம், அற்புதமான மிக கடுமையான சட்டங்கள் போக்சோ நீதிமன்றத்தில் உள்ளன.

    பல வழக்கில் கொலை, கொள்ளை அடித்தவர்களுக்கு மிகப்பெரும் தண்டனை தரப்படுகிறது. போக்சோவில் விசித்திரமான சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு குற்றவாளியை போக்சோ வழக்கில் கைது செய்தால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். 18 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்கான சான்றிதழ், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதற்கு காயம், சாட்சிகள் இருந்தால் அவர் குற்றவாளி. குற்றத்தை செய்யவில்லை என அவரின் வக்கீல்கள்தான் நிரூபிக்க வேண்டும்.

    குழந்தைகளை பயமுறுத்துவதுபோல கேள்வி கேட்க முடியாது. போக்சோ குற்றத்தில் ஈடுபட்டால், இறுதி மூச்சு இருக்கும் வரை ஆயுள்தண்டனை விதிக்கப்படும். வக்கீல்கள் போக்சோ வழக்கை சாதாரணமாக நடத்தி விட முடியாது.

    இந்த வழக்கிற்கு இங்கு மட்டும்தான் ஜாமீன் பெற முடியும். ஒரு ஆண்டுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். இந்த வழக்கை கையாள வக்கீல்கள் திறமை களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தையின் விபரங்களை வெளியில் தெரிவிக்கக்கூடாது. பெற்றோர்களால் வழக்கை நடத்த முடியாவிட்டால், சட்டப்பணிகள் ஆணையம் மூலம் வக்கீல்களை பெறலாம்.

    பாதிக்கப்பட்ட குழந்தை என நீதிபதி முடிவு செய்துவிட்டால், வழக்கு நடைபெறும்போதே குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து நிவாரணம் வழங்க உத்தரவிட முடியும். கொடுமையான குற்றம் செய்திருந்தால் மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.

    காலங்கள் மாறி வருகிறது. காலதாமதமின்றி நீதி வழங்கப்படுகிறது. சட்டங்களை அறிந்து கொள்ளாமல் வக்கீல்கள் நீதிமன்றதுக்கு வர முடியாது. வெற்றிகரமான வக்கீல்களாக மாற கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். சட்டங்களை பற்றி முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். வக்கீல்கள் எப்படி, எதை பேச வேண்டும் என அறிந்து பேச வேண்டும். இதனால் வக்கீலும், வக்கீல் தொழிலும், நீதிமன்றமும், நாடும் உயரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குளிர்பானம் வாங்குவதற்கு பணம் பெற்றுக் கொண்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மயங்கி கிடந்தார்.

    கடலூர்:

    கடலூர் வண்டி குப்பத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 35). கூலி தொழிலாளி. நேற்று ராஜீவ் காந்தி தனது உறவினரிடம் குளிர்பானம் வாங்குவதற்கு பணம் பெற்றுக் கொண்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் அதே பகுதியில் மயங்கி கீழே கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மயங்கி கிடந்தார். இதனை தொடர்ந்து ராஜீவ் காந்தியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜீவ் காந்தி இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் கல்வராயன்மலை பகுதியில் அதிரடியாக கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர்.
    • கோவிந்தராஜ் (வயது 48) மற்றும் சந்திரன்(39) ஆகிய இருவரும் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சாவேட்டை 4.0 நடைபெற்று வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கஞ்சா வேட்டை நடத்த உத்தரவிட்டார். அதன்படி கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் அதிரடியாக கஞ்சா வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 48) மற்றும் வேங்காடு கிராமத்தைச் சேர்ந்த சந்திரன்(39) ஆகிய இருவரும் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்து போலீசார் கோவிந்தராஜ் மற்றும் சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் ஒட்டம்பட்டு ஏரி பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக தகவல் கிடைத்தது.
    • சுந்தரமூர்த்தி (வயது 30) என்பவர் சாராயம் காய்ச்சுவதை தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்..

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஒட்டம்பட்டு ஏரி பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் விரைந்து சென்ற அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த தில்லை கோவிந்தன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 30) என்பவர் சாராயம் காய்ச்சுவதை தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் விற்பனைக்கு வைத்திருந்த 20 லிட்டர் சாராயமும் 300 லிட்டர் சாராய ஊரலையும் கைப்பற்றி அழித்தனர். கைது செய்யப்பட்ட சுந்தரமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழரசன் (வயது 63).தமிழரசன் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார் தமிழரசன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக அவரது மனைவிக்கு தகவல் வந்தது,
    • தமிழரசனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கமலம்பாள் நகரைச்சேர்ந்தவர் தமிழரசன் (வயது 63). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.  தமிழரசன் சைக்கிள் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். தற்போது உடல்நிலை சரியிலாத காரணத்தால், வீட்டில் இருந்து வருகிறார். அனிதா அங்கன்வாடி உதவியா ளராக பணி செய்து வருகிறார். தமிழரசனுக்கு குடிபழக்கம் உள்ளது.

    இந்நிலையில், அனிதா கடைக்கு சென்றபோது, உறவினர் ஒருவர், அனிதாவிற்கு போன் செய்து, தமிழரசன் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டதாக கூறினார்.விரைந்து சென்ற அனிதா, உறவினர்கள் உதவியுடன், தமிழரசனை 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தமிழரசனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து, அனிதா கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    கரும்பாலை எஸ்.எம்.பி. காலனியை சேர்ந்த ரங்கநாதன் மகன் மகேஸ்வரன் (30).இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்தார்.

    இந்த நிலையில் மீண்டும் சேர்ந்து வாழ மனைவிக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.மனமுடைந்த மகேசுவரன் வீட்டில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தாயார் சிவகாமி கொடுத்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    நடத்தினர்.

    மேல பொன்னகரம் 5-வது தெருவை சேர்ந்தவர் விக்டர் பால்ராஜ்(70). இவர் தத்தனேரி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி முன்பு சைக்கிளில் சென்றபோது தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.அவரை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மகன் பிராங்கிளின் டேவிட் ஜெபராஜ் கொடுத்த புகாரின்பேரில் செல்லூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து மு விசாரணை நடத்தினர்.

    தத்தனேரி களத்துப்பொட்டல் பர்மா காலனியை சேர்ந்தவர் செல்லதுரை(51). டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. கொன்னவாயன் சாலையில் சென்றபோது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வைகை வடகரை ஆர்.ஆர்.மண்டபம் மேளக்கார தெருவை சேர்ந்த முத்துமணி மகன் யோகேசுவரன் (14). மாற்றுத்திறனாளியான இவர் வீட்டில் இருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே சிறுவன் யோகேசுவரன் பரிதாபமாக உயிரிழந்தான். மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாற்றுத்திறனாளி சிறுவனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • வேறு ஒருவருடன் திருமணமானதால் ரஞ்சித் குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
    • அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டி ச்சாவடி போலீஸ் சரகம் சின்ன காட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ரஞ்சித்குமார் (வயது 30), டிரைவர். இவர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணமானதால் ரஞ்சித் குமார் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். சம்பவத்தன்று வீட்டி லிருந்து வெளியே சென்ற ரஞ்சித் குமார் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ரெட்டிச்சாவடி எஸ்.ஆர்.வி. நகரில் உள்ள மரத்தில் ரஞ்சித் குமார் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து வந்து ரஞ்சித்குமார் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரஞ்சித் குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போனில் பேசிய நபரின் செல்போன் எண் ஆய்வு செய்யப்பட்டது.
    • கோவை கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து திருப்பூர் மாநகரில் கோவில்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

    திருப்பூர்:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு ஒரு போன் வந்தது.

    அதில் பேசிய நபர், திருப்பூர் அவிநாசி ரோடு காந்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் இருந்து பேசுவதாகவும், தனக்கு அருகே இருந்து மது அருந்திய 2பேர் , திருப்பூர் படியூரில் உள்ள முருகன் கோவில், கோவை மருதமலை முருகன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்போவதாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுங்கள் என்று பேசி விட்டு உடனே போனை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சென்னை போலீசார் திருப்பூர் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சோதனையிட்டனர்.

    அப்போது போனில் தகவல்தெரிவித்த நபர் அங்கு இல்லை. மேலும் அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போனில் பேசிய நபரின் செல்போன் எண் ஆய்வு செய்யப்பட்டது.இதில் போனில் பேசிய நபர் திருப்பூர் அண்ணாநகரை சேர்ந்த சரவணன் (வயது 47)என்பது தெரியவந்தது. இன்று காலை அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் லேசான மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. 2019ம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கிய அவருக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. மேலும் உண்மையிலேயே 2பேர் கோவிலில் குண்டு வைத்து தகர்க்க போவதாக பேசியதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தாரா?, அல்லது மனநிலை பாதிப்பு காரணமாக இப்படி செயல்பட்டாரா? என்று போலீசார் சரவணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டாஸ்மாக் பாரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு அதில் மர்மநபர்கள் யாராவது வந்து சென்றுள்ளனரா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து திருப்பூர் மாநகரில் கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவில்களில் குண்டு வைக்கப்போவதாக வந்த தகவலால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×