search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் உள்பட 2 பேர் மாயம்
    X

    இளம்பெண் உள்பட 2 பேர் மாயம்

    • இளம்பெண் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    விருதுநகர்

    விருதுநகர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் செல்வக்கனி (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள வாகன விற்பனையகத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற செல்வக்கனி பின்னர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள சின்ன ரெட்டியபட்டி சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி வடிவு (45), கட்டிட வேலை பார்த்து வந்த இவர் சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் வடிவை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    Next Story
    ×