search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic damage"

    • குடிநீர் திட்டப்பணிக்காக பிரதான சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • அந்த பகுதியில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் பகுதி என்பது குறிப்பிடதக்கது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு வரும் காவேரி கூட்டுகுடிநீர் திட்ட குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளதாக மாலை மலர் செய்தி வெளியானது.

    இதனைதொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் ராமேசுவரம், தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை திட்ட குடி கார்னர் பகுதியில் சேதமடைந்த காவேரி குழாய் சீரமைப்பு பணிக் காக குழி தோண்டப்பட்டு அதிகாலை 4 மணிக்கு சேதமடைந்த பகுதி சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. சிமெண்ட் மூலம் சீரமைக் கப்பட்டதால் குறைந்த பட்சம் 12 மணிநேரம் ஆகும்.

    குழி தோண்டப்பட்ட இடம் ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி, ராமநாதபுரம், கெந்தமாதன பர்வதம் ஆகிய பகுதிக்கு பிரிந்து செல்லும் பிரதான சாலை என்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளா கினர். மேலும் அந்த பகுதியில் நாள் தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் பகுதி என்பது குறிப்பிடதக்கது.

    • அனல் மின் நிலையத்திற்கு வரும் லாரிகள் பவானி செல்லும் சாலையில் 4 ரோடு பேருந்து நிறுத்தம் முதல் மாதையன்குட்டை வரை சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
    • இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது.

    மேட்டூர்:

    மேட்டூரில் அனல் மின் நிலைய தொழிற்சாலையில் நிலக்கரி எரிப்பதன் மூலம் வெளியேறும் சாம்பல் பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அனல் மின் நிலையத்திற்கு வரும் லாரிகள் பவானி செல்லும் சாலையில் 4 ரோடு பேருந்து நிறுத்தம் முதல் மாதையன்குட்டை வரை சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இங்கு லாரி பழுது நீக்கும் பட்டறைகளும், உணவகங்களும் உள்ளதால் சாலையோரத்தில் ஓட்டுனர்கள் வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர் . இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது.

    இப்பகுதியில் அரசு தொழில் பயிற்சி நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். விபத்து ஏற்படும் போது மட்டும் லாரிகள் மீது அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மற்ற நேரங்களில் வாகன தணிக்கை என்ற பெயரில் அபராதம் விதிப்பதிலேயே போலீசார் குறியாக செயல்படுகின்றனர். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாலையோரம் கனரக வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • மழை நின்ற பிறகு வெள்ளி நீர் வீழ்ச்சி உள்பட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • பேரிடர் மீட்பு குழுவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் லேசான சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் கன மழையாக வெளுத்து வாங்கியது. சுமார் 3 மணி நேரம் இடை விடாமல் கொட்டித் தீர்த்த மழையினால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

    ஏரிச்சாலை, கலையரங்கம், நாயுடுபுரம், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து காணப்பட்ட நிலையில் இந்த திடீர் மழையினால் அவர்களும் பாதிக்கப்பட்டனர். மாலையில் பெய்த மழையினால் அவர்கள் விடுதிக்கும் திரும்ப முடியாமல் சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க முடியாமல் தவித்தனர். மழை நின்ற பிறகு வெள்ளி நீர் வீழ்ச்சி உள்பட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனைக் கண்ட சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

    செண்பகனூர் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வத்தலக்குண்டு மலைச்சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் நகராட்சி மண் அள்ளும் எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் ஆங்காங்கே ஏற்பட்ட மண் சரிவுகளையும் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர். கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், ஒரு சில நாட்களில் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் இங்கு பேரிடர் மீட்பு குழுவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஏற்கனவே கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த சாலை இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வராத நிலையில் கொடைக்கானல் நகர் பகுதியிலும் அவ்வப்போது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே கன மழை சீசனை கருத்தில் கொண்டு பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    கொடைக்கானலில் ஒரே நாளில் 5 செ.மீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு லாரியை அப்புறப்ப டுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை - கடலூர் சாலையில் இன்று காலை கடலூரில் இருந்து புதுவை நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி வந்தது.

    ரெட்டிச்சாவடியை அடுத்த மலாட்டாறு பாலம் அருகே கண்டெய்னர் லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது.

    இதில் நடுரோட்டில் சாலையை அடைத்து கொண்டு நின்ற கண்டெய்னர் லாரியால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காலை நேரத்தில் அந்த வழியாக சென்ற அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி, பள்ளி மாணவ - மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    தகவல் அறிந்தவுடன் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு லாரியை அப்புறப்ப டுத்தினர். பின்னர் அந்த லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் பஸ் நிலையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், இன்று காலை அந்த வழியாக சென்ற ஆம்பூர் நகராட்சி குடிநீர் லாரி சிக்கிக்கொண்டது.

    நீண்ட நேரம் ஆகியும் லாரி வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் காலை ஆறு 6 முதல் 7 மணி வரை கடும் போக்குவரத்து பாதித்தது.

    பஸ் பயணிகள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போக்குவரத்தை மாற்றம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளத்தில் சிக்கிய லாரி மீட்கப்பட்டு, சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
    • சாலையில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் போலவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமா காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று காலையில் சூரியன் சுட்டெரித்ததுடன், பிற்பகலில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் இருட்ட தொடங்கியது. இதனால் இதமான சூழ்நிலை நிலவியது.

    மாலையில் காரமடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் காரமடை-வெள்ளியங்காடு சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் இருந்த ராட்சத மரம் ஒன்று வேருடன் சாய்ந்து மின் கம்பியின் மீது விழுந்தது.

    இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    மேலும் மின்வாரிய அதிகாரிகள் சாலையில் விழுந்திருந்த மின் கம்பிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காரமடையிலிருந்து தோலம்பாளையம், வெள்ளியங்காடு சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் காரமடையில் இருந்து தோலம்பாளையம், வெள்ளியங்காடு செல்லும் வாகனங்கள் மங்களக்கரைபுதூர் வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.

    வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    காலை முதலே இதமான கால நிலை நிலவிய நிலையில் மழை பெய்தது. பள்ளி விடும் நேரத்தில் பெய்த மழையால் பள்ளி மாணவர்கள் பாதிப்படைந்தனர்.

    ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வால்பாறையில் குவிந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து கொண்டிருந்தனர்.

    திடீரென மழை பெய்ய தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் வால்பாறையில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது.

    • வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
    • சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக சாலையை வழிமறைத்த யானை தானாக வனப்பகுதியில் சென்றது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. ஆசனூர் அடுத்த திம்பம் அருகே சாலையில் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டு யானை கூட்டம் கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.

    கரும்பு லாரியை கண்டதும் குடியுடன் ஓடி சென்று லாரியை வழிமறைத்து கரும்பை தின்றது. இதனால் தமிழகம் -கர்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப் பட்டது. வாகனங்கள் அணைத்தும் அணிவகுத்து நின்றன. சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக சாலையை வழிமறைத்த யானை தானாக வனப்பகுதியில் சென்றது.

    கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் சாலையில் உலா வருவதும் வாகனங்களை துரத்துவதும் வடிக்கையாகிவிட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். 

    • பெரும்பாறை அருகே வத்தலக்குண்டு- தாண்டிக்குடி மலைபாதையில் உள்ள தீனிக்கோடு- இந்திராநகர் இடையே இன்று காலை சுமார் 4.30 மணி அளவில் தனியார் தோட்டத்தில் இலவம் பஞ்சு மரம் தார் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது.
    • மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் காற்றும் சுழன்று வீசி வருகிறது. நேற்று மாலை தீனிக்கோடு, இந்திராநகர், கானல்காடு பகுதியில் காற்றுடன் மழை பெய்தது.

    பெரும்பாறை அருகே வத்தலக்குண்டு- தாண்டிக்குடி மலைபாதையில் உள்ள தீனிக்கோடு- இந்திராநகர் இடையே இன்று காலை சுமார் 4.30 மணி அளவில் தனியார் தோட்டத்தில் இலவம் பஞ்சு மரம் தார் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் சாலையின் இருபுறமும் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது.

    மேலும் மின் கம்பி அறுந்து விழுந்ததால் தீனிக்கோடு, இந்திராநகர், கானல்காடு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீஸ் ஏட்டு செந்தில்குமார் விரைந்து சென்று அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் அறுவை எந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து தொடங்கியது. மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
    • பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ரோட்டில் விழுந்து கிடந்த கரும்புகளை அகற்றினர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்துள்ள சுற்று வட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்பானது சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் ஆலைக்கு எடுத்து செல்வது வழக்கம்.

    இதேபோல் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள வெள்ளாள பாளையம் பகுதியில் இருந்து வந்த கரும்பு லாரி அதிக பாரம் ஏற்றி வந்ததால் சத்தியமங்கலம்-அத்தாணி செல்லும் சாலையில் சத்தியமங்கலம் முக்கிய வீதியில் கரும்பு பாரம் திடீரென ரோட்டில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    ஆனாலும் நடுரோட்டில் கரும்பு சரிந்து விழுந்ததால் சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து ரோட்டில் விழுந்து கிடந்த கரும்புகளை அகற்றினர்.

    பிறகு சிறிது நேரத்தில் கரும்புகளை முற்றிலு மாக அகற்றி கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை தனியார் ஆலைக்கு அனுப்பி வைத்தனர்.

    • லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதுவது போல் ஒருவர் ஓட்டி சென்றார்.
    • ஆத்திரம் அடைந்த இருசக்கரத்தில் சென்றவர் லாரியை நிறுத்தி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல்-திருச்சி சாலையில் லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதுவது போல் ஒருவர் ஓட்டி சென்றார். ஆத்திரம் அடைந்த இருசக்கரத்தில் சென்றவர் லாரியை நிறுத்தி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சுமார் ½ மணி நேரம் 2 பேருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வாகன ஓட்டிகளே சண்டையிட்ட இருவரையும் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். நாமக்கல் பேருந்து நிலையம் மற்றும் பூங்கா சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் காலை வேளையில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை சரிசெய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    தகவலறிந்த கூடலூா் தீயணைப்பு நிலைய ஊழியா்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூா்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊசிமலை பகுதியில் நேற்று ராட்சத மரம் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கூடலூா் தீயணைப்பு நிலைய ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரோட்டில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

    இதனால் அந்த பகுதியில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் தினந்தோறும் ஏராளமானோர் வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பழகுநர் உரிமம் பெற வருகின்றனர்.
    • இட வசதி இல்லாததால், பரமத்தியிலிருந்து வேலூர் செல்லும் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் தினந்தோறும் ஏராளமானோர் வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பழகுநர் உரிமம் பெற வருகின்றனர். புதிய இருசக்கர வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் பதிவு மற்றும் தகுதிச் சான்று பெறுவதற்காக கொண்டுவரப்படும் வாகனங்களை நிறுத்தி ஆய்வு மேற்கொள்வதற்கு தனியாக இட வசதி இல்லாததால், பரமத்தியிலிருந்து வேலூர் செல்லும் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வாகனங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதனால் பரமத்திவேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆய்வுக்காக நிறுத்தப்பட்ட வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு வாகன ஆய்வுகள் மேற்கொள்வதை தவிர்த்து மாற்று இடத்தில் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பரமத்திவேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) முருகனிடம் கேட்டபோது இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வாகன ஆய்வு மேற்கொள்வதற்கென தனி இடம் ஒதுக்கப்படாமல் உள்ளதால் சாலை ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள் ளப்பட வேண்டிய நிலை உள்ளது. பரமத்தி வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு என சொந்த கட்டிடம் கட்டு வதற்கான ஒப்புதல் பெறப் பட்டுள்ள நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு அப்பகுதியில் ஆய்வுக்கான தனி இடம் அமைக்கப்படும். அதுவரை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் மேற் கொள்ளப்படும் என்று கூறினார்.

    ×