search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திம்பம் அருகே கரும்பு லாரியை வழிமறைத்த யானை கூட்டம்- போக்குவரத்து பாதிப்பு
    X

    திம்பம் அருகே கரும்பு லாரியை வழிமறைத்த யானை கூட்டம்- போக்குவரத்து பாதிப்பு

    • வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.
    • சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக சாலையை வழிமறைத்த யானை தானாக வனப்பகுதியில் சென்றது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. ஆசனூர் அடுத்த திம்பம் அருகே சாலையில் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டு யானை கூட்டம் கரும்பு லாரியை எதிர்பார்த்து சாலை ஓரத்தில் காத்திருந்தது.

    கரும்பு லாரியை கண்டதும் குடியுடன் ஓடி சென்று லாரியை வழிமறைத்து கரும்பை தின்றது. இதனால் தமிழகம் -கர்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப் பட்டது. வாகனங்கள் அணைத்தும் அணிவகுத்து நின்றன. சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக சாலையை வழிமறைத்த யானை தானாக வனப்பகுதியில் சென்றது.

    கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் சாலையில் உலா வருவதும் வாகனங்களை துரத்துவதும் வடிக்கையாகிவிட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×