search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் லாரிநடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
    X

    கடலூர்-புதுவை ரோட்டில் குறுக்கே நின்ற கண்டெய்னர் லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

    தாறுமாறாக ஓடிய கண்டெய்னர் லாரிநடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு லாரியை அப்புறப்ப டுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை - கடலூர் சாலையில் இன்று காலை கடலூரில் இருந்து புதுவை நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி வந்தது.

    ரெட்டிச்சாவடியை அடுத்த மலாட்டாறு பாலம் அருகே கண்டெய்னர் லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது.

    இதில் நடுரோட்டில் சாலையை அடைத்து கொண்டு நின்ற கண்டெய்னர் லாரியால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காலை நேரத்தில் அந்த வழியாக சென்ற அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி, பள்ளி மாணவ - மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    தகவல் அறிந்தவுடன் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு லாரியை அப்புறப்ப டுத்தினர். பின்னர் அந்த லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×