search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic damage"

    • மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.
    • இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தமிழ்ப்பாடி பகுதியை சேர்ந்தவர் திருமேனி மகன் அசோக்குமார் (வயது 28). அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் மதுரை வீரன். இவர்கள் இருவரும் திருச்சுழி-அருப்புக் கோட்டை சாலையை மோட்டார் சைக்கிளில் வேகமாக கடக்க முயன்று உள்ளனர்.

    அப்போது ராமேசுவ ரத்தில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அசோக்குமார், மதுரைவீரன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொது மக்கள் 70-க்கும் மேற்பட் டோர் திருச்சுழி-அருப்புக்கோட்டை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் மணி கண்டன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரி சுந்தர பாண்டி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது திருச்சுழி- அருப்புக்கோட்டை சாலை தமிழ்ப்பாடி பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும், இதனால் இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் வலி யுறுத்தினர். அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த தையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • முல்லை நகரில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் மழை பொய்யாவிட்டாலும் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக அணைப் பகுதிகளான பவானிசாகர், குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம், பெரும்பள்ளம் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதேப்போல் நம்பியூர், கொடுமுடி, சத்தியமங்கலம், பெருந்துறை பவானி போன்ற பகுதிகளும் பலத்த மழை பெய்து வருகிறது.

    கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூரில் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. நம்பியூர், குருமந்தூர், இருகாலூர், எலத்தூர் போன்ற பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக நம்பியூர் இருகாலூர் அடுத்த கொளந்தபாளையம் கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதேபோல் கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது. கோபி அரசூர்-தட்டாம்புதூரில் நெடுஞ்சாலை துறையினர் மூலம் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் தற்காலிக தரைப்பாலம் பலத்த மழையால் நேற்று 2-வது நாளாக நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் 6 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய உள்ளது. இதனால் கிராம மக்கள், மாணவ-மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்த வருகின்றனர்.

    இதேபோல் பவானி சாகர், கொடுமுடி, குண்டேரிப்பள்ளம், தாளவாடி, சத்தியமங்கலம், வரட்டுப்பள்ளம், கொடிவேரி, பெருந்துறை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    சத்தியமங்கலம் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் சத்தியமங்கலம் அடுத்த காவிளிப்பாளையம் அருகே உள்ள முல்லை நகரில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் முல்லை நகரில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் அந்த வீடுகளை சேர்ந்த மக்கள் இரவு முழுவதும் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். இதேப்போல் புளியம்பட்டி பவானிசாகர் பகுதியில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்ததால் அந்த பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    புளியம்பட்டியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவ- மாணவிகள், தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    புளியம்பட்டி அருகே பவானிசாகர் சாலை கணக்கரசம்பாளையத்தில் உள்ள தரைப்பாலம் விடிய விடிய பெய்த பலத்த மழையால் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பனையம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய பெருசபாளையம் குட்டை நிரம்பியுள்ளது.

    இதைத்தொடர்ந்து நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குட்டையும் நிரம்பியது. மேலும் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதேபோல் தோட்டத்துக்குள் தண்ணீர் புகுந்ததால் வாழைகள் நீரும் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

    நம்பியூர்-123, பவானி சாகர்-92, கொடுமுடி-62, குண்டேரிப்பள்ளம்-56.30, தாளவாடி-44.20, சத்தியமங்கலம்-43, வரட்டுப்பள்ளம்-21.20, கொடிவேரி-12, கோபி-10.20, பெருந்துறை-9, மொடக்குறிச்சி-1. ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 503 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • பரமத்திவேலூர் நகரின் மத்தியில் வேலூர் பேரூராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் உள்ளது.
    • மேலும் நிலையம் வெளியேயும், சிலர் சாலை வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் நகரின் மத்தியில் வேலூர் பேரூராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் உள்ளது. வேலூர் பேரூராட்சி சார்பில் பஸ் நிலைய வளாகத்தில் 30- க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான கடைகள் திறப்பதில்லை. அவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் ஆக்கிரமிப்பு செய்து பூ கடை, வாழைத்தார் கடை, வெற்றிலைக் கடை, தின்பண்டங்கள் கடை, மளிகை பொருட்கள் கடை வைத்து விற்பனை செய்கின்றனர்.

    மேலும் நிலையம் வெளியேயும், சிலர் சாலை வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    பஸ் நிலையத்திற்குள் உள்ள கடைக்காரர்கள் பயணிகள் நிற்கும் இடம் வரை கடைகளை விரிவுபடுத்தி இருப்பதால் பயணிகள் அந்த பகுதியில் நிற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பஸ் உள்ளே, வெளியே வரும் வழியில் ஆக்கிரப்பு கடையில் உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பரமத்திவேலூர் அரசு கால்நடை மருத்துவமனை நுழைவாயில் இருபுறமும் கடையில் ஆக்கிரமிப்பு செய்து வாடகைக்கு விடுகின்றனர். இங்கும் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கல்லூரி பஸ்சின் இடது புற முன் சக்கரம் திடீரென பள்ளத்தில் சிக்கி சாலையிலேயே நின்று போனது.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிந்த இடத்தில் ஜல்லிகளை கொண்டு பள்ளத்தை மூடிவிட்டனர்.இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நெல்லிக்குப்பம் பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்த சாலையில் தனியார் கல்லூரி பஸ் இன்று காலை சென்றது. அப்போது, கல்லூரி பஸ்சின் இடது புற முன் சக்கரம் திடீரென பள்ளத்தில் சிக்கி சாலையிலேயே நின்று போனது.

    இதையடுத்து அவ்வழியே சென்றவர்களின் உதவியுடன் பள்ளத்தில் சிக்கிய பஸ்சினை கல்லூரி மாணவர்கள் மீட்டனர். இந்த சாலை குறுகிய சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பாலத்தில் இருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கிய டிரெய்லர் லாரி சாலையிலிருந்த பள்ளத்தில் விழுந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் இருந்து இட்டாச்சி வாகனத்தை ஏற்றிக் கொண்டு டிரெய்லர் லாரி இன்று காலை பண்ருட்டிக்கு புறப்பட்டது. இந்த லாரி சென்னை - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் அருகே உள்ள மருவாய் பரவனாற்று பாலத்தின் மீது இன்று காலை 11 மணியளவில் வந்தது.அப்போது பாலத்தில் இருந்த வேகத்தடை மீது ஏறி இறங்கிய டிரெய்லர் லாரி சாலையிலிருந்த பள்ளத்தில் விழுந்தது. இதில் டிரெய்லர் லாரியில் ஏற்றி வந்த இட்டாச்சி வாகனம், லாரியிலிருந்து துள்ளி குதித்து அந்தரத்தில் தொங்கியது.

    இதனால் லாரி ஒரு பக்கமாக சாய்ந்து பாலத்தில் வேறு எந்த வாகனமும் செல்லமுடியாதபடி பழுதாகி நின்றது. இதையடுத்து அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், வேலூர், சேலம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.இது குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிரெய்லர் லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • காவிரி ஆற்றின் மேல் உள்ள பாலம் அடுத்த இடத்தில் சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் நிலை தடுமாறி டிவைடரில் மோதி நின்றது தெரியவந்தது.
    • சேலம் - கோவை புறவழிச்சாலையில் நேற்று மாலை வாகனங்கள் செல்ல முடியாதபடி நீண்ட வரிசையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் - கோவை புறவழிச்சாலையில் நேற்று மாலை வாகனங்கள் செல்ல முடியாதபடி நீண்ட வரிசையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது. மேலும் விடுமுறை நாள் என்பதால் நேரம் ஆக ஆக வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து குமாரபாளையம் போக்குவரத்து போலீசார் நேரில் சென்று பார்த்த போது காவிரி ஆற்றின் மேல் உள்ள பாலம் அடுத்த இடத்தில் சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் நிலை தடுமாறி டிவைடரில் மோதி நின்றது தெரியவந்தது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

    இதையடுத்து போக்குவரத்து போலீசார் பஸ்சை மீட்டு மற்ற வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இந்த விபத்தால் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.,

    • குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
    • அம்மாபேட்டை, வரட்டு பள்ளம், கோபி, பவானி, கவுந்தப்பாடி, குண்டேரி பள்ளம், கொடுமுடி, கொடிவேரி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவாகி வந்தது. 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலையிலும் வழக்கம் போல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மதியம் 3 மணி அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது.

    ஈரோடு மாநகர் பகுதியில் மதியம் லேசாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் இடியுடன் கூடிய கனமழையாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

    சுமார் ஒரு மணி நேரமாக கொட்டி தீர்த்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதைப்போல் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. மாவட்டத்தில் இங்கு அதிகபட்சமாக 40 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    இதேபோல் அம்மாபேட்டை, வரட்டு பள்ளம், கோபி, பவானி, கவுந்தப்பாடி, குண்டேரி பள்ளம், கொடுமுடி, கொடிவேரி, பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    சத்தியமங்கலத்தில் நேற்று மாலை 5 மணி யிலிருந்து இரவு 7 மணிவரை பண்ணாரி, கொத்த மங்கலம், திம்பம் மலைப்பகுதி, ராஜன் நகர் சிக்கரசம்பாளையம், கடம்பூர் மலைப்பகுதி, அணைக்கரை சுஜில்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது.

    இதனால் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் அணைக்கரையிலிருந்து சுஜல் கரை செல்லும் வழியில் மூங்கில் மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் நேற்று இரவு முழுவதும் போக்குவரத்து பாதிப்படைந்தது.

    இதனை அடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் சொல்லி வனத்துறையினர் இன்று அதிகாலையில் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பிறகு சிறிது நேரம் கழித்து மூங்கில் மரத்தை வெட்டி அகற்றிய உடன் போக்குவரத்து சீரானது.

    இதேபோல் நேற்று மாலை சத்தியமங்கலத்தில் பரவலாக பெய்த மழையால் சத்தியமங்கலம்-ஊட்டி செல்லும் சாலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் மரம் ஒன்று முறிந்து நடுரோட்டில் விழுந்தது.

    அந்த வழியாக செல்லும் தொட்டம்பாளையம், அய்யன் சாலை பவானிசாகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் உடனடியாக பொதுப்பணி துறைக்கு தகவல் சொல்லி வரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    பிறகு 2 மணி நேரம் கழித்து மரத்தை முழுவதுமாக அகற்றிய உடன் போக்குவரத்து சீரானது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருந்துறை-40, ஈரோடு-28, அம்மாபேட்டை-23.40, வரட்டு பள்ளம்-23.30, கோபி-23.20, பவானி-19.40, கவுந்தப்பாடி-9.40, குண்டேரி பள்ளம்-7.80, கொடுமுடி-6, எலந்த குட்டைமேடு-5.40, கொடுமுடி-3, பவானிசாகர்-2.40.

    • பஸ்சை வேடசந்துார் தாலுகா தன்னம்பட்டியை சேர்ந்தவெங்கடாஜலபதி (43) ஓட்டி வந்தார்.
    • விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

     சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு விரைவு பஸ் சென்றுகொண்டிருந்தது.பஸ்சை வேடசந்துார் தாலுகா தன்னம்பட்டியை சேர்ந்தவெங்கடாஜலபதி (43) ஓட்டி வந்தார். நேற்று இரவு விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ் திடீரென நிலை தடுமாறி முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதியது .

    இதில் பஸ்சின்முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. இதில் பஸ் டிரைவர் வெங்கடாஜலபதி ,பயணிகள் மணிவேல் (31) , காமேஸ்வரி (36) திண்டுக்கல் திருஞான அருள், (63) சீர்காழி பாஸ்கர் (72) நந்தவனபட்டி காசிநாதன் (40) உள்பட 6 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சுங்கச்சா வடி விபத்து சேப்டி வேன் மற்றும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் பட்டவர்களை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக விபத்து ஏற்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரி செய்தனர்.

    • லாரியை வளத்தி நீலாம் பூண்டியைச் சேர்ந்த டிரைவர் தியாகராஜன் என்பவர் ஓட்டிச் சென்றார் .
    • போலீசார் வாகனங்களை சர்வீஸ் சாலையில் மாற்றி அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. லாரியை வளத்தி நீலாம் பூண்டியைச் சேர்ந்த டிரைவர் தியாகராஜன் (வயது36) என்பவர் ஓட்டிச் சென்றார் . நேற்று இரவு 7.40 மணி அளவில் முண்டியம்பாக்கம் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக இருந்த மின் கம்பத்தில் மோதி லாரி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த கரும்புகள் சாலை முழுவதும் சிதறியது.

    இதனால் திருச்சி சென்னை மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப் -இன்ஸ்பெக்டர்கள் துரைராஜ் ,காத்தமுத்து மற்றும் போலீசார் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற வாகனங்களை சர்வீஸ் சாலையில் மாற்றி அனுப்பி வைத்தனர். விக்கிரவாண்டி டோல் பிளாசா ஊழியர்கள் ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் லாரி மற்றும் கரும்புகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    • வாகனங்கள் அணிவகுத்து நின்றன
    • போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் நேற்று ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றனர்.

    14-வது கொண்டை ஊசி வளைவில் செல்லும் போது எதிரே வந்தவாகனத்திற்கு வழி விட முயன்றபோது மலையில் இருந்து கிழே இறங்கிய கார் மீது தனியார் பள்ளி பஸ் உரசியது.

    இத னால் பஸ் செல்ல முடியாமல் கொண்டை ஊசி வளைவில் நின்றது. இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.
    • ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து முழுகொள்ளவை நெருங்கியது.

    இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூண்டி ஏரியில் இருந்து முதலில் 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து 3080 கனஅடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 35 அடியில் 34.25 அடிக்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 3210 கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதிக அளவிலான உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மெய்யூர் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. எனவே,மெய்யூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி செல்லும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சீத்தஞ்சேரி வழியாக செல்கின்றன.

    மேலும் தரைப்பாலம் அருகே புதியதாக கட்டி வரும் மேம்பாலம் தற்காலிக போக்குவரத்துக்கு பயன்படுத்திக்கொள்ள நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வருகிறது.

    இதேபோல் ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பெரியபாளையம் அருகே அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் தரை பாலம் நீரில் மூழ்கியது.சுமார் ஒரு அடிக்கும் மேல் இந்த தரைப்பாலத்தின் மீது தண்ணீர் பாய்ந்து செல்கிறது.ஆபத்தை உணராமல் அதில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    இதேபோல் ஆரணி-மங்கலம் இடையே ஆரணி ஆற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக நடைபாதை நீரில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த பகுதிகளில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர்.
    • இடைஞ்சலாகவும் இருப்பதாக கூறி ஆட்டோக்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் போலீஸ் நிலைய சுற்றுச்சுவர் அருகே ஆட்டோவை நிறுத்தி வந்தார்கள். இதனால் போக்குவரத்து இடையூறாகவும், பொது மக்களுக்கு இடைஞ்சலாகவும் இருப்பதாக கூறி ஆட்டோக்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இதனால் புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடத்தில் தற்காலிகமாக ஆட்டோவை நிறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பேரூராட்சி முன்பு திடீரென 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கூட்டத்தை கலைத்தனர். இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மீது சின்ன சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×