search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TMC"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய ஏஜென்சிகளான என்ஐஏ, சிபிஐ, ஐடி என எத்தனை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்?
    • சிபிஐ, ஐடி, ஈடி போன்ற விசாரணை அமைப்புகளின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் கூச் பெஹார் மாவட்டத்தில் நடந்த பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நமது அரசு சிறப்பாக செயல்பட்டது.

    அனைத்து ஏஜென்சிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

    மத்திய ஏஜென்சிகளான என்ஐஏ, சிபிஐ, ஐடி என எத்தனை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்?.

    வங்காளத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் இங்கு இருக்கும்வரை வங்காள மக்களைத் தொடத் துணிய மாட்டார்கள்.

    சிஏஏ தேர்தலுக்கு முன் கொண்டு வரப்பட்டது. உங்கள் பெயரை பதிவு செய்ய சமர்ப்பித்தவுடன் நீங்கள் ஒரு வங்காளதேசியாக அறிவிக்கப்படுவீர்கள்.

    சி.பி.ஐ, வருமான வரித்துறை மற்றும் ஈ.டி போன்ற விசாரணை அமைப்புகளின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்.

    விசாரணை அமைப்புகள் பா.ஜ.க.வுக்காக செயல்படுவதால் சமநிலையை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவேன்.

    ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற விதியை பா.ஜ.க. மட்டும் பின்பற்றுகிறது என தெரிவித்தார்.

    • 2021-ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி லக்ஷ்மிர் பந்தர் என்ற திட்டத்தை கொண்டு வந்தது.
    • இந்த திட்டத்தின் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறோம்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜி "2021-ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி லக்ஷ்மிர் பந்தர் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறோம். இந்த திட்டத்தை காப்பியடித்து பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் அந்த கட்சி திட்டத்தை செயல்படுத்துகிறது.

    இந்த பட்ஜெட்டில் பொதுப்பிரிவைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவில் பின்தங்கிய பெண்களுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    மத்திய அரசு சமையல் சிலிண்டர் ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அரசாணை வெளியிட்டால், நாங்கள் மேற்கு வங்காளத்தில் நிறுத்தியுள்ள 42 வேட்பாளர்களையும் திரும்பப் பெறுகிறோம் என்பதை உறுதியாக கூறிகிறேன்.

    நாங்கள் என்ன வாக்குறுதி அளித்தோமோ, அதை செய்துள்ளோம். பிரதமர் மோடி ஒவ்வொரு மக்களின் வங்கி கணக்கில் 14 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்றார். ஆனால், வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மம்தா பானர்ஜியின் வாக்குறுதியுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள். இது ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட பெண்களையும் சென்றடைகிறது.

    • கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்.
    • மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.

    இதுகுறித்து, மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி முதல்வர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படும்போது, சிபிஐ/இடி விசாரணையின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தண்டனையின்றி தங்கள் முறைகேடுகளைத் தொடர அனுமதிக்கப்படுவது மூர்க்கத்தனமானது. குறிப்பாக பாஜகவுடன் இணைந்த பிறகு.

    இது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெர்ஹாம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் யூசுப் பதான் வேட்பாளராக களமிறங்குகிறார்.
    • எனது கட்சி செய்த பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் பெர்ஹாம்பூர் பாராளுமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வேட்பாளராக களமிறங்குகிறார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

    தேர்தல் களம் மிகவும் வித்தியாசமானது. ஆனால் மக்களின் எதிர்பார்ப்புகள் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்காக நான் பணியாற்றுகிறேன். எனது கட்சி செய்த பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

    2007-ம் ஆண்டு உலக கோப்பைக்கு உற்சாகமாக இருந்ததைப் போல தற்போதும் உற்சாகமாக இருக்கிறேன்.

    குஜராத் எனது ஜென்ம பூமி மற்றும் மேற்கு வங்காளம் எனது கர்ம பூமி.

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். ஆனால் காலம் மாறுகிறது, மாற்றம் நல்லதுக்காகவே நடக்கும் என தெரிவித்தார்.

    • சிஏஏ மூலம் குடியுரிமை பெற விண்ணப்பிக்க முடியும் என மத்திய மந்திரி பேச்சு.
    • சிஏஏ மூலம் விண்ணப்பித்தால் மந்திரி பதவி பறிபோகிவிடும் என்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்.

    இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான இணைய தளம் மற்றும் செயலியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சிஏஏ-வை செயல்படுத்தமாட்டோம் என மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் மத்திய இணை மந்திரி ஷாந்தனு தாகூர், சிஏஏ மூலமாக குடியுரிமை பெற விண்ணப்பம் செய்வேன் எனக் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அவரது மந்திரி பதவி குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இது தொடர்பாக ஷாந்தனு தாகூர் கூறுகையில் "ரிஜிஸ்டர் செய்யப்பட்ட சமூக அமைப்புகள் மூலம் பெறப்பட்ட சான்றிதழ் மூலம் கூட குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்க முடியும். அவர்களுக்கு நாங்கள் குடியுரிமை வழங்குவோம். நான் கூட குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பேன். இருந்த போதிலும் என்னுடைய பாட்டியின் அம்மா குடிபெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் குடியுரிமை பெற்றுள்ளனர். இதனால் நான் விண்ணப்பிக்க தேவையில்லை" என்றார்.

    மேலும், எதிர்க்கட்சிகளால் தவறாக பிரசாரம் செய்யப்படுகிறது. மம்தா பானர்ஜி என்ன செய்கிறார் என்று பார்க்க வேண்டும். குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்வதால், எனக்கு வசதிகள் இல்லாமல் போய் விடுமா? என்று பார்க்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், மத்திய இணை மந்திரி ஷாந்தனு தாகூரின் மத்திய மந்திரி பதவி குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பிரத்யா பாசு "ஷாந்தனு தாகூர் இந்திய குடிமகனாக இருந்து, ஐந்து ஆண்டுகள் பதவி வகித்த நிலையில், மீண்டும் குடியுரிமை கேட்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது" என்றார்.

    மற்றொரு தலைவர் சந்திரமா பட்டச்சார்யா "சாந்தனு தாகூர் எப்போது விண்ணப்பிப்பார் என்று நாங்கள் காத்திருக்கிறோம், ஏனெனில் அவர் விண்ணப்பித்தவுடன், அவர் இனி இந்திய குடிமகன் இல்லை என்பதால் அவரது அமைச்சர் பதவி போய்விடும்" என்றார்.

    ஷாந்தனு தாகூரின் மூதாதையர்கள் வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தன்னால் சிசிஏ-யின் கீழ் விண்ணப்பிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மேற்கு வங்காள முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார்.
    • தலையில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எக்ஸ் தளத்தில், மம்தா பானர்ஜி மருத்துவமனையில் நெற்றியில் காயத்துடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மம்தா பானர்ஜி விரைவில் நலம்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

    நெற்றியில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் நரேந்திர மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் இருக்கும் புதிய உலகத்தில் இன்று நான் நுழைந்துள்ளேன்.
    • திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடத்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்துள்ளார்.

    மேற்கு வங்காள பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் அவர் பாஜகவில் சேர்ந்தார்

    இதன் பின்னர் பேசிய அபிஜித், "பிரதமர் நரேந்திர மோடி , உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள் இருக்கும் புதிய உலகத்தில் இன்று நான் நுழைந்துள்ளேன். கட்சி எனக்கு எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் என்னால் முடிந்தவரை அதை சிறப்பாக செய்ய முயற்சிப்பேன்

    மேற்கு வங்காளத்தில் ஆட்சியில் இருக்கும் ஊழல் அரசை அகற்றுவதற்கான அடித்தளத்தை இந்த மக்களவை தேர்தலில் உருவாக்குவதே எங்களின் பிரதான நோக்கம். மேற்கு வங்காளம் வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இங்கு பாஜக ஆட்சிக்கு வருவது அவசியம். திரிணாமூல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டம் நடத்துவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.

    கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்தார்.

    இந்நிலையில் பாஜகவில் சேர்ந்த அபிஜித் வரும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட இருக்கிறார் என்றும், அவர் போட்டியிடும் மக்களவை தொகுதி குறித்து விரைவில் பாஜக அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

    • கடந்த ஜனவரி 12-ந்தேதி அமலாக்கத்துறை இவரது வீட்டில் சோதனை நடத்தியது.
    • திங்கட்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் இருந்து விலகினார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக தபஸ் ராய் திகழ்ந்து வந்தார். ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

    நகராட்சி ஆட்சேர்ப்பு முறைகேடு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் தபஸ் ராய்க்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அவருக்காக குரல் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.

    இதனால் கட்சி மீது அதிருப்தி அடைந்த அவர் கடந்த திங்கட்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் நேற்று பா.ஜனதா கட்சியில இணைந்துள்ளார். மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தலைவர் சுகந்தா மஜும்தார் மற்றும் சுவேந்து அதிகாரி ஆகியோர் முன்னிலையில் பா.ஜனதா கொடியை பெற்றுக் கொண்டு அந்த கட்சியில் இணைந்தார்.

    "சொந்த நலனுக்கான கட்சியில் இருந்து விலகிய தபஸ் ராய் போன்ற துரோகிகளை மேற்கு வங்காள மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்" என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாந்தனு சென் தெரிவித்துள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதும், பா.ஜனதா தலைவர் சுவேந்து அதிகாரி "தபஸ் ராய் எங்கள் மாநிலத்தின் மூத்த அரசியல்வாதி. அவர் ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. கட்சியுடன் ஆலோசனை நடத்தி, உயர்த் தலைவர்கள் சம்மதம் பெற்ற பிறகு  கட்சியில் இணையும்படி கேட்டுக்கொள்வோம்" எனத் தெரிவித்திருந்தார்.

    பா.ஜனதாவில் இணைந்த தபஸ் ராய் "தவறான ஆட்சி மற்றும் அட்டூழியங்களை எதிர்த்து போராட விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், கடந்த ஜனவரி 12-ந்தேதி அமலாக்கத்துறை என்னுடைய அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தியது. கட்சியில் இருந்து யாரும் முன்வந்து ஒரு அறிக்கை கூட கொடுக்கவில்லை. மேலும் மனவேதனை அடைந்த எனது குடும்பத்தினரிடம் ஆறுதலாக கட்சித் தலைவர்கள் பேசவில்லை. ஆகவே, நான் மிகவும் கவலை அடைந்தேன். பா.ஜனதாவால் என்னுடைய வீட்டிற்கு அமலாக்கத்துறை அனுப்பப்படவில்லை. சுதிப் பனார்ஜிதான் அனுப்பினார். அவர் என்னைக் கண்டு பயப்படுகிறார். பொறாமைப்படுகிறார்" என்றார்.

    முறைகேட்டில் சிக்கியவர்கள் பா.ஜனதாவில் இணைந்தால் அவர்களை மத்திய அமைப்புகள் கண்டு கொள்ளாது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் தபஸ் ராய் அமலாக்கத்துறையால் சோதனைக்கு உட்பட்ட நிலையில் பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.

    • நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார்.
    • பிரதமர் மோடி பராசத் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

    கொல்கத்தா:

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபராக விளங்கிய ஷேக் ஷாஜகான், 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிராக சொத்துகளை பறித்தல், பணம் பறித்தல், கூட்டு பலாத்காரம் செய்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக அங்குள்ள பெண்கள் குற்றம் சாட்டினர். தெருக்களில் ஆயுதங்களுடன் களமிறங்கி போராடியதால் ஷேக் ஷாஜகானுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் அவரை கட்சியில் இருந்து நீக்கியது.

    இதற்கிடையே, பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். நீருக்கு அடியில் மெட்ரோ ரெயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பாதையை திறந்துவைத்து, ரெயிலில் பயணம் செய்தார். தொடர்ந்து 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத் என்ற இடத்தில் உள்ள கச்சாரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி பேசினார்.

    பாதிக்கப்பட்ட சந்தேஷ்காளியில் உள்ள பெண்கள் பராசத் பொதுக்கூட்டத்திற்கு வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இந்நிலையில், பராசத் பொதுக்கூட்டம் முடிந்ததும் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காளி பெண்கள் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர். அவர்களது குறைகளைக் கேட்ட பிரதமர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என பாஜக தலைவர் அக்னிமித்ரா பவுல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

    • நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்திருக்கிறார்.
    • திரிணாமூல் காங்கிரசுக்கு எதிராக பல தீர்ப்புகளை வழங்கிய கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவி விலகி, தற்போது பாஜகவில் சேர்ந்திருக்கிறார். இவரது தீர்ப்புகளை இனி யார் நம்புவார்?

    கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பை இன்று ராஜினாமா செய்த அபிஜித் கங்கோபாத்யாய், வரும் 7-ம் தேதி பாஜகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளார்.

    கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜகவில் சேரவிருப்பதாக அபிஜித் கங்கோபாத்யாய் அறிவித்திருக்கிறார்.

    வரும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட இருக்கிறார் என்றும், அவர் போட்டியிடும் மக்களவை தொகுதி குறித்து விரைவில் பாஜக அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், "திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஊழலுக்கு எதிராக போராடும் ஒரே தேசிய கட்சி பாஜக தான். அதனால் தான் வரும் மார்ச் 7ஆம் தேதி நான் பாஜகவில் சேர இருக்கிறேன். இதற்காக நான் நீண்ட நாட்கள் யோசிக்கவில்லை. சுமார் 7 நாட்களுக்கு முன்பு பாஜகவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேன். இப்போது பாஜகவில் சேர இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்

    இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது X பக்கத்தில் காட்டமாக ட்வீட் ஒன்றை இட்டுள்ளார். அதில், "திரிணாமூல் காங்கிரசுக்கு எதிராக பல தீர்ப்புகளை வழங்கிய கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவி விலகி, தற்போது பாஜகவில் சேர்ந்திருக்கிறார். இவரது தீர்ப்புகளை இனி யார் நம்புவார்? நீதிபதிகளுக்கான நடத்தை விதிகளை இவர் கேவலப்படுத்தி இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

    "உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி விலகி, ஒரு அரசியல் கட்சியில் சேர்கிறார்கள் எனில், அவர்கள் அதுவரை நீதி வழங்காமல் அக்கட்சிக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்றே அர்த்தம்" என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி எம்.பி. சஞ்சய் ராவுத் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிருஷ்ணா நகரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • வங்காளத்தின் வளர்ச்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னுரிமை அளிப்பதில்லை என்றார்.

    கொல்கத்தா:

    பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர்

    மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    இங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் செயல்படும் விதம் மேற்கு வங்காள மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    மக்கள் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் இந்தக் கட்சி அட்டூழியங்களுக்கும் துரோகங்களுக்கும் மற்றொரு பெயராகிவிட்டது.

    திரிணாமுல் காங்கிரசைப் பொறுத்தவரை வங்காளத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை இல்லை. மாறாக ஊழல், உறவினர் மற்றும் துரோகம், ஊழலுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

    வங்காள மக்களை ஏழைகளாக வைத்திருக்க விரும்புவதாலேயே, அக்கட்சியின் அரசியல் ஆட்டம் தொடர்ந்து நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

    • மேற்கு வங்காளத்தின் அரம்பாக் பகுதியில் பா.ஜ.க. சார்பில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • அப்போது சந்தேஷ்காலி பெண்களின் மரியாதை, கண்ணியத்திற்காக பா.ஜ.க. தலைவர்கள் போராடினர் என்றார்.

    கொல்கத்தா:

    பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காள மாநிலத்தின் அரம்பாக் பகுதியில் பாஜக சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    சந்தேஷ்காலியில் உள்ள சகோதரிகளை திரிணாமுல் காங்கிரஸ் என்ன செய்தது என்பதை நாடு பார்க்கிறது. இதனால் நாடு முழுவதும் கொதிப்படைந்துள்ளது.

    சந்தேஷ்காலியில் நடந்த சம்பவத்தால் சமூக சீர்திருத்தவாதியான ராஜாராம் மோகன் ராயின் ஆன்மா வேதனை அடைந்திருக்க வேண்டும்.

    ஒரு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எல்லா வரம்புகளையும் கடந்தார். மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் இங்குள்ள பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியத்திற்காக போராடினர். போலீசார் நேற்று அவரை கைதுசெய்ய வேண்டியிருந்தது என தெரிவித்தார்.

    ×