search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    துரோகம், ஊழலுக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சி திரிணாமுல்: பிரதமர் மோடி தாக்கு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    துரோகம், ஊழலுக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சி திரிணாமுல்: பிரதமர் மோடி தாக்கு

    • கிருஷ்ணா நகரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • வங்காளத்தின் வளர்ச்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னுரிமை அளிப்பதில்லை என்றார்.

    கொல்கத்தா:

    பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர்

    மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    இங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் செயல்படும் விதம் மேற்கு வங்காள மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    மக்கள் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் இந்தக் கட்சி அட்டூழியங்களுக்கும் துரோகங்களுக்கும் மற்றொரு பெயராகிவிட்டது.

    திரிணாமுல் காங்கிரசைப் பொறுத்தவரை வங்காளத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை இல்லை. மாறாக ஊழல், உறவினர் மற்றும் துரோகம், ஊழலுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

    வங்காள மக்களை ஏழைகளாக வைத்திருக்க விரும்புவதாலேயே, அக்கட்சியின் அரசியல் ஆட்டம் தொடர்ந்து நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

    Next Story
    ×