search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TASMAC"

    • கூடுதல் விலைக்கு மது விற்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    • மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி பகுதியில், சிலர் மொத்தமாக டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாமல்லபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வடக்கு மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் (வயது 53), இ.சி.ஆர் மணிகண்டன் (24) ஆகிய இருவரும் கூடுதல் விலைக்கு மது விற்றபோது போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கருத்தரங்குகளில் மது விநியோகிக்க அனுமதித்தால், சாதி அமைப்புகள், அரசியல் கட்சி மாநாடுகளிலும் மது விநியோகிக்க கோருவர்.
    • வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் மேற்கொள்ளபட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்னிலையில் வந்தது.

    அப்போது, "டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு" என்று

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்தது.

    இதற்கிடையே, கருத்தரங்குகளில் மது விநியோகிக்க அனுமதித்தால், சாதி அமைப்புகள், அரசியல் கட்சி மாநாடுகளிலும் மது விநியோகிக்க கோருவர். சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது மதுபானம் விநியோகிப்பது அரசின் சட்டத்துக்கு எதிரானது என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த தமிழக அரசு, விளையாட்டு மைதானங்கள், போட்டிகள் நடக்கும் இடங்களில் மதுபானங்கள் நிதியோகிக்கபட மாட்டாது என்றது.

    மேலும், இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சின்னஓவுலாபுரம் (வெள்ளக்கரடு) ஊராட்சி களில் நெடுஞ்சாலை யோரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.
    • இந்த மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியும், மாவட்ட நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதிமக்கள் தெரிவித்தனா்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூா் ஒன்றியத்தைச் சோ்ந்த எரசக்கநாயக்கனூா், சின்னஓவுலாபுரம் (வெள்ளக்கரடு) ஊராட்சி களில் நெடுஞ்சாலை யோரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைக ளில் மது அருந்திவிட்டு வரும் குடிமகன்களால் அந்த வழியாகச் செல்லும் பெண்கள், குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாகி ன்றனா்.

    இது தவிர தினமும் மது போதையில் வாகனங்களை இயக்குவோரால் விபத்து க்கள் ஏற்படுவதுடன், பல இடங்களில் தகராறிலும் ஈடுபடுகின்றனா்.

    இதனால் அந்தப் பகுதி பொதுமக்களும் தாங்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பதாக தெரிவிக்கி ன்றனா்.

    இந்த மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி யும், மாவட்ட நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவா்கள் தெரிவித்தனா். எனவே மாவட்ட நிா்வாகம் இந்த மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் மதுபானம் ரூ.467 கோடிக்கு விற்பனையானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • மகளிர் உரிமைத் தொகையாக இந்த மாதம் அரசு செலுத்தியது ரூ.1,138 கோடி.

    தீபாவளிப் பண்டிகைக்கு டாஸ்மாக் மதுபானம் ரூ.467 கோடிக்கு விற்பனையானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மகளிர் உரிமைத்தொகையுடன் இணைத்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறும்போது, இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகையாக அரசு செலுத்தியது ரூ.1,138 கோடி. இதில் பெரும் பகுதி மது விற்பனை மூலம் அரசுக்கு திரும்பி இருக்கிறது.

    இந்த நிலை நீடித்தால் தமிழக மக்களுக்கு விடியல் எப்படி வரும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதையே பா.ம.க.வினர் பரப்புரையாக செய்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'காட்பாதர்' என்ற பீர் பாட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.
    • வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் தற்போது புதிதாக 2 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்துள்ளது. குடிமகன்களின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த பீர் பாட்டில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

    தற்போது 'தண்டர்போல்ட் ஸ்டிராங்' என்ற புதிய வகை பீர் பாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் நேற்று முன்தினம் இரவு முதல் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பீர் பாட்டிலின் விலை ரூ.160 ஆகும். மேலும் மற்றொரு ரகமாக 'காட்பாதர்' என்ற பீர் பாட்டிலும் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.

    இந்த புதிய பீர் பாட்டில் வகைகளை தீபாவளி விருந்தாக குடிமகன்கள் பார்க்கிறார்கள். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்களை அறிமுகம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

    • இதுதான் தி.மு.க.வின் ஒப்பற்ற சாதனை.
    • பிரதமர் மோடி கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மணப்பாறை பகுதியில் யாத்திரை சென்றார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    மணப்பாறை தொகுதியில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்தவர் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    இந்த கட்சிக்கு தமிழகத்தில் இருக்கும் ஒரே வேலை பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தீவிரவாதிகளை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதுதான். இந்த கட்சியை மனிதநேய மற்ற கட்சி என்றுதான் அழைக்க வேண்டும்.

    மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்கள். ஆனால் பணியின் போது கிடைக்கும் சரளை மண்ணுக்காக கல்லூரியை காலனி வாசல் பட்டிக்கு மாற்றிவிட்டார்கள். இது வரை கல்லூரி கட்டவில்லை. சொந்த கட்டிடம் இல்லாமல் பள்ளிக்கூட கட்டிடத்தில் கல்லூரி செயல்படுகிறது. எய்ம்ஸ் பற்றி பேச தி.மு.க. வுக்கு என்ன தகுதி இருக்கிறது?

    புதிதாக டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு குடிப்பழக்கம் கேடு விளைவிக்கும் என்று, டாஸ்மாக்கில் மது விற்பனை செய்பவர், அறிவுரை கூறுவார் என்றார் அமைச்சர் முத்துசாமி.

    மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். சென்ற ஆண்டு டாஸ்மாக்கில் சராசரியாக மது குடிப்போர் எண்ணிக்கை 80 லட்சமாக இருந்தது, தற்போது 90 லட்சமாக உயர்ந்துள்ளது என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது. இதுதான் தி.மு.க.வின் ஒப்பற்ற சாதனை.

    தமிழ்நாட்டை முழுவதுமாக குடிகார மாநிலமாக மாற்றும் வரை அமைச்சர் முத்துசாமி ஓயமாட்டார். வரும் பாராளுமன்ற தேர்தலில், இத்தகைய மக்கள் விரோத தி.மு.க. கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும். தமிழக மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கியுள்ள பிரதமர் மோடி கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பட்டுள்ளார்.

    • குடிமகன்களின் ஆடைகள் விலகி இருப்பதால் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.
    • பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற பார் திறக்க வேண்டும்.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், திருப்பாலைவனம், காட்டூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றன. தற்போது இப்பகுதியில் அரசு அனுமதி பெற்ற பார் இல்லாததால் குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள கடைகள், பஸ் நிலையம், வணிக வளாகம், சாலை ஓரங்கள், மரத்தடி பகுதிகள், வயல்வெளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நடமாடும் பகுதியில் மதுகுடிக்கிறார்கள்.

    பின்னர் மதுபாட்டில்களை அங்கேயே உடைத்தும் போடுகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக சாலை ஓரங்களில் பாட்டில்கள் குவியலாக கிடக்கின்றன. மேலும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு சாலை ஓரங்களில் போதையில் படுத்து கிடக்கிறார்கள். அவ்வாறு கிடக்கும் குடிமகன்களின் ஆடைகள் விலகி இருப்பதால் பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.

    இது குறித்து குடிமகன்கள் கூறுகையில், 'டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு குடிப்பதற்கு இடம் கிடைக்காததால் வேறு வழி இல்லாமல் சாலையின் அருகே மது குடிக்கிறோம். பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் அரசு அனுமதி பெற்ற பார் திறக்க வேண்டும்' என்றனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அனைத்து மதுக்கடைகளும் இன்று அடைக்கப்பட்டன.
    • குடிமகன்கள் எந்த பேரமும் பேசாமல் மது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் கூடுதல் பணம் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

    சென்னை:

    காந்தி ஜெயந்தியையொட்டி இன்று நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மூடப்பட்டன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அனைத்து மதுக்கடைகளும் இன்று அடைக்கப்பட்டன. இன்று மதுக்கடை மூடப்படுவதை அறிந்த சிலர் நேற்றே ஏராளமான மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்தனர். அவற்றை இன்று கள்ளச்சந்தைகளில் விற்றனர். இதனால் இன்று பல இடங்களில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை ஜரூராக நடந்தது.

    சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலை வடக்கு போக் சாலை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. காந்தி ஜெயந்தியையொட்டி இந்த மதுக்கடையும் இன்று மூடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து நேற்று இரவு அதிக அளவில் மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் இன்று காலையில் மதுபாட்டில்களை ஸ்கூட்டரில் கொண்டு வந்து தி.நகர் ஜி.என்.செட்டி சாலை-வடக்கு போக் சாலை சந்திப்பு அருகே சாலை ஓரம் வைத்தபடி விற்றுக் கொண்டிருந்தார்.

    இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள குடிமகன்களுக்கு பரவியது. மதுக்கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்ததால் விடுமுறை தினத்தை எப்படி கொண்டாடுவது என்று தவித்த குடிமகன்கள் உடனடியாக கள்ளச்சந்தையில் மது விற்கப்படும் இடத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஸ்கூட்டரில் வைத்து மது விற்றவரிடம் இருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

    வழக்கமாக ரூ.140-க்கு விற்கப்படும் மதுபாட்டில்கள் அந்த நபர் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.110 விலை வைத்து ரூ.250-க்கு விற்றுக் கொண்டிருந்தார். குடிமகன்கள் எந்த பேரமும் பேசாமல் மது கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் கூடுதல் பணம் கொடுத்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் பட்டப்பகலில் சாலை ஓரத்தில் மது விற்பனை மிகவும் ஜரூராக நடந்தது.

    அதேபோல் சென்னையின் சில இடங்களிலும் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன.

    • பேச்சுவார்த்தை முடிவில் மதுபானகடை அங்கு செயல்படாது எனவும் தற்காலிகமாக மூடப்படும் என தெரிவித்தனர்.
    • மதுபான கடைக்கு மாற்று இடம் பார்த்துக் கொண்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வந்தது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் மதுபான கடையில் தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் மது வாங்க வருவது வழக்கம். இந்த நிலையில் அங்கு மது வாங்க வரும் சிலர் அங்கேயே குடித்து விட்டு அருகிலுள்ள கடைகளுக்கு சென்று படுத்து உறங்குவதும்,ரோட்டிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதும் என அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி வருவதாக கூறி, அந்த மதுபானகடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ந் தேதி டாஸ்மாக் மதுபான கடையை மூடக்கோரி பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பாய், தலையணையுடன் பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தை முடிவில் மதுபானகடை அங்கு செயல்படாது எனவும் தற்காலிகமாக மூடப்படும் என தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மதுபான கடையை மீண்டும் திறப்பதற்காக பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது டாஸ்மாக் திருப்பூர் மண்டல மேலாளர் சுப்பிரமணியம், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், துணை தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். மதுபான கடைக்கு மாற்று இடம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அதுவரை கடை செயல்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை கடுமையாக எதிர்த்த பொதுமக்கள் கடை அங்கு மீண்டும் செயல்படக் கூடாது என வலியுறுத்தினர். ஏற்கனவே தாசில்தார் இங்கு கடை செயல்படக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார் என பொதுமக்கள் கூறினர். மேற்கண்டவாறு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட விடமாட்டோம் என பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர்.

    • ஓட்டலில் இருந்து புறப்பட்ட இளங்கோவன், ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.200 முன்பணமாக வாங்கி சென்றார்.
    • ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இளங்கோவனை பரிசோதித்து, அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

    விழுப்புரம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிைய சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 45). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் தங்கி, தனியார் ஓட்டலில் பணி செய்து வந்தார். நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு ஓட்டலில் இருந்து புறப்பட்ட இளங்கோவன், ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.200 முன்பணமாக வாங்கி சென்றார். அங்கிருந்து டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்ற அவர், மதுபானத்தை வாங்கி குடித்துள்ளார். பின்னர், வீட்டிற்கு சென்ற அவர் உறங்கிவிட்டார். இன்று காலை நெடுநேரமாகியும் அவர், வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, இளங்கோவன் மூச்சு பேச்சின்றி கிடந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இளங்கோவனை பரிசோதித்து, அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து இளங்கோவன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக, புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்மமான முறையில் இறந்து போன இளங்கோ வன், மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது போலி மதுபானம் குடித்ததால் இறந்து போனாரா? என்பது குறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் பெண்களுக்கான திட்டத்தில் முதலமைச்சர் மிகுந்த அக்கறை எடுத்து ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கின்றார்.
    • டாஸ்மாக் பிரச்சனையை பொறுத்தவரை நிறைய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் 111 கர்ப்பிணி பெண்களுக்கும், மாவட்டம் முழுவதும் 3000 பேருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெவ்வேறு நாட்களில் நடத்தப்படுகிறது.

    இது ஒரு நிகழ்ச்சிக்காக மட்டுமல்ல கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த நிகழ்ச்சி கர்ப்பிணி பெண்கள் பெரும்பாலும் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டு இருப்பவர்கள். அவர்களுக்கு ஓய்வு வீடுகளில் கிடைக்காத சூழல் உள்ளது. ஆனால் கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என பொதுவாக கருத்து சொல்வதுண்டு.

    எனினும் மருத்துவரிடம் ஆலோசித்து செயல்பட வேண்டும், பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் போன்ற கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன இந்த துறையின் சார்பாக அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி பயன்படுகிறது.

    தமிழகத்தில் பெண்களுக்கான திட்டத்தில் முதலமைச்சர் மிகுந்த அக்கறை எடுத்து ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கின்றார். பேருந்து பயணம், உரிமைத்தொகை அரசு, பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு உதவித்தொகை, காலை உணவு திட்டம் குடும்ப பெண்களுக்கு சுமையை குறைத்து மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. இவ்வாறாக ஒவ்வொன்றாக பெண்களின் நலன் கருதி முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    டெங்கு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம், மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் டெங்கு பாதிப்பு குறித்து தகவல் கிடைத்தால் அந்த பகுதிகளில் உரிய நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளனர்.

    டாஸ்மாக் பிரச்சனையை பொறுத்தவரை நிறைய ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற மாநில ங்களில் என்ன நடக்கிறது என்பதை கண்டறிய தனிக்குழு அமைத்து இதில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன அதை தீர்ப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர் முழுமையாக அதைப்பற்றி கருத்துக்கள் சொல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பெரும்பாலான கடைகளில் ‘குவார்ட்டர்' பாட்டிலுக்கு 10 ரூபாயும், ‘ஆப்' பாட்டிலுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக மதுப்பிரியர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள 'டாஸ்மாக்' மதுபானக்கடைகளில் அதிகபட்ச சில்லரை விற்பனையை விட ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுவதும், இதற்கு 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பில் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் ஊழியர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் (டிஸ்மிஸ்) என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக 'டாஸ்மாக்' மேலாண்மை இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தவறிய குற்றத்துக்காக கடை மேற்பார்வையாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்தாலும் பெரும்பாலான கடைகளில் 'குவார்ட்டர்' பாட்டிலுக்கு 10 ரூபாயும், 'ஆப்' பாட்டிலுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக மதுப்பிரியர்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த அறிவிப்பு வெறும் சம்பிரதாயம் போன்று இல்லாமல் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பது மதுப்பிரியர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

    ×