என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரத்தில் டாஸ்மாக் மதுவை திருட்டுத்தனமாக விற்றவர்கள் கைது
- கூடுதல் விலைக்கு மது விற்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி பகுதியில், சிலர் மொத்தமாக டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாமல்லபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வடக்கு மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் (வயது 53), இ.சி.ஆர் மணிகண்டன் (24) ஆகிய இருவரும் கூடுதல் விலைக்கு மது விற்றபோது போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






