என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாஜக"
முன்னாள் பிரதமர் தேவகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அங்கு சந்திரசேகர ராவுக்கு மதிய உணவு பரிமாற்றப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முடிந்து சந்திரசேகர ராவ் விமானம் மூலம் ஐதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார். அவர் புறப்படும் முன்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்தேன். நாட்டின் தற்போதையை நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 2, 3 மாதங்களுக்கு பிறகு நீங்கள் பரபரப்பான செய்தியை பார்க்க போகிறீர்கள்.
கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு பெங்களூரு வந்திருந்தேன். குமாரசாமி முதல்-மந்திரி ஆவார் என்று கூறினேன். அது உண்மையானது. அரசியலில் தேசிய அளவில் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. நாட்டில் போதுமான வளங்கள் உள்ளன. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் குடிநீர், மின்சார பிரச்சினை ஏற்படுகிறது. இந்தியாவுடன் சுதந்திரம் அடைந்த நாடுகள் நம்மை விட முன்னேறி இருக்கின்றன. இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாடு வளர்ச்சியில் ஒளிரும். இந்த நோக்கத்தில் நாட்டை கட்டமைப்பதில் ஒவ்வொரு கட்சியும் கைகோர்க்க வேண்டும். ஒளிமயமான இந்தியாவை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
நாடு மோசமான நிலையை நோக்கி செல்வதால், நாம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். விவசாயிகள், ஆதிதிராவிடர்கள் என யாரும் மகிழ்ச்சியாக இல்லை. பிரதமர் மோடி பேசுவதை தவிர வேறு எதுவும் செய்வதில்லை. வெறும் வாக்குறுதிகள் மட்டும் கொடுக்கிறார்கள். தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்றன. நாட்டின் வளர்ச்சி சரிவை சந்தித்து வருகிறது. பணவீக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது. பண மதிப்பு முழுமையாக சரிந்து வருகிறது. வரலாற்றில் பண மதிப்பு இவ்வாறு வீழ்ந்தது எப்போதும் நடக்கவில்லை.
இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.
சந்திரசேகரராவ், தேவேகவுடாவுடன் சந்தித்து இருப்பதன் மூலம் தேசிய அளவில் மெகா கூட்டணி அமையும் என்று கூறப்படுகிறது. இதை அவரும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
குமாரசாமி கூறும்போது, 'அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சந்திரசேகர ராவ் தேவேகவுடாவுடன் விவாதித்தார். 2, 3 மாதங்களில் நல்ல செய்தி கிடைக்கும். மாநில கட்சிகள் வளர்ந்து வருகின்றன. பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து நாட்டின் நலனுக்காக ஓரணியில் திரள வேண்டும். காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது.
சந்திரசேகர ராவ் மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல பலனை வழங்கும்' என்றார். இந்த சந்திப்பு குறித்து தேவேகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் என்னை நேரில் சந்தித்து பேசினார். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் கருத்துகளை பரிமாறி கொண்டோம். இந்த சந்திப்பு உண்மையாகவும், மனப்பூர்வமாகவும் அமைந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மெரினா கடற்கரையையொட்டியுள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு வந்தார் பிரதமர் மோடி. பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு ஸ்டேடியத்திற்கு வந்தார்.
நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர், பல்வேறு கட்டமைப்பு செயல் திட்டங்களை காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்துக்கு ரூ.598 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 3-வது ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேபோல் மதுரை-தேனி இடையே ரூ.506 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதையையும் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.849 கோடி செலவில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பெங்களூரு-திருவள்ளூர் பிரிவில் 271 கிலோ மீட்டர் தூரத்துக்கு எரிவாயு குழாய்கள் ரூ.911 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்தையும் நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.
கலங்கரை விளக்கம் செயல் திட்டத்தின் கீழ் ரூ.116 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளை பிரதமர் மோடி பயனாளிகளுக்கு ஒப்படைத்தார்.
இதுதவிர, ரூ. 5,852 கோடி செலவில் துறைமுகம்-மதுரவாயல் இடையே அமைக்கப்படும் இரண்டடுக்கு மேம்பாலம், ரூ.14.872 கோடி செலவில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விரைவு வழி சாலை ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நெரலூருவில் இருந்து தர்மபுரி இடையே ரூ.3,871 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைத்தல், சென்னையில் ரூ.1,428 கோடியில் பல வகை வழிமுறைகளுடன் கூடிய சரக்கு பூங்கா அமைத்தல் ஆகிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
சென்னை எழும்பூர், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, காட்பாடி ஆகிய 5 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரை 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.724 கோடி செலவில் தனி பாதைகள் அமைக்கும் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
நிறைவுற்ற திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் என மொத்தம் ரூ. 31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான 11 கட்டமைப்பு செயல் திட்டங்களை பிரதமர் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
பின்னர் விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு இன்று மிக முக்கியமான நாள். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
புதிய கல்விக் கொள்கை வலிமையான இந்தியாவை உருவாக்கும். புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்வியை
உக்குவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. சென்னை வந்தார் பிரதமர் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு
இதற்காக ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தார். பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளம் சென்றார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கு செல்கிறார். அங்கு பல்வேறு திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இதையும் படியுங்கள்.. உலகின் மூன்றாவது பெரிய நுகர்வோர் சந்தை இந்தியாவில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்
சென்னை:
பிரதமர் மோடி இன்று சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மெரினா கடற்கரையையொட்டியுள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு ஸ்டேடியத்தை சென்றடைகிறார்.
ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் இருந்து குண்டு துளைக்காத காரில் புறப்பட்டு செல்லும் மோடி, நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, பெரியார் சிலை சந்திப்பு, பல்லவன் சாலை, சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரில் உள்ள பாலத்தின் வழியாக சென்று பூந்தமல்லி நெடுஞ்சாலையை அடைகிறார்.
சென்ட்ரல் எதிரில் இடதுபுறமாக திரும்பி பெரியமேடு வழியாக நேரு உள் விளையாட்டு அரங்கை மோடி சென்றடைகிறார். இதையொட்டி வழிநெடுக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் செல்லும் இந்த வழித்தடத்தில் 10-க்கும் மேற்பட்ட துணை கமிஷனர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மோடி செல்லும் சாலைகளையொட்டியுள்ள பெரிய கட்டிடங்கள், மைலேடீஸ் பூங்கா பூட்டப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நின்றபடியும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்டேடியம் அருகில் உள்ள அலுவலகங்களும் பூட்டப்பட்டுள்ளன. நேரு ஸ்டேடியத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்துக்குள் நுழையும் வாயில் கதவு மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மாநகராட்சி சிக்னல் சந்திபில் இருந்து நேரு ஸ்டேடியம் வரை சாலை நடுவே யாரும் நுழைந்து விட முடியாதபடி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேரு ஸ்டேடியம் வரையில் வழிநெடுக மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோடியின் பிரமாண்ட கட்-அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கும் விழாவையொட்டி பெரியமேடு பகுதியே விழாகோலம் கண்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். நேரு உள் விளையாட்டரங்கில் மாலை 5.45 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு ரூ. 31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் நாட்டுக்கு அர்ப்பணித்தும் உரையாற்றுகிறார்.
விழாவில் முடிவுற்ற 5 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அந்த 5 திட்டங்கள் விபரம் வருமாறு:-
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்துக்கு ரூ.598 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 3-வது ரெயில் பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.849 கோடி செலவில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
மேலும் பெங்களூரு-திருவள்ளூர் பிரிவிலும் 271 கிலோ மீட்டர் தூரத்துக்கு எரிவாயு குழாய்கள் ரூ.911 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்தையும் நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார்.
மேலும் இதே விழாவில் 6 பிரமாண்டமான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அந்த 6 திட்டங்கள் விபரம் வருமாறு:-
ரூ. 5,852 கோடி செலவில் துறைமுகம்-மதுரவாயல் இடையே அமைக்கப்படும் இரண்டடுக்கு மேம்பாலம்.
ரூ.14.872 கோடி செலவில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விரைவு வழி சாலை.
பெங்களூருவில் இருந்து தர்மபுரி இடையே ரூ.3,471 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைத்தல்.
சென்னையில் ரூ.1,428 கோடியில் பல வகை வழிமுறைகளுடன் கூடிய சரக்கு பூங்கா அமைத்தல் ஆகிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை எழும்பூர், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, காட்பாடி ஆகிய 5 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின்கட்காரி, ரெயில்வே துறை மந்திரி அஸ்வினிவைஷ்ணவ், பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப்சிங்பூரி, மத்திய மந்திரி எல்.முருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
பிரதமர் நநேர்திர மோடி அவர்கள் 31,600 கோடி மதிப்பில் மத்திய அரசின் நிறைவடைந்த முக்கியத் திட்டங்களை திறந்து வைப்பதற்காக நாளை சென்னை வருகிறார்.
நாளை மாலை 5.10 மணிக்கு வந்து நேரு ஸ்டேடியத்தில் ஒரே இடத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று இரவு 8 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.
3 மணிநேர பயணத்தில் மிக முக்கியமாக தமிழகத்தில் சென்னை எழும்பூர் உள்பட 5 ரெயில்வே நிலையங்களில் மேம்படுத்துதல் பணி நடைபெறுகிறது. பிறகு, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் லாஜிஸ்டிக் நோடல் பார்க்கை சென்னை துறைமுகம் பகுதியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 1162 பேருக்கு லைட் அவுஸ் மாடல் வீடுகள் வழங்கப்படுகிறது.
மிக முக்கியமான விஷயங்கள் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், பிரதமர் டெல்லி செல்வதற்கு முன்பாக பாஜக தலைவர்கள் கண்டிப்பாக சந்திப்போம், சிறிது நேரம் உரையாடுவோம். தமிழகத்தின் அரசியல் நிலை, கட்சியின் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பேசுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. சென்னைக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க 50 ஆயிரம் பேர் திரள்கிறார்கள்
அம்பத்தூர்:
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி சென்னை வருகிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒவ்வொரு மண்டலத்திலும் தனித்தனியாக நடை பெற்றது. கூட்டத்தில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை அழைத்து சென்று மான் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாதஸ்வரம் என கிராமிய கலைகளுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாதவரம் பொறுப்பாளர் சுஜாதா ஜீவன், அம்பத்தூர் பொறுப்பாளர் தியாகராஜன், மதுரவாயல் பொறுப்பாளர் சுப்பிரமணிய ரெட்டியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்