என் மலர்
நீங்கள் தேடியது "Balachandran"
- கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
- வடகிழக்கு பருவமழை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது என்றார்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.
மழைப்பொழிவை பொருத்தவரை இதே நிலை நீடிக்கும். விட்டு விட்டு கனமழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
நாளை சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
- இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
- இதன் காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகர்ந்து செல்லும்போது சில இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாக வாய்ப்பு இல்லை. வடகிழக்கு பருவமழை இயல்பை விட 14% அதிகம் பெய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காலம் தமிழகத்தில் முடியும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவாக 57 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட 11 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.
இது தவிர 5 மாவட்டங்களில் 30 முதல் 40 சதவீதம் வரை குறைவாக உள்ளது. 4 மாவட்டங்களில் 20 முதல் 30 சதவீதம் வரை குறைவாக மழை பெய்துள்ளது.
15 மாவட்டங்களில் 1 முதல் 19 சதவீதம் வரை குறைவாக பெய்துள்ளது. பொதுவாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை மிகவும் குறைந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை இயல்பைவிட 55 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வழக்கமாக 79 செ.மீ. மழை பதிவாகும் ஆனால் இந்த ஆண்டு 35 செ.மீ. மழையே பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவ மழை காலத்தில் 4 புயல்கள் உருவாகின. அவற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்ததால் மழை இல்லை.
கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது. மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்றுவிட்டதால் மழை இல்லை.
பொதுவாக ‘எல்நினோ’ உருவானால் தான் மழை பெய்யும். அது உருவாகாமல் தள்ளி போய்விட்டதும் வானிலை நிகழ்வுகள் சாதகம் இல்லாததும், வடகிழக்கு பருவமழை குறைவுக்கு காரணமாகும்.
இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது தவறாகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார். #NorthEastMonsoon #Rain