என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடகிழக்கு பருவமழை குறைய காரணம் என்ன? - வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி
Byமாலை மலர்31 Dec 2018 9:28 AM GMT (Updated: 31 Dec 2018 9:51 AM GMT)
கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது. மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்றுவிட்டதால் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறினார். #NorthEastMonsoon #Rain
சென்னை:
வடகிழக்கு பருவமழை காலம் தமிழகத்தில் முடியும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவாக 57 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட 11 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.
இது தவிர 5 மாவட்டங்களில் 30 முதல் 40 சதவீதம் வரை குறைவாக உள்ளது. 4 மாவட்டங்களில் 20 முதல் 30 சதவீதம் வரை குறைவாக மழை பெய்துள்ளது.
15 மாவட்டங்களில் 1 முதல் 19 சதவீதம் வரை குறைவாக பெய்துள்ளது. பொதுவாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை மிகவும் குறைந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை இயல்பைவிட 55 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வழக்கமாக 79 செ.மீ. மழை பதிவாகும் ஆனால் இந்த ஆண்டு 35 செ.மீ. மழையே பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவ மழை காலத்தில் 4 புயல்கள் உருவாகின. அவற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்ததால் மழை இல்லை.
கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது. மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்றுவிட்டதால் மழை இல்லை.
பொதுவாக ‘எல்நினோ’ உருவானால் தான் மழை பெய்யும். அது உருவாகாமல் தள்ளி போய்விட்டதும் வானிலை நிகழ்வுகள் சாதகம் இல்லாததும், வடகிழக்கு பருவமழை குறைவுக்கு காரணமாகும்.
இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது தவறாகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார். #NorthEastMonsoon #Rain
வடகிழக்கு பருவமழை காலம் தமிழகத்தில் முடியும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவாக 57 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட 11 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.
இது தவிர 5 மாவட்டங்களில் 30 முதல் 40 சதவீதம் வரை குறைவாக உள்ளது. 4 மாவட்டங்களில் 20 முதல் 30 சதவீதம் வரை குறைவாக மழை பெய்துள்ளது.
15 மாவட்டங்களில் 1 முதல் 19 சதவீதம் வரை குறைவாக பெய்துள்ளது. பொதுவாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை மிகவும் குறைந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை இயல்பைவிட 55 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. வழக்கமாக 79 செ.மீ. மழை பதிவாகும் ஆனால் இந்த ஆண்டு 35 செ.மீ. மழையே பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவ மழை காலத்தில் 4 புயல்கள் உருவாகின. அவற்றில் ஈரப்பதம் குறைவாக இருந்ததால் மழை இல்லை.
கஜா புயல் மட்டுமே மழைக்கு சாதகமாக இருந்தது. மற்ற 3 புயல்கள் திசைமாறி நகர்ந்து சென்றுவிட்டதால் மழை இல்லை.
பொதுவாக ‘எல்நினோ’ உருவானால் தான் மழை பெய்யும். அது உருவாகாமல் தள்ளி போய்விட்டதும் வானிலை நிகழ்வுகள் சாதகம் இல்லாததும், வடகிழக்கு பருவமழை குறைவுக்கு காரணமாகும்.
இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது தவறாகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார். #NorthEastMonsoon #Rain
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X