என் மலர்
நீங்கள் தேடியது "tag 105274"
தேவகவுடாவை, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். பின்னர் அவர் பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணி அமைப்பது குறித்த சூசக தகவலை வெளியிட்டார்.
பெங்களூரு
முன்னாள் பிரதமர் தேவகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அங்கு சந்திரசேகர ராவுக்கு மதிய உணவு பரிமாற்றப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முடிந்து சந்திரசேகர ராவ் விமானம் மூலம் ஐதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார். அவர் புறப்படும் முன்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்தேன். நாட்டின் தற்போதையை நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 2, 3 மாதங்களுக்கு பிறகு நீங்கள் பரபரப்பான செய்தியை பார்க்க போகிறீர்கள்.
கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு பெங்களூரு வந்திருந்தேன். குமாரசாமி முதல்-மந்திரி ஆவார் என்று கூறினேன். அது உண்மையானது. அரசியலில் தேசிய அளவில் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. நாட்டில் போதுமான வளங்கள் உள்ளன. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் குடிநீர், மின்சார பிரச்சினை ஏற்படுகிறது. இந்தியாவுடன் சுதந்திரம் அடைந்த நாடுகள் நம்மை விட முன்னேறி இருக்கின்றன. இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாடு வளர்ச்சியில் ஒளிரும். இந்த நோக்கத்தில் நாட்டை கட்டமைப்பதில் ஒவ்வொரு கட்சியும் கைகோர்க்க வேண்டும். ஒளிமயமான இந்தியாவை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
நாடு மோசமான நிலையை நோக்கி செல்வதால், நாம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். விவசாயிகள், ஆதிதிராவிடர்கள் என யாரும் மகிழ்ச்சியாக இல்லை. பிரதமர் மோடி பேசுவதை தவிர வேறு எதுவும் செய்வதில்லை. வெறும் வாக்குறுதிகள் மட்டும் கொடுக்கிறார்கள். தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்றன. நாட்டின் வளர்ச்சி சரிவை சந்தித்து வருகிறது. பணவீக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது. பண மதிப்பு முழுமையாக சரிந்து வருகிறது. வரலாற்றில் பண மதிப்பு இவ்வாறு வீழ்ந்தது எப்போதும் நடக்கவில்லை.
இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.
சந்திரசேகரராவ், தேவேகவுடாவுடன் சந்தித்து இருப்பதன் மூலம் தேசிய அளவில் மெகா கூட்டணி அமையும் என்று கூறப்படுகிறது. இதை அவரும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
குமாரசாமி கூறும்போது, 'அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சந்திரசேகர ராவ் தேவேகவுடாவுடன் விவாதித்தார். 2, 3 மாதங்களில் நல்ல செய்தி கிடைக்கும். மாநில கட்சிகள் வளர்ந்து வருகின்றன. பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து நாட்டின் நலனுக்காக ஓரணியில் திரள வேண்டும். காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது.
சந்திரசேகர ராவ் மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல பலனை வழங்கும்' என்றார். இந்த சந்திப்பு குறித்து தேவேகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் என்னை நேரில் சந்தித்து பேசினார். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் கருத்துகளை பரிமாறி கொண்டோம். இந்த சந்திப்பு உண்மையாகவும், மனப்பூர்வமாகவும் அமைந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவை பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அவரது மகன் நிகில் குமாரசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அங்கு சந்திரசேகர ராவுக்கு மதிய உணவு பரிமாற்றப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முடிந்து சந்திரசேகர ராவ் விமானம் மூலம் ஐதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார். அவர் புறப்படும் முன்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்தேன். நாட்டின் தற்போதையை நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 2, 3 மாதங்களுக்கு பிறகு நீங்கள் பரபரப்பான செய்தியை பார்க்க போகிறீர்கள்.
கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு பெங்களூரு வந்திருந்தேன். குமாரசாமி முதல்-மந்திரி ஆவார் என்று கூறினேன். அது உண்மையானது. அரசியலில் தேசிய அளவில் மாற்றம் ஏற்படும். இந்த மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. நாட்டில் போதுமான வளங்கள் உள்ளன. ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் குடிநீர், மின்சார பிரச்சினை ஏற்படுகிறது. இந்தியாவுடன் சுதந்திரம் அடைந்த நாடுகள் நம்மை விட முன்னேறி இருக்கின்றன. இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாடு வளர்ச்சியில் ஒளிரும். இந்த நோக்கத்தில் நாட்டை கட்டமைப்பதில் ஒவ்வொரு கட்சியும் கைகோர்க்க வேண்டும். ஒளிமயமான இந்தியாவை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
நாடு மோசமான நிலையை நோக்கி செல்வதால், நாம் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். விவசாயிகள், ஆதிதிராவிடர்கள் என யாரும் மகிழ்ச்சியாக இல்லை. பிரதமர் மோடி பேசுவதை தவிர வேறு எதுவும் செய்வதில்லை. வெறும் வாக்குறுதிகள் மட்டும் கொடுக்கிறார்கள். தொழில் நிறுவனங்கள் மூடப்படுகின்றன. நாட்டின் வளர்ச்சி சரிவை சந்தித்து வருகிறது. பணவீக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது. பண மதிப்பு முழுமையாக சரிந்து வருகிறது. வரலாற்றில் பண மதிப்பு இவ்வாறு வீழ்ந்தது எப்போதும் நடக்கவில்லை.
இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.
சந்திரசேகரராவ், தேவேகவுடாவுடன் சந்தித்து இருப்பதன் மூலம் தேசிய அளவில் மெகா கூட்டணி அமையும் என்று கூறப்படுகிறது. இதை அவரும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
குமாரசாமி கூறும்போது, 'அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சந்திரசேகர ராவ் தேவேகவுடாவுடன் விவாதித்தார். 2, 3 மாதங்களில் நல்ல செய்தி கிடைக்கும். மாநில கட்சிகள் வளர்ந்து வருகின்றன. பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து மாநில கட்சிகளும் தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து நாட்டின் நலனுக்காக ஓரணியில் திரள வேண்டும். காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது.
சந்திரசேகர ராவ் மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல பலனை வழங்கும்' என்றார். இந்த சந்திப்பு குறித்து தேவேகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் என்னை நேரில் சந்தித்து பேசினார். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் கருத்துகளை பரிமாறி கொண்டோம். இந்த சந்திப்பு உண்மையாகவும், மனப்பூர்வமாகவும் அமைந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.
திருப்பதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடகா முதல்வர் குமாரசாமி ஆகியோர் இன்று காலை குடும்பத்தினருடன் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தனர்.
திருமலை:
முன்னாள் பிரதமர் தேவகவுடா தனது 86-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாலை தனது மகன் கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய திருப்பதி வந்தார்.
அவருக்கு தேவஸ்தான அதிகாரி அசோக் சிங்கால் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து பத்மாவதி தாயார் தங்கும் விடுதியில் தங்கினர். இன்று காலை 7 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தனது மனைவி மற்றும் மகனும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் தேவகவுடா தனது 86-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாலை தனது மகன் கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய திருப்பதி வந்தார்.
அவருக்கு தேவஸ்தான அதிகாரி அசோக் சிங்கால் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து பத்மாவதி தாயார் தங்கும் விடுதியில் தங்கினர். இன்று காலை 7 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தனது மனைவி மற்றும் மகனும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலில் ஜே.டி.எஸ்.- காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு உள்ளது. தங்களுக்கு 12 தொகுதிகள் கேட்டு தேவகவுடா பிடிவாதம் பிடிப்பதால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது. #devegowda #parliamentelection #rahulgandhi
பெங்களூரு:
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும் பான்மை கிடைக்கவில்லை. இதனால் பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்கும் நோக்கத்தில் ஜே.டி.எஸ். கட்சிக்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது.
முதல் மந்திரியாக குமாரசாமியும், துணை முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வரரும் இருந்து வருகிறார்கள். 2 கட்சிகளையும் சேர்ந்தவர்கள் மந்திரிகளாக உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலிலும் ஜே.டி.எஸ்.- காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு உள்ளனர். தங்களுக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரசிடம் ஜே.டி.எஸ். கட்சி தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா வலியுறுத்தி வருகிறார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட முடிவு செய்து உள்ளோம். கர்நாடகாவில் மொத்தம் 28 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இதில் 12 தொகுதிகளை ஜே.டி.எஸ். கட்சிக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று அந்த கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தி உள்ளேன்.
விரைவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து இது குறித்து பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜே.டி.எஸ். கட்சிக்கு 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் காங்கிரஸ் தலைமையில் வலியுறுத்தி உள்ளனர்.

12 தொகுதிகளை ஜே.டி.எஸ். கேட்டு உள்ளதால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்து உள்ளது. ராகுல்காந்தியை, தேவகவுடா சந்திக்கும் போதுதான் ஜே.டி.எஸ். கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தெரியவரும். #devegowda #parliamentelection #rahulgandhi
தேவகவுடா முறைகேடு குறித்து அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களுடன் வெளியிடுவேன். குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் என்று கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா கூறி உள்ளார். #Yeddyurappa #BJP
பெங்களூரு:
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் எல்லை மீறி பேசுவதாக குமாரசாமி சொல்கிறார். எனது வரையறை என்ன என்பது எனக்கு தெரியும். எப்படி பேச வேண்டும் என்றும் தெரியும். குமாரசாமி தான் அத்துமீறி பேசுகிறார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினர் மைசூருவில் எத்தனை வீட்டுமனைகளை வாங்கி இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். தேவகவுடா முறைகேடு குறித்து அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களுடன் வெளியிடுவேன். ஊழல்வாதியான குமாரசாமிக்கு என்னை விமர்சிக்க உரிமை கிடையாது. இந்த கூட்டணி ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும்.
மந்திரி டி.கே.சிவக்குமார் பற்றி நான் எதுவும் பேசவில்லை. ஆனாலும் அவர் என்னை விமர்சித்து இருக்கிறார். தனது மனதில் உள்ள வேதனையில் ஏதேதோ பேசி இருக்கிறார்.
அமலாக்கத்துறையினர் டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபிக்கும் பலம் அவருக்கு உள்ளது. இதை அவர் நிரூபிக்க வேண்டும். இதை விட்டுவிட்டு என்னை பற்றி தவறாக பேசி இருக்கிறார். இது சரியல்ல.
உங்களுக்கு (குமாரசாமி) கர்நாடகத்தில் ஆட்சி அதிகாரம் இருக்கலாம். ஆனால் மத்தியில் எங்கள் கட்சியின் ஆட்சி நடக்கிறது. நீங்கள் என்ன செய்தாலும், அதற்கு பதில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். பணியவும் மாட்டேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa #BJP
கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் எல்லை மீறி பேசுவதாக குமாரசாமி சொல்கிறார். எனது வரையறை என்ன என்பது எனக்கு தெரியும். எப்படி பேச வேண்டும் என்றும் தெரியும். குமாரசாமி தான் அத்துமீறி பேசுகிறார்.
சிவராம் காரந்த் லே-அவுட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதை விடுத்து மிரட்டும் போக்கில் ஈடுபட்டால் அது எடுபடாது.

முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தினர் மைசூருவில் எத்தனை வீட்டுமனைகளை வாங்கி இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். தேவகவுடா முறைகேடு குறித்து அனைத்து ஆவணங்களையும் ஆதாரங்களுடன் வெளியிடுவேன். ஊழல்வாதியான குமாரசாமிக்கு என்னை விமர்சிக்க உரிமை கிடையாது. இந்த கூட்டணி ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும்.
மந்திரி டி.கே.சிவக்குமார் பற்றி நான் எதுவும் பேசவில்லை. ஆனாலும் அவர் என்னை விமர்சித்து இருக்கிறார். தனது மனதில் உள்ள வேதனையில் ஏதேதோ பேசி இருக்கிறார்.
அமலாக்கத்துறையினர் டி.கே.சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபிக்கும் பலம் அவருக்கு உள்ளது. இதை அவர் நிரூபிக்க வேண்டும். இதை விட்டுவிட்டு என்னை பற்றி தவறாக பேசி இருக்கிறார். இது சரியல்ல.
உங்களுக்கு (குமாரசாமி) கர்நாடகத்தில் ஆட்சி அதிகாரம் இருக்கலாம். ஆனால் மத்தியில் எங்கள் கட்சியின் ஆட்சி நடக்கிறது. நீங்கள் என்ன செய்தாலும், அதற்கு பதில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். குமாரசாமியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். பணியவும் மாட்டேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Yeddyurappa #BJP
மதச்சார்பற்ற ஜனதா தள முக்கிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #modiwishes #devegowda
புதுடெல்லி:
கர்நாடகாவில் கடந்த 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 104 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும் காங்கிரஸ் கட்சியும், மதச்சாற்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஆனால், ஆளுனர் பா.ஜ.க.வையே ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவரான தேவகவுடா இன்று தனது 85-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மோடி, ‘நமது முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு வாழ்த்துக்கள், அவரது உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார். #modiwishes #devegowda
கர்நாடகாவில் கடந்த 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 104 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும் காங்கிரஸ் கட்சியும், மதச்சாற்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஆனால், ஆளுனர் பா.ஜ.க.வையே ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
ஆளுனரின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதற்காக பா.ஜ.க. கடும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

முன்னாள் பிரதமரும், மத சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா இன்று காலை குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். #DeveGowda #HDDeveGowda #JDS #Tirupatitemple
திருமலை:
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 78 இடங்களையும் மத சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களையும் கைப்பற்றியது. பா.ஜ.க. 104 இடங்களை பிடித்தது.
காங்கிரஸ் , ஜே.டி.எஸ். கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுத்து ஆட்சி அமைக்க கவர்னரிடம் மனு கொடுத்தனர்.
ஆனால் கவர்னர் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்தார். நேற்று காலை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.
முன்னாள் முதல்வர் சித்தராமையா, ஜனதாதள தலைவர் தேவகவுடா, அவரது மகன் குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று இரவு ஏழுமலையானை தரிசிக்க தேவகவுடா திருப்பதிக்கு வந்தார். தேவஸ்தானம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்றிரவு சாமி தரிசனம் செய்த தேவகவுடா பின்னர் பத்மாவதி தாயார் கெஸ்ட் அவுசில் தங்கினார்.
இன்று காலை 4 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு சென்று நிஜபாத தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதம், சாமி படம் வழங்கப்பட்டது.
பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் தனது 86-வது பிறந்த நாளையொட்டி சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறினார். மற்ற அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். #DeveGowda #HDDeveGowda #JDS #Tirupatitemple
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 78 இடங்களையும் மத சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களையும் கைப்பற்றியது. பா.ஜ.க. 104 இடங்களை பிடித்தது.
காங்கிரஸ் , ஜே.டி.எஸ். கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுத்து ஆட்சி அமைக்க கவர்னரிடம் மனு கொடுத்தனர்.
ஆனால் கவர்னர் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்தார். நேற்று காலை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.
முன்னாள் முதல்வர் சித்தராமையா, ஜனதாதள தலைவர் தேவகவுடா, அவரது மகன் குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏக்களை இழுக்க குதிரை பேரம் நடக்கலாம் என்பதால் காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு சாமி தரிசனம் செய்த தேவகவுடா பின்னர் பத்மாவதி தாயார் கெஸ்ட் அவுசில் தங்கினார்.
இன்று காலை 4 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு சென்று நிஜபாத தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதம், சாமி படம் வழங்கப்பட்டது.
பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் தனது 86-வது பிறந்த நாளையொட்டி சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறினார். மற்ற அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். #DeveGowda #HDDeveGowda #JDS #Tirupatitemple






