search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் தேவகவுடா சாமி தரிசனம் செய்த காட்சி.
    X
    திருப்பதியில் தேவகவுடா சாமி தரிசனம் செய்த காட்சி.

    கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழலில் தேவகவுடா திருப்பதியில் சாமி தரிசனம்

    முன்னாள் பிரதமரும், மத சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா இன்று காலை குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். #DeveGowda #HDDeveGowda #JDS #Tirupatitemple
    திருமலை:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 78 இடங்களையும் மத சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களையும் கைப்பற்றியது. பா.ஜ.க. 104 இடங்களை பிடித்தது.

    காங்கிரஸ் , ஜே.டி.எஸ். கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுத்து ஆட்சி அமைக்க கவர்னரிடம் மனு கொடுத்தனர்.

    ஆனால் கவர்னர் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்தார். நேற்று காலை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.

    முன்னாள் முதல்வர் சித்தராமையா, ஜனதாதள தலைவர் தேவகவுடா, அவரது மகன் குமாரசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எம்.எல்.ஏக்களை இழுக்க குதிரை பேரம் நடக்கலாம் என்பதால் காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


    இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று இரவு ஏழுமலையானை தரிசிக்க தேவகவுடா திருப்பதிக்கு வந்தார். தேவஸ்தானம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நேற்றிரவு சாமி தரிசனம் செய்த தேவகவுடா பின்னர் பத்மாவதி தாயார் கெஸ்ட் அவுசில் தங்கினார்.

    இன்று காலை 4 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு சென்று நிஜபாத தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதம், சாமி படம் வழங்கப்பட்டது.

    பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் தனது 86-வது பிறந்த நாளையொட்டி சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறினார். மற்ற அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.  #DeveGowda #HDDeveGowda #JDS #Tirupatitemple
    Next Story
    ×