என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மு.க.ஸ்டாலின்"
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணை அடர்ந்த பெரியாறு வன புலிகள் சரணலாயத்தின் நடுவில் அமைந்துள்ளது. இங்கு தரைவழி தொலைபேசி இணைப்பு இல்லை.
மேலும், வெள்ளகாலங்களிலும், பருவமழை காலங்களிலும் மழை மேகங்களின் இடர்பாடுகளினால் அலைபேசி தொடர்பும் சரியாக கிடைக்கப்பெறாமல், தொடர்பு துண்டிக்கப்பட்டு அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர் வெளியேற்றம், மழையளவு போன்ற விபரங்களை உயர் அலுவலர்களுக்கும், தொடர்புடைய மாவட்ட கலெக்டருக்கும், பேரிடர் மேலாண்மை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்து தக்க ஆலோசனைகள் பெற்று வெள்ள மேலாண்மை மேற்கொள்ள சிரமம் ஏற்படுகிறது.
மேலும், முல்லை பெரியாறு பிரதான அணைக்கு படகில் 14 கீ.மீ தூரம் பயணம் செய்யும் போது ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுப் பகுதியில் செல்லும் போது அலைபேசி தொடர்பு கிடைப்பதில்லை. பாதுகாப்பு நோக்கில் தகவல் தொடர்பு சேவை மிகவும் இன்றியமையாதது ஆகும்.
நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஆகியோர் 5.11.2021 அன்று பெரியாறு அணையை பார்வையிட்டு வெள்ள மேலாண்மை பற்றி கேட்டறிந்த போது, மேற்கண்ட சிரமங்களை களையும் பொருட்டு செயற்கைகோள் அலைபேசி வழங்கிட முடிவு எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 6 எண்ணிக்கையிலான செயற்கைகோள் அலைபேசிகள் மற்றும் ஒரு வருட சேவைக் கட்டணம் ஆகியவற்றிற்காக ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முல்லைப் பெரியாறு அணையில் பணிபுரியும் தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், பெரியாறு அணை முகாம் மற்றும் தேக்கடி முகாம் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக செயற்கைகோள் அலைபேசிகளை வழங்கினார்.
இவ்வலைபேசிகள் வாயிலாக செயற்கைக்கோள் கோபுர சேவை இணைப்பு ஏதும் இல்லாமலேயே அடர்ந்த காட்டுப் பகுதியில் சேவை பெற இயலும். இதன்மூலம், பெரியாறு அணை மற்றும் பெரியாறு அணைக்குரிய படகு பயணிக்கும் பாதையில் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் எந்த நேரமும், எல்லா கால சூழ்நிலையிலும் உயர் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் அளிக்க இயலும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்த இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட அவர் கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரெனறு ஆய்வு மேற்கொண்டார். அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். பின்னர் அலுவலகம் முழுவதையும் அவர் பார்வையிட்டார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடைபெற்ற தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். இதில் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட நிலையில் கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 75 வயது முதியவர் சைக்கிளில் வந்து பங்கேற்க வந்தார்.
அதற்குள் கூட்டம் முடிந்து முதல்-அமைச்சர் புறப்பட்டு சென்றதால் அவரால் மு.க.ஸ்டாலினை சந்திக்க முடியவில்லை. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள மாமுண்டி கிராமத்தை சேர்ந்த அவரது பெயர் பிச்சமுத்து(வயது75). தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது அளவுகடந்த பற்று கொண்டவர். சுற்றுவட்டாரத்தில் எங்கு தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றாலும் சைக்கிளில் கொடியை கட்டிக்கொண்டு சென்றுவிடுவார்.
அதிலும் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் கூட்டம் என்றால் அதிகாலையிலேயே சென்று பங்கேற்பது வழக்கம். இந்த நிலையில்தான் நேற்று ஆத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்க அதிகாலையிலேயே புறப்பட்டு வந்தார். கிட்டத்தட்ட 100 கி.மீ.தூரத்துக்கு அவர் சைக்கிளிலேயே வந்தார். வெயில் அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே நின்று இளைப்பாறி வந்தார்.
இதனால் குறித்த நேரத்துக்குள் அவரால் பொதுக்கூட்டத்துக்கு செல்ல முடியவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பேசிவிட்டு சென்றபிறகே அவரால் கூட்டம் நடந்த இடத்துக்கு வர முடிந்தது. மு.க.ஸ்டாலினை பார்க்க முடியாத ஏமாற்றத்தில் அவர் கண்கலங்கியபடி சாலை ஓரம் நின்றார். முதல்-அமைச்சரிடம் கொடுப்பதற்காக ஒரு மனுவும் அவர் கையில் வைத்திருந்தார்.
மிகவும் ஏழ்மை நிலையில் வசித்துவரும் பிச்சமுத்துவுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணமாகி கணவர் கைவிடப்பட்ட நிலையில் பிச்சமுத்துவுடன் வசித்து வருகிறார். இன்னொரு மகள் திருமணமாகாத நிலையில் வீட்டிலேயே உள்ளார். பிச்சமுத்துவின் வீட்டில்யே உள்ளார். மகன் ஜெயப்பிரகாஷ் திருமணமாகி தனியாக வசித்துவருவதோடு பிச்சமுத்துவை புறக்கணித்து அடித்து துன்புறுத்தி வருகிறாராம்.
மகனுக்கு பிச்சமுத்து தனது இடங்களை தானமாக எழுதி கொடுத்தபிறகும் பெற்றோரை கவனிக்காமல் அடித்து துரத்துவதாகவும், இதுபற்றி போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் ஆதங்கத்துடன் கூறினார்.
எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது செட்டில்மெட் பத்திரத்தை ரத்து செய்யவேண்டியும், தனக்கு இருசக்கர வாகனம், நிதி உதவி வழங்கவேண்டும் என்று கேட்டு மனுவுடன் வந்ததாக கூறினார். பின்னர் தள்ளாத வயதிலும் சைக்கிள் மிதித்தபடி தனது மாமுண்டி கிராமத்துக்கு புறப்பட்டார். முதல்-அமைச்சரை பார்க்க 100 கி.மீ. தூரம் சைக்கிளிலேயே வந்த முதியவரின் செயல் மற்ற தி.மு.க. தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மணப்பாறையில் முருக்கு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு குடும்பத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்