search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்"

    • போலீசில் கணவர் புகார் அளித்ததால் உண்மை அம்பலம்
    • கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையத்தை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தார். ஆனால் இளம்பெண்ணுக்கு குழந்தைகள் இல்லை.

    இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இதனை அவரது கணவர் கண்டித்தார். இதனையடுத்து இளம்பெண் கள்ளக்காதல னுடன் ஓட்டம் பிடித்தார்.

    பின்னர் அவர் அந்த வாலிபரை விட்டு பிரிந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் மீண்டும் மற்றொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் செ ன்றார்.

    அவரையும் பிரிந்து மீண்டும் கணவருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூடலூரை சேர்ந்த உறவினர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் இளம்பெண் அடிக்கடி ஜாலியாக இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் உறவினருடன் ஓட்டம் பிடித்தார். வீட்டிற்கு வந்த இளம்பெண்ணின் கணவர் மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் மாயமான தனது மனைவியை கண்டு பிடித்து தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒரே ஆண்டில் 3-வது முறையாக உறவினருடன் இளம்பெண் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.

    • நாகேந்திரனிடம் 5 பாட்டில்களும், மேரியிடம் 18 பாட்டில்களும் மது பானம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
    • போலீசார் நாகேந்திரன் மற்றும் மேரி-யை கைது செய்து மது பாட்டில்களை பறி முதல் செய்தனர்.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தக்கலை கடைவிளை பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் (வயது 58), பாகோடு ஏலாகரை பகுதியைச் சேர்ந்த மேரி (70) ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் பிடித்து சோதனை செய்த போது நாகேந்திரனிடம் 5 பாட்டில்களும், மேரியிடம் 18 பாட்டில்களும் மது பானம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் நாகேந்திரன் மற்றும் மேரி-யை கைது செய்து மது பாட்டில்களை பறி முதல் செய்தனர்.

    கோவில் வளாகத்தை கழுவி சுத்தம் செய்தனர்

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழா 24-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடு கள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, பாட்டு கச்சேரி, பரதநாட்டியம், சமய உரை போன்ற பல் வேறு நிகழ்ச்சிகள் நடக்கின் றன.

    10-ம் திருவிழாவான 24-ந்தேதி அம்மன் பாணா சுரனை வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. 1-ம் திருவிழாவான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி நாகர்கோ வில் அருகே உள்ள இருளப்பபுரம் பிரசன்ன பார்வதி பசுபதீஸ்வரர் கோவில் பெண் சிவனடியார்கள் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் உழவாரப்பணி யில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள்அம்மன் கொலு விருக்கும் கொலுமண்டபம், 24 மணி நேரமும் அணையா விளக்கு எரிந்துகொண்டி ருக்கும் வாடா விளக்கு மண்டபம், கொடிமர பிரகாரம், மூலஸ்தான கருவறை முன்பு உள்ள மண்டபம், உள்பிரகாரம், வெளி பிரகாரம் மற்றும் அனைத்து சன்னதி பகுதி களிலும் இந்த உழவாரப்பணி நடந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் சிவனடி யார்கள் கோவில் முழுவதும் தண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்தனர். இந்த உழவாரப்பணி நடந்ததை தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வளாகம் முழுவதும் புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

    • 2 தரப்பினருக்கும் வாய்தகராறு முற்றியது
    • போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருவட்டார் :

    திருவட்டார் அருகே வடக்குவிளை, குட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் றோஸ்மேரி (வயது 63). அதே பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (42), ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவர்களுக்கிடையே வழிப்பாதை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று றோஸ் மேரி வீட்டில் இருக்கும்போது புஷ்பராஜ், ராசு (43), சுபாஷ் (35) ஆகியோர் வந்து அவதூறு பேசியதாக கூறப் படுகிறது. இதை றோஸ்மேரி தட்டிகேட்டதால் 2 தரப்பினருக்கும் வாய்தகராறு முற்றியது. உடனே புஷ்பராஜ், றோஸ்மேரியை பிடித்து கீழே தள்ளிவிட்டு தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த அவர் தக்கலை அரசு ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். றோஸ்மேரியின் கணவர் தட்டி கேட்கவே அவரை 3 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்த னர். றோஸ்மேரி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • திருமணம் ஆகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்
    • திருமணம் ஆகாத கள்ளக்காதலுடன் ஓட்டம்

    கோவை,

    ஆனைமலையை சேர்ந்த வர் 45 வயது இளம்பெண். இவர் அங்குள்ள ரெஸ்டாரண்டில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அவருடன் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்த திருமணமாகாத வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் அவரது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வாலிபரை அங்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று கணவரிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற இளம்பெண் தனது கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் தனது மனைவியை மீட்டு தரும்படி ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை தேடி வருகின்றனர்

    • ஸ்ரீரங்கத்தில் இளம்பெண் கடத்தல்
    • இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை

     திருச்சி  

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் கோகுலம் தெருபகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகள் ராதா வயது 26 இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றார் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை இதற்கிடையே ராதாவை அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் காதலித்து வந்த தகவல் கிடைத்தது ஆகவே அவர் ராதாவை கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது..

    இதுகுறித்து காந்தி ஸ்ரீரங்கம் போலீஸ் புகார் செய்தார போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார்.
    • தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கலிபோர்னியா:

    மீன் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என சொல்வார்கள். ஆனால் அதனை சாப்பிட்ட பெண் ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடி வருகிறார். அவரது பெயர் லாரா பராசாஸ் (வயது 40) அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டது. கை விரல்கள் கறுப்பாக மாறியது. பாதங்கள் மற்றும் கீழ் உதடு கறுப்பானது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனாலும் அவர் கோமா நிலைக்கு சென்றார். சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது. மேலும் கை, கால்களும் முற்றிலும் செயல் இழந்ததால் உயிருக்கு போராடி வருவதாக லாரா பராசாஸ் தோழி மெசினா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.லாரா கிட்டத்தட்ட தன் உயிரை இழந்துவிட்டார். அவருக்கு சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கடல் உணவுகளில் பொதுவாக கொடிய பாக்டீரியாக்கள் காணப்படும். இந்த உணவுகளை முறையாக தயார் செய்து சாப்பிடாவிட்டால் உடலுக்கு தொந்தரவு கொடுக்கும்.

    சந்தையில் இருந்து வாங்கி வந்த மீனை சரியாக வேக வைக்காமல் அப்படியே சாப்பிட்டதால் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு உப்புபாளையத்திலிருந்து வேப்பம்பாளையம் பகுதிக்கு சென்றார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்திரம் உயிரிழந்தார்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே உள்ள வேப்பம்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன் மகன் நவீன் (வயது 21) என்பவர் தனது தாய் சவுந்தரம் (45) என்பவரை தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு உப்புபாளையத்திலிருந்து வேப்பம்பாளையம் பகுதிக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

    இதில் தாயும் மகனும் ரோட்டில் விழுந்தனர். தாய் சவுந்திரத்திற்கு தலையில் பலத்த அடிபட்டு விட்டது. உடனே அந்த வழியாக வந்தவர்களின் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்திரம் உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • சுவிட்சை தொட்ட பொழுது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்து ள்ளார்.
    • வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தார்.

    கடலூர்:

    வடமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதுஅடுத்த 24 மணிநேரத்தில், மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் பலத்த இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்தது .கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், லால்பேட்டை, வேப்பூர், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    பலத்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் காலை நேரங்களில் கடும் வெயிலும் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு ெபாதுமக்கள் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    வானமாதேவி - 32.0, குப்பநத்தம் - 31.0,குறிஞ்சிப்பாடி - 30, வடக்குத்து - 30,அண்ணாமலைநகர் - 26.4,விருத்தாசலம் - 26.0, பரங்கிப்பேட்டை - 22.8, கடலூர் - 21,கொத்தவாச்சேரி - 21, பண்ருட்டி - 20, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 18, கலெக்டர் அலுவலகம் - 17.2, லக்கூர் - 15.4,. காட்டுமயிலூர் - 15,காட்டுமன்னார்கோவில் - 14.3, புவனகிரி - 14, மீ-மாத்தூர் - 14, சிதம்பரம் - 11, வேப்பூர் - 10,தொழுதூர் - 8.5, சேத்தியாதோப்பு - 8, லால்பேட்டை - 8, பெல்லாந்துறை - 6.2,கீழ்செருவாய் - 4. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 423.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை சின்னதுரை புகார் கொடுத்தார்.
    • குமரகுரு என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறியுள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது24) பி.காம் பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் பிற்பகல்3.30 மணிக்கு பண்ருட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். இரவு வரை வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காதால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை சின்னதுரை புகார் கொடுத்தார். புகாரில் குமரகுரு (28) என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறியுள்ளனர். இது குறித்துபண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.

    • திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்திற்கு ட்பட்ட மண்டலகோட்டை கிராமமான மேலத்தெருவைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் (வயது 50).

    இவரது மனைவி ஞானசகாய மேரி (வயது 45).

    இவர் சமையல் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவதன்று தனது மோட்டார்சைக்கிளில் ஞானசகாய மேரி பணிக்கு சென்றார்.

    பின்னர் வீடு திரும்பினார்.

    மதுக்கூர் அடுத்த மன்னார்குடி சாலை கண்ணாற்று பாலம் அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த ஞானசகாய மேரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்ஸில் இருந்த சக பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாலிபரை தாக்கினார்கள்.
    • பஸ்சில் நடந்த சம்பவங்களை அந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அந்த பெண் அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்தின் கடைசி நாட்களில் ஊருக்கு வருவது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவு வேலை முடிந்ததையடுத்து, இன்று அதிகாலை ஊருக்கு புறப்பட்டார். திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த கேரளா அரசு பஸ்ஸில் பயணம் செய்தார். இளம்பெண்ணின் பின்னால் இருந்த இருக்கையில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

    அவர் பஸ்புறப்பட்ட சிறிது நேரத்திலேயே முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண் என்ஜினியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த இளம்பெண், வாலிபரை எச்சரித்தார். இதனால் உஷாரான அந்த வாலிபர் சிறிது நேரம் எதுவும் செய்யாமல் இருந்தார்.

    பின்பு மீண்டும் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கூச்சலிட்டதுடன், அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். அப்போது பஸ்ஸில் இருந்த சக பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாலிபரை தாக்கினார்கள்.

    இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் மார்த்தாண்டத்தில் பஸ்சை விட்டு இறங்க முயன்றார். ஆனால் அவரை பஸ்சை விட்டு இறங்கவிடாமல் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். பஸ்சில் நடந்த சம்பவங்களை அந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    அவர்கள் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்ததும், இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட வாலிபரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    அப்போது அவர் மதுரை பகுதியை சேர்ந்தவர் என்பதும், என்ஜினீயராக இருப்பதாகவும் கூறினார். மேலும் அவர் நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு ஊருக்கு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    ஓடும் பஸ்ஸில் பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு சக பயணிகள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×