search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விபத்தில் பெண் பலி
    X

    சாலை விபத்தில் பெண் பலி

    • திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்திற்கு ட்பட்ட மண்டலகோட்டை கிராமமான மேலத்தெருவைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் (வயது 50).

    இவரது மனைவி ஞானசகாய மேரி (வயது 45).

    இவர் சமையல் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவதன்று தனது மோட்டார்சைக்கிளில் ஞானசகாய மேரி பணிக்கு சென்றார்.

    பின்னர் வீடு திரும்பினார்.

    மதுக்கூர் அடுத்த மன்னார்குடி சாலை கண்ணாற்று பாலம் அருகே சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த ஞானசகாய மேரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×