search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபிஷேகம்"

    • மஞ்ச மாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அருள் பெறுகின்றனர்.
    • சிலர் ரவிக்கைத்துண்டு வைத்தும் வெடி வழிபாடு செய்தும் வணங்குவதுண்டு.

    மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலில் இருந்து லீலா என்ற

    தேவதை போன்ற அழகிய பெண் வெளிவந்து அய்யப்பனை வணங்கி

    "நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன்.

    என் சாபம் நீங்குவதற்குக் காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வேண்டும்.

    என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்" என வேண்டினாள்.

    மணிகண்டனாகிய அய்யப்பன் அவளிடம் "நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளேன்.

    எனவே உன்னை ஏற்க இயலாது" என்று கூறி அவளது வேண்டுகோளை நிராகரித்தார்.

    அதோடு அந்தப் பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்படும் கோவிலில்

    மாளிகைப்புறத்தம்மா என்ற பெயரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதன்படி பக்தர்கள் மாளிகைப் புறத்தம்மன் எனக் கூறப்படும் மஞ்ச மாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும்,

    தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அருள் பெறுகின்றனர்.

    சிலர் ரவிக்கைத்துண்டு வைத்தும் வெடி வழிபாடு செய்தும் வணங்குவதுண்டு.

    திருமணம் கை கூடுவதற்காக சிலர் இரண்டு ஜாக்கெட் துண்டு கொடுத்து ஒன்றைத்திரும்ப வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர்.

    • கடுத்த சுவாமிக்கு மாளிகைப் புறத்தம்மை கோவிலில் பிரதிஷ்டை உண்டு.
    • கருப்ப சுவாமிக்கு முந்திரி, திராட்சை ஆகியவை படைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்யலாம்.

    அய்யப்பனுடைய படையில் சிறந்த சேனாதிபதியாகவும், பிரதான வீரராகவும் கடுத்த சுவாமி திகழ்ந்தார் என்று சொல்வார்கள்.

    மேலும் பந்தள ராஜாவிற்காக யுத்தங்களில் வென்று வாகை சூடியதாக கடுத்தசுவாமி பற்றி கூறப்படுகிறது.

    கடுத்த சுவாமிக்கு மாளிகைப் புறத்தம்மை கோவிலில் பிரதிஷ்டை உண்டு.

    இவருக்குப் பொரி, அவல், மிளகு,பழம் நைவேத்தியமாக படைக்கிறார்கள்.

    பதினெட்டுப் படிக்குக் கீழேயும் இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

    கடுத்த சுவாமிக்கு சிலர் சுருட்டும் காணிக்கையாக வைக்கின்றனர்.

    பதினெட்டாம் படிக்குத் தொட்டது போல் வடக்கு பக்கத்தில் கருப்பசாமி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

    கருப்ப சுவாமிக்கு முந்திரி, திராட்சை ஆகியவை படைத்து கற்பூரம் காட்டி வழிபாடு செய்யலாம்.

    • மதிய பூஜைக்கு பொதுவாக இடித்து பிழிந்த பாயாசமே நைவேத்தியம்.
    • உதயாஸ்தமன பூஜை வேளையில் நண்பகலுக்கு முன்பு 15 பூஜைகள் நடைபெறும்.

    அதிகாலை பூஜைக்கு அஷ்டாபிஷேகம், விபூதி, பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர்,தூய நீர்

    போன்ற எட்டு பொருட்களால் அபிஷேகம் செய்து திருமதுரம்

    (பழம் மற்றும் தேன், சர்க்கரை சேர்த்த கலவை) நைவேத்தியம் செய்வர்.

    பிற்பாடு நெய் அபிஷேகம்.

    மதிய பூஜைக்கு பொதுவாக இடித்து பிழிந்த பாயாசமே நைவேத்தியம்.

    (இடித்துப் பிழிந்தெடுத்த தேங்காய்ப்பாலுடன் கதலிப்பழம், சர்க்கரை, சம்பா பச்சரிசி, சுக்கு, நெய் போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படுவது. மகா நைவேத்தியம் எனப்படும்.)

    உதயாஸ்தமன பூஜை வேளையில் நண்பகலுக்கு முன்பு 15 பூஜைகள் நடைபெறும்.

    அவை அனைத்திலுமே இடித்துப் பிழிந்த பாயாசமே நைவேத்தியமாகப் படைக்கப்படும்.

    இருபத்தியைந்து கலசங்களுடன் மதிய பூஜை நடைபெறும்.

    • கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • ஏரியில் நடுவில் அமைந்துள்ள தடாக நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகே ஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது.

    பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.

    இதைப்போல வேதாரண்யம் வேதமிருத ஏரியில் நடுவில் அமைந்துள்ள தடாக நந்திகேஸ்வரருக்கும், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோயில் மற்றும் ருத்ரசோ மநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    ஆங்காங்கே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • திருக்காட்டுபள்ளி காவிரி ஆற்றின் படித்துறையில் மலர்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பூதலூர்:

    திருக்காட்டுபள்ளி காவிரி ஆற்றின் படித்துறையில் காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    காவிரி நதியை தூய்மை யாக வைத்து கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற யாத்திரையில் கொண்டு வரப்பட்ட காவேரி அன்னை சிலையை திருக்காட்டு பள்ளி காவிரி ஆற்றின் படித்துறையில் வைத்து மலர்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பி க்கப்பட்டது.

    பூஜைகளை திருக்காட்டு பள்ளி ராஜராஜேஸ்வரி சாமிகள், கோவில் பத்து தங்கமணி சாமிகள் செய்தனர்.நிகழ்ச்சியில் வளப்பகுடி சுந்தரேசன், திருக்காட்டுபள்ளி திருஞானசம்பந்தம், கமலசேகர், பார்த்திபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது.
    • அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த தேவூரில் தேவதுர்கை அம்மன் கோவில் உள்ளது.

    நவராத்திரியை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக உலக அமைதி வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் இருந்து விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் புறப்பட்ட பால்குட ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

    அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்க ண்ணியை அடுத்த பிரதாபரா மபுரம் வடக்கு பாலத்தடியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீவல்லவ கணபதி கோவிலில் நவராத்திரி விழாவை யொட்டி தினந்தோறும் பல்வேறு அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி 5 நாள் நிகழ்ச்சியான நேற்று மஹா லெட்சுமி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். முன்னதாக பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தயிர் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மஹாதீ பாரதனை காண்பிக்க ப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • நவராத்திரி விழா கடந்த 13-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.
    • அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள தேவூரில் தேவதுர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் நவராத்திரி பெருவிழா கடந்த 13ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லலிதா சகஸ்ர பாராயணம் நடைபெற்றது.

    முன்னதாக தேவதுர்க்கை அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஒரு லிட்டர் 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா சண்டி ஹோமம் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது.

    • நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம்
    • புரட்டாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான், பரமேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதேபோல் பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பர நாதருக்கு புரட்டாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப் பட்டது.

    பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர், உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமா னுக்கும், நந்திகேஸ்வரருக்கு புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை களும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    • அமிர்த ராகுபகவான் தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
    • ராகு பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பொன்னாகவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வ ரமுடையார் கோவில் உள்ளது.

    இக்கோயில் ஆதி ராகு ஸ்தலமாக விளங்குகிறது.

    இங்கு அமிர்த ராகுபகவான் தனி சன்னதியில் காட்சி தருகிறார்.

    ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடை ந்ததை யொட்டி அமிர்த ராகுபகவா னுக்கு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.

    தொ டர்ந்து இராகுபகவானுக்கு 21-வகையான திரவியபொரு ட்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடைபெற்றது.

    பின்னர் பெயர்ச்சி மகாதீபா ராதனை நடந்தது. இதில்நகர வர்த்த சங்க துணைத் தலைவர் கோவி. நடராஜன் நகை வணிகர் சங்கத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    பூஜை களை முத்துசிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சா ரியார்கள் செய்திருந்தனர்.

    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை

    அதிகாரிகள் மற்றும் கோயில் கணக்கர் ராஜி ஆகியோர் செய்திருந்தனர்.

    • நாளை மாலை 3.40 மணிக்கு கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார்.
    • கேது பகவானுக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கீழப்பெரு ம்பள்ளம் நாகநாதசுவாமி கோவிலில் கேது பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

    கேது பெயர்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.40 மணிக்கு கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    இந்நிலையில் இந்த கோவிலில் கேது பகவான் பரிகார தலத்தில் கேது பகவானுக்கு மஞ்சள், சந்தனம் ,திரவிய பொடி, விபூதி, பால்,பன்னீர் பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து கேது பகவானுக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    திரளான பக்தர்கள் வழிபாடு செய்து வருகி ன்றனர். கேது பெயர்ச்சியை முன்னிட்டு கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசி க்கிறார்.

    இதனைத் தொடர்ந்து பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளான ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ஆகும்.

    கேது பகவானுக்கு எமகண்ட நேரத்தில் பரிகாரம் செய்தால் சிறப்பு ஆகும்.

    • கோம்புப்பாளையம் சீனிவாசபெருமாள் கோவிலில்சிறப்பு அபிஷேக ஆராதனை
    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம்

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசி இலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு துளசிஇலை, தீர்த்தம், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×