search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவிலில் ராகுபெயர்ச்சி விழா
    X

    ராகு பகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோவிலில் ராகுபெயர்ச்சி விழா

    • அமிர்த ராகுபகவான் தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
    • ராகு பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பொன்னாகவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வ ரமுடையார் கோவில் உள்ளது.

    இக்கோயில் ஆதி ராகு ஸ்தலமாக விளங்குகிறது.

    இங்கு அமிர்த ராகுபகவான் தனி சன்னதியில் காட்சி தருகிறார்.

    ராகு பகவான் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடை ந்ததை யொட்டி அமிர்த ராகுபகவா னுக்கு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.

    தொ டர்ந்து இராகுபகவானுக்கு 21-வகையான திரவியபொரு ட்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடைபெற்றது.

    பின்னர் பெயர்ச்சி மகாதீபா ராதனை நடந்தது. இதில்நகர வர்த்த சங்க துணைத் தலைவர் கோவி. நடராஜன் நகை வணிகர் சங்கத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    பூஜை களை முத்துசிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சா ரியார்கள் செய்திருந்தனர்.

    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை

    அதிகாரிகள் மற்றும் கோயில் கணக்கர் ராஜி ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×