search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அய்யப்பனை கணவராக வேண்டிய மஞ்சமாதா வரலாறு
    X

    அய்யப்பனை கணவராக வேண்டிய மஞ்சமாதா வரலாறு

    • மஞ்ச மாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும், தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அருள் பெறுகின்றனர்.
    • சிலர் ரவிக்கைத்துண்டு வைத்தும் வெடி வழிபாடு செய்தும் வணங்குவதுண்டு.

    மகிஷி என்ற அரக்கியை மணிகண்டன் காட்டில் வதம் செய்த உடனே அந்த மகிஷியின் உடலில் இருந்து லீலா என்ற

    தேவதை போன்ற அழகிய பெண் வெளிவந்து அய்யப்பனை வணங்கி

    "நான் உங்கள் மூலம் சாப விமோசனம் அடைந்தேன்.

    என் சாபம் நீங்குவதற்குக் காரணமாக இருந்த நீங்களே என் கணவராக வேண்டும்.

    என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்" என வேண்டினாள்.

    மணிகண்டனாகிய அய்யப்பன் அவளிடம் "நான் இந்த ஜென்மம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளேன்.

    எனவே உன்னை ஏற்க இயலாது" என்று கூறி அவளது வேண்டுகோளை நிராகரித்தார்.

    அதோடு அந்தப் பெண்மணியை சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்படும் கோவிலில்

    மாளிகைப்புறத்தம்மா என்ற பெயரில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அதன்படி பக்தர்கள் மாளிகைப் புறத்தம்மன் எனக் கூறப்படும் மஞ்ச மாதாவிற்கு மஞ்சள் பொடி தூவியும்,

    தேங்காயை உருட்டியும் வழிபாடு செய்து அருள் பெறுகின்றனர்.

    சிலர் ரவிக்கைத்துண்டு வைத்தும் வெடி வழிபாடு செய்தும் வணங்குவதுண்டு.

    திருமணம் கை கூடுவதற்காக சிலர் இரண்டு ஜாக்கெட் துண்டு கொடுத்து ஒன்றைத்திரும்ப வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர்.

    Next Story
    ×