search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "t20 cricket"

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இவர் விளம்பரதாரர் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி நான்கு போட்டிகளில் இரு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகளை வீழ்த்தியதன் மூலம் ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது.

    இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் அணிக்கு விளம்பரதாரர் ஆக தலிபான் மறுத்துவிட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் அணியின் விளம்பரதாரர் பொறுப்பை அந்த அணியின் கேப்டன் மொகமது நபி ஏற்று இருப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     மொகமது நபி

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், செடிகி க்ருப் - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கான விளம்பரதாரர் என தெரியவந்துள்ளது. ஆப்கன் அணி விளம்பரதாரர் பற்றிய கேள்விக்கு வைரல் தகவல்களில் உண்மையில்லை என மொகமது நபி தெரிவித்தார். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளம்பரதாரர் பற்றி வைரலான தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இளைஞர் ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
     

    பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான தொடர் தோல்வி காரணமாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இந்திய அணி உள்ளது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மீது ஏமாற்றத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தொலைக்காட்சி பெட்டியை தூக்கி வீசியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 17 வயதான இளைஞர் தனது வீட்டில் இருந்த 4 டிவிக்களை தூக்கி வீசியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், புகைப்படம் 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வியுற்றதை தொடர்ந்து இளைஞர் தொலைக்காட்சியை தூக்கி வீசிய போது எடுக்கப்பட்டது ஆகும். 

    அந்த வகையில் வைரல் புகைப்படத்திற்கும் சமீபத்திய டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கும் எந்த தொடர்பும் இல்லை என உறுதியாகிவிட்டது.
    இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி, இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது. #INDWvENGW
    இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் வியாட் 24 ரன்களும், டாமி பியூமோன்ட் 29 விக்கெட் கீப்பர் எமி எல்லன் ஜோன்ஸ் 26 ரன்களும் எடுத்தனர்.

    அதன்பின், 120 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 58 ரன் எடுத்தார். மிதாலி ராஜ் 30 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்திய அணி ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இறுதியில், இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் 3- 0 என கைப்பற்றியது.
    #INDWvENGW
    பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், மேக்ஸ்வெல்லின் அதிரடியான சதத்தால் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. #INDvAUS
    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றுள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.

    இருவரும் அடித்து விளையாடியதால் இந்தியா பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது.

    கேஎல் ராகுல் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 47 ரன்கள் சேர்த்து அவுட்டானார். தவான் 24 பந்தில் 14 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ரிஷப் பந்த் 1 ரன் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்தியா 11 ஓவரில் 74 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடனும், அதிரடியாகவும் ஆடியது. இதனால் ரன்கள் உயர்ந்தன. இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 50 பந்தில் 100 ரன்கள் குவித்தது. டோனி 23 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்து வெளியேறினார். விராட் கோலி அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.


     
    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. விராட் கோலி 38 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 72 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 3 பந்தில் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆர்கி ஷாக்கும், மார்கஸ் ஸ்டோனிசும் இறங்கினர்.

    ஸ்டோனிஸ் 7 ரன்னிலும், ஆரோன் பின்ச் 8 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து இறங்கிய அனுபவ வீரர் மேக்ஸ்வெல் ஷாக்குடன் இணைந்தார். இருவரும் பவுண்டரி, சிக்சராக விளாசினர்.

    இதனால், முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது. 73 ரன்கள் சேர்த்த நிலையில் ஷாக் 40 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஹேண்ட்ஸ்கோம்ப் மேக்ஸ்வெல்லுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். மேக்ஸ்வெல் கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சர்களுக்கு பறக்கவிட்டார். சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் சதமடித்து அசத்தினார். அவர் 113 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. #INDvAUS
    20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றார். #SureshRaina #T20Cricket
    புதுடெல்லி:

    சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ள உத்தரபிரதேசம்-புதுச்சேரி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த உத்தரபிரதேச அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய புதுச்சேரி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 102 ரன்களே எடுத்தது. இதனால் உத்தரபிரதேச அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடிய இந்திய சீனியர் வீரர் சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 11 ரன்னை எட்டிய போது சுரேஷ் ரெய்னா 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் (சர்வதேச, உள்ளூர் போட்டிகள் எல்லாம் சேர்த்து) 8 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 300-வது 20 ஓவர் போட்டியில் ஆடிய சுரேஷ் ரெய்னா 8,001 ரன்கள் குவித்துள்ளார். உலக அளவில் 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னா 6-வது இடத்தில் உள்ளார்.

    வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 12,298 ரன்னும் (369 போட்டி), நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்கல்லம் 9,922 ரன்னும் (370 போட்டி), வெஸ்ட்இண்டீஸ் வீரர் பொல்லார்ட் 8,838 ரன்னும் (451 போட்டி), பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 8,603 ரன்னும் (340 போட்டி), ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 8,111 ரன்னும் (259 போட்டி) எடுத்து முறையே முதல் 5 இடங்களில் இருக்கிறார்கள். இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 251 போட்டிகளில் விளையாடி 7,883 ரன்கள் குவித்து 7-வது இடத்தில் உள்ளார்.

    டெல்லியில் நடந்த சர்வீசஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய பரோடா அணி 18.2 ஓவர்களில் 75 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய சர்வீசஸ் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சூரத்தில் நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-குஜராத் அணிகள் மோதின. முதலில் ஆடிய தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சதுர்வேத் 34 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 33 ரன்னும், ஜெகதீசன் 29 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். கேப்டன் ஆர்.அஸ்வின் 1 ரன்னில் ‘அவுட்’ ஆனார். பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி 19.5 ஓவர்களில் 124 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் தமிழக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. 3-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

    இந்தூரில் நடந்த கோவா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காயத்தில் இருந்து மீண்டு வந்த மும்பை வீரர் பிரித்வி ஷா 47 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சூரத்தில் நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தானுக்காக ஆடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 20 ஓவர் போட்டியில் அவர் 5 விக்கெட்டுகள் சாய்த்தது இதுவே முதல்முறையாகும்.
    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில், பரபரப்பான கட்டத்தில் இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. #INDvAUS
    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.

    ரோகித் சர்மா 5 ரன்னிலும், விராட் கோலி 24 ரன்னிலும், ரிஷப் பந்த் 3 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் ஆடிய லோகேஷ் ராகுல் அரை சதமடித்து அவுட்டானார்.

    மகேந்திர சிங் தோனி ஓரளவு தாக்குப்பிடித்து 29 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் கவுல்டர் நைல் 3 விக்கெட் வீழ்த்தினார்.



    இதையடுத்து, 127 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா களமிறங்கியது. அந்த அணி 5 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.

    அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல், தொடக்க ஆட்டக்காரரான ஆர்கி ஷாட்டுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் 84 ரன்கள் சேர்த்தனர். ஆர்கி ஷாட் 37 ரன்னில் அவுட்டானார். கிளென் மேக்ஸ்வெல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் வெளியேறினார்.

    ஆஸ்திரேலிய அணி இடையில் விக்கெட்டுகளை இழந்து திணறினாலும், பரபரப்பான கட்டத்தில் பொறுப்புடன் ஆடி வெற்றி பெற்றது.

    அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டி20 தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. #INDvAUS
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், லோகேஷ் ராகுலின் அரை சதத்தால் இந்திய அணி 127 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #INDvAUS
    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.

    ரோகித் சர்மா 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து கேப்டன் விராட் கோலி இறங்கினார். ராகுலுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இருவரும் இணைந்து 55 ரன்கள் சேர்த்தனர். அணியின் எண்ணிக்கை 69 ஆக இருக்கும் போது விராட் கோலி 24 ரன்னில் வெளியேறினார்.

    அவரை தொடர்ந்து இறங்கிய ரிஷப் பந்த் 3 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் முதல் 10 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய லோகேஷ் ராகுல் அரை சதமடித்து அவுட்டானார். அடுத்து வந்த வீரர்களில் தோனி மட்டும் தாக்குப்பிடித்தார். அவர் 29 ரன்னுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 127 ரன்களை இலக்காக கொண்டு ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. #INDvAUS
    இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கி உள்ளனர். #INDvAUS
    இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. 

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் விளையாடி வருகின்றனர். #INDvAUS
    ஐபிஎல் தொடக்க விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான தொகை புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது கடந்த 14-ந்தேதி தற்கொலைப்படை பயங்கரவாதி தாக்குதல் நடத்தினான். புல்வாமா பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

    இதனால் இங்கிலாந்தில் மே மாதம் தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பாகிஸ்தானை உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று பிசிசிஐ ஐசிசியிடம் வலியுத்த இருக்கிறது.

    இந்நிலையில் பாகிஸ்தானுடன் உடனான லீக் ஆட்டத்தை புறக்கணிப்பது, ஒருவேளை நாக்அவுட் சுற்றில் மோத வேண்டியிருந்தால் என்ன செய்தவது என்பது குறித்து முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்து நிர்வாகக்குழு இன்று ஆலோசனை நடத்தியது.

    இந்த ஆலோசனைக் கூட்டம் வினோத் ராய் தலைமையில் நடைபெற்றது. அப்போது மார்ச் 23-ந்தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் தொடக்க விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்படும் என்றும், அதற்காக ஒதுக்கப்படும் தொகை வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
    சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில், மும்பை அணியின் முன்னணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர், 55 பந்துகளில் 147 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். #SyedMushtaqAliTrophy #ShreyasIyer
    இந்தூர்:

    சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்று போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை-சிக்கிம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரகானே, முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்தது.

    ஸ்ரேயாஸ் அய்யர் 55 பந்துகளை எதிர்கொண்டு 15 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 147 ரன்கள் விளாசினார். இதன் மூலம் உள்ளூர் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.  இதற்கு முன் ரிஷப் பந்த், ஐபிஎல் போட்டியில் கடந்த ஆண்டு, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 128 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

    இதுதவிர டி20 போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் அய்யர் (15 சிக்சர்கள்) எட்டினார். இதற்கு முன் முரளி விஜய் ஒரு இன்னிங்சில் 11 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. #SyedMushtaqAliTrophy #ShreyasIyer
    சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்றில் சவுராஷ்டிரா அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ரயில்வேஸ் அணி. புஜாராவின் அதிரடி சதம் வீணானது. #SyedMushtaqAliTrophy #Pujara
    இந்தூர்:

    சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்று போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இன்று தொடங்கியது.

    சி பிரிவில் இடம் பிடித்துள்ள சவுராஷ்டிரா மற்றும் ரயில்வேஸ் அணிகள் இந்தூரில் மோதின. டாஸ் வென்ற ரயில்வேஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து சவுராஷ்டிரா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹவிக் தேசாய், புஜாராவும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். தேசாய் 34 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ராபின் உத்தப்பா 46 ரன்னில் வெளியேறினார்.

    மறுபுறம், டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரராக கருதப்பட்ட புஜாரா அதிரடியாக ஆடி 60 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இது டி20 போட்டியில் புஜாராவின் முதல் சதமாகும். இறுதியில், சவுராஷ்டிரா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 188 ரன்களை எடுத்தது.

    தொடர்ந்து களமிறங்கிய ரயில்வேஸ் அணியில் மிருணாள் தேவ்தார் 49 ரன்னும், பிரதம் சிங் 40 ரன்னும் எடுத்தனர். இறுதிவரை போராடிய அபினவ் தீக்சித் 37 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. புஜாராவின் அதிரடி சதம் வீணானது. #SyedMushtaqAliTrophy #Pujara
    நியூலாந்து பெண்கள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய பெண்கள் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக தனதாக்கியது. #NZvIND #WomenCricket
    ஹாமில்டன்:

    இந்தியா - நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில், முதல் 2 ஆட்டங்களில் இடம் பெறாத இந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சோபி டேவின் 72 ரன்கள் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 86 ரன்கள் (62 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசிய போதிலும், மற்றவர்களின் பேட்டிங் குறிப்பிடும்படி இல்லை. கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் காஸ்பெரேக் கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரில் மிதாலி-தீப்தி ஷர்மா கூட்டணியால் 2 பவுண்டரி உள்பட 13 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி கண்டது. இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. மிதாலி ராஜ் 24 ரன்களுடனும் (20 பந்து, 3 பவுண்டரி), தீப்தி ஷர்மா 21 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அரைசதத்துடன் 2 விக்கெட் வீழ்த்திய நியூசிலாந்து வீராங்கனை சோபி டேவின் ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக தனதாக்கியது.



    தோல்விக்கு பிறகு இந்திய வீராங்கனை மந்தனா கூறுகையில், ‘எங்களது வீராங்கனைகள் நன்றாக போராடியதாகவே நினைக்கிறேன். இந்த தொடரை திரும்பி பார்த்தால் 70, 80 சதவீதம் வெற்றி வாய்ப்பில் இருந்தே தோற்று இருக்கிறோம். பேட்டிங்கில் இந்த குறைபாட்டை நாங்கள் வெகு சீக்கிரமாக சரி செய்ய வேண்டும். யாராவது ஒரு வீராங்கனை 20 ஓவர் முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டியது அவசியமாகும். இன்றைய ஆட்டத்தை நான் வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்று விரும்பினேன். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை’ என்றார்.
    ×