search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "third match"

    இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி, இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது. #INDWvENGW
    இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் வியாட் 24 ரன்களும், டாமி பியூமோன்ட் 29 விக்கெட் கீப்பர் எமி எல்லன் ஜோன்ஸ் 26 ரன்களும் எடுத்தனர்.

    அதன்பின், 120 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 58 ரன் எடுத்தார். மிதாலி ராஜ் 30 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்திய அணி ஒரு ரன் மட்டுமே எடுத்தது. இறுதியில், இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் 3- 0 என கைப்பற்றியது.
    #INDWvENGW
    ஹேமில்டனில் நடைபெற்று வரும் 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் வந்தது.



    அணியின் எண்ணிக்கை 80 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். செய்பெர்ட் 25 பந்தில் 43 ரன் எடுத்து அவுட்டானார்.

    அதிரடியாக ஆடிய முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 30 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது. மிச்செல் 19 ரன்னுடனும், டெய்லர் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இதனால் இந்தியாவிற்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #NZvIND
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. #WIvENG
    இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி செயிண்ட் லுசியா நகரில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸ், ஜென்னிங்ஸ் ஆகியோர் இறங்கினர். ஜென்னிங்ஸ் 8 ரன்னிலும், ரோரி பர்ன்ஸ் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய டென்லி 20 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 15 ரன்னிலும் அவுட்டாகினர். இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து தத்தளித்து. 



    தொடர்ந்து இறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் அரை சதமடித்தனர்.

    முதல் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 67 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமோ பால் 2 விக்கெட்டும், கேப்ரியல், ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். #WIvENG
    சிட்னியில் நடைபெற்ற கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, தவான் அதிரடியால் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. #AUSvIND #ViratKolhi
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    ஆரோன் பிஞ்ச, டி ஆர்கி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சிறப்பாக ஆடிய இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். ஆரோன் பிஞ்ச் 28 ரன்னிலும், ஆர்கி ஷார்ட் 33 ரன்னிலும் வெளியேறினர். மேக்ஸ்வெல் 13 ரன்னிலும், பென் மெக்டெர்மோட் டக் அவுட்டாகி வெளியேறினர்.

    கடைசி கட்டத்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், கவுல்டர்-நைல் அதிரடியாக ஆடினர். இதனால், ஆஸ்திரேலியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. ஸ்டாய்னிஸ் 25 ரன்னுடனும், நாதன் கவுல்டர் நைல் 13 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

    இந்திய அணி சார்பில் குருணால் பாண்டியா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளுக்கு விரட்டினர். இதனால் இந்த ஜோடி அரை சதத்தை கடந்தது.

    அணியின் எண்ணிக்கை 67 ஆக இருக்கும்போது ஷிகர் தவான் 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து ரோகித் சர்மாவும் 23 ரன்களில் வெளியேறினார்.



    அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடினார். ஆனாலும் லோகேஷ் ராகுல் 14 ரன்னிலும், ரிஷப் பந்த் டக் அவுட்டிலும் வெளியேற இந்தியாவுக்கு நெருக்கடி ஆரம்பித்தது.

    அடுத்து இறங்கிய தினேஷ் கார்த்திக் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய விராட் கோலி 34 பந்தில் அரை சதம் அடித்தார். இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றி மூலம் டி 20 தொடரை இந்தியா 1 - 1 என சமன் செய்தது. #AUSvIND #ViratKolhi
    ×